இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 23 செப்டம்பர், 2023

செப்டம்பர் 24 : பதிலுரைப் பாடல்திபா 145: 2-3. 8-9. 17-18 (பல்லவி: 18a)பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.

செப்டம்பர் 24 :  பதிலுரைப் பாடல்

திபா 145: 2-3. 8-9. 17-18 (பல்லவி: 18a)

பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
2
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி

8
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

செப்டம்பர் 24 : முதல் வாசகம்என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 6-9

செப்டம்பர் 24 :  முதல் வாசகம்

என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 6-9
ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர்அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.

என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 24th : Gospel Why be envious because I am generous?A reading from the Holy Gospel according to St.Matthew 20:1-16

September 24th :  Gospel 

Why be envious because I am generous?

A reading from the Holy Gospel according to St.Matthew 20:1-16 
Jesus said to his disciples: ‘The kingdom of heaven is like a landowner going out at daybreak to hire workers for his vineyard. He made an agreement with the workers for one denarius a day, and sent them to his vineyard. Going out at about the third hour he saw others standing idle in the market place and said to them, “You go to my vineyard too and I will give you a fair wage.” So they went. At about the sixth hour and again at about the ninth hour, he went out and did the same. Then at about the eleventh hour he went out and found more men standing round, and he said to them, “Why have you been standing here idle all day?” “Because no one has hired us” they answered. He said to them, “You go into my vineyard too.” In the evening, the owner of the vineyard said to his bailiff, “Call the workers and pay them their wages, starting with the last arrivals and ending with the first.” So those who were hired at about the eleventh hour came forward and received one denarius each. When the first came, they expected to get more, but they too received one denarius each. They took it, but grumbled at the landowner. “The men who came last” they said “have done only one hour, and you have treated them the same as us, though we have done a heavy day’s work in all the heat.” He answered one of them and said, “My friend, I am not being unjust to you; did we not agree on one denarius? Take your earnings and go. I choose to pay the last comer as much as I pay you. Have I no right to do what I like with my own? Why be envious because I am generous?” Thus the last will be first, and the first, last.’

The Word of the Lord.

September 24th : Second reading Life to me is Christ; but death would bring me morePhilippians 1:20-24,27

September 24th :  Second reading 

Life to me is Christ; but death would bring me more

Philippians 1:20-24,27
Christ will be glorified in my body, whether by my life or by my death. Life to me, of course, is Christ, but then death would bring me something more; but then again, if living in this body means doing work which is having good results – I do not know what I should choose. I am caught in this dilemma: I want to be gone and be with Christ, which would be very much the better, but for me to stay alive in this body is a more urgent need for your sake.
  Avoid anything in your everyday lives that would be unworthy of the gospel of Christ.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Lk19:38,2:14

Alleluia, alleluia!

Blessings on the King who comes,
in the name of the Lord!
Peace in heaven
and glory in the highest heavens!
Alleluia!

September 24th : Responsorial PsalmPsalm 144(145):2-3,8-9,17-18 The Lord is close to all who call him.

September 24th :  Responsorial Psalm

Psalm 144(145):2-3,8-9,17-18 

The Lord is close to all who call him.
I will bless you day after day
  and praise your name for ever.
The Lord is great, highly to be praised,
  his greatness cannot be measured.

The Lord is close to all who call him.

The Lord is kind and full of compassion,
  slow to anger, abounding in love.
How good is the Lord to all,
  compassionate to all his creatures.

The Lord is close to all who call him.

The Lord is just in all his ways
  and loving in all his deeds.
He is close to all who call him,
  who call on him from their hearts.

The Lord is close to all who call him.

September 24th : First reading My thoughts are not your thoughtsA reading from the book of Isaiah 55: 6-9

September 24th :  First reading 

My thoughts are not your thoughts

A reading from the book of Isaiah 55: 6-9 
Seek the Lord while he is still to be found,
call to him while he is still near.
Let the wicked man abandon his way,
the evil man his thoughts.
Let him turn back to the Lord who will take pity on him,
to our God who is rich in forgiving;
for my thoughts are not your thoughts,
my ways not your ways – it is the Lord who speaks.
Yes, the heavens are as high above earth
as my ways are above your ways,
my thoughts above your thoughts.

The Word of the Lord.

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

செப்டம்பர் 23 : நற்செய்தி வாசகம்நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15

செப்டம்பர் 23 :  நற்செய்தி வாசகம்

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15
அக்காலத்தில்

பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார்.

இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.’

இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள். முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 23 : பதிலுரைப் பாடல்திபா 100: 1-2. 3-4. 5 (பல்லவி: 2b)பல்லவி: மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்.

செப்டம்பர் 23 :  பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3-4. 5 (பல்லவி: 2b)

பல்லவி: மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்.
1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்.
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! - பல்லவி

5
ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா! 

சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

செப்டம்பர் 23 : முதல் வாசகம்இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா.திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13-16

செப்டம்பர் 23 :  முதல் வாசகம்

இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13-16
அன்பிற்குரியவரே,

அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின் முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 23rd : Gospel The parable of the sowerA reading from the Holy Gospel according to St.Luke 8:4-15

September 23rd :  Gospel 

The parable of the sower

A reading from the Holy Gospel according to St.Luke 8:4-15 
With a large crowd gathering and people from every town finding their way to him, Jesus used this parable:
  ‘A sower went out to sow his seed. As he sowed, some fell on the edge of the path and was trampled on; and the birds of the air ate it up. Some seed fell on rock, and when it came up it withered away, having no moisture. Some seed fell amongst thorns and the thorns grew with it and choked it. And some seed fell into rich soil and grew and produced its crop a hundredfold.’ Saying this he cried, ‘Listen, anyone who has ears to hear!’
  His disciples asked him what this parable might mean, and he said, ‘The mysteries of the kingdom of God are revealed to you; for the rest there are only parables, so that
they may see but not perceive,
listen but not understand.
‘This, then, is what the parable means: the seed is the word of God. Those on the edge of the path are people who have heard it, and then the devil comes and carries away the word from their hearts in case they should believe and be saved. Those on the rock are people who, when they first hear it, welcome the word with joy. But these have no root; they believe for a while, and in time of trial they give up. As for the part that fell into thorns, this is people who have heard, but as they go on their way they are choked by the worries and riches and pleasures of life and do not reach maturity. As for the part in the rich soil, this is people with a noble and generous heart who have heard the word and take it to themselves and yield a harvest through their perseverance.’

The Word of the Lord.