இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 1 ஜனவரி, 2025

சனவரி 2 : பதிலுரைப் பாடல் திபா 98: 1. 2-3a. 3b-4 (பல்லவி: 3b) பல்லவி: உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

 சனவரி 2 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3a. 3b-4 (பல்லவி: 3b)


பல்லவி: உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.

3a

இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3b

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

4

உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! 

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.


சனவரி 2 : முதல் வாசகம் தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 22-28

 சனவரி 2 :  முதல் வாசகம்

தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 22-28


அன்பிற்குரியவர்களே,

இயேசு ‘மெசியா’ அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள். மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை; மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர்.

தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள். அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்.

உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில் கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன். நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள் பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையும் கற்றுக்கொள்கிறீர்கள். அவ்வருள்பொழிவு உண்மையானது; பொய்யானது அல்ல. நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள்.

ஆகவே, பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து வாழுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 2nd : Gospel 'One is coming after me who existed before me' A reading from the Holy Gospel according to St.John 1:19-28

 January 2nd :  Gospel 

'One is coming after me who existed before me'

A reading from the Holy Gospel according to St.John 1:19-28 


This is how John appeared as a witness. When the Jews sent priests and Levites from Jerusalem to ask him, ‘Who are you?’ he not only declared, but he declared quite openly, ‘I am not the Christ.’ ‘Well then,’ they asked ‘are you Elijah?’ ‘I am not’ he said. ‘Are you the Prophet?’ He answered, ‘No.’ So they said to him, ‘Who are you? We must take back an answer to those who sent us. What have you to say about yourself?’ So John said, ‘I am, as Isaiah prophesied:

a voice that cries in the wilderness:

Make a straight way for the Lord.’

Now these men had been sent by the Pharisees, and they put this further question to him, ‘Why are you baptising if you are not the Christ, and not Elijah, and not the prophet?’ John replied, ‘I baptise with water; but there stands among you – unknown to you – the one who is coming after me; and I am not fit to undo his sandal-strap.’ This happened at Bethany, on the far side of the Jordan, where John was baptising.

The Word of the Lord.

January 2nd : Responsorial Psalm Psalm 97(98):1-4

 January 2nd :  Responsorial Psalm

Psalm 97(98):1-4 


All the ends of the earth have seen the salvation of our God.

Sing a new song to the Lord

  for he has worked wonders.

His right hand and his holy arm

  have brought salvation.

All the ends of the earth have seen the salvation of our God.

The Lord has made known his salvation;

  has shown his justice to the nations.

He has remembered his truth and love

  for the house of Israel.

All the ends of the earth have seen the salvation of our God.

All the ends of the earth have seen

  the salvation of our God.

Shout to the Lord, all the earth,

  ring out your joy.

All the ends of the earth have seen the salvation of our God.

Gospel Acclamation Jn1:14,12

Alleluia, alleluia!

The Word became flesh, and dwelt among us.

To all who received him he gave power to become children of God.

Alleluia!

January 2nd : First reading The anointing he gave you teaches you everything A reading from the first letter of St.John 2:22-28

 January 2nd : First reading

The anointing he gave you teaches you everything
A reading from the first letter of St.John 2:22-28

The man who denies that Jesus is the Christ –
he is the liar,
he is Antichrist;
and he is denying the Father as well as the Son,
because no one who has the Father can deny the Son,
and to acknowledge the Son is to have the Father as well.
Keep alive in yourselves what you were taught in the beginning:
as long as what you were taught in the beginning is alive in you,
you will live in the Son
and in the Father;
and what is promised to you by his own promise
is eternal life.
This is all that I am writing to you about the people who are trying to lead you astray.
But you have not lost the anointing that he gave you,
and you do not need anyone to teach you;
the anointing he gave teaches you everything;
you are anointed with truth, not with a lie,
and as it has taught you, so you must stay in him.
Live in Christ, then, my children,
so that if he appears, we may have full confidence,
and not turn from him in shame
at his coming.
The Word of the Lord.

செவ்வாய், 31 டிசம்பர், 2024

சனவரி 1 : நற்செய்தி வாசகம்மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

சனவரி 1 :  நற்செய்தி வாசகம்
மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21
அக்காலத்தில்
இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 1 : இரண்டாம் வாசகம்கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

சனவரி 1 :  இரண்டாம் வாசகம்
கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7
சகோதரர் சகோதரிகளே,
காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே,’ எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபி 1: 1-2
அல்லேலூயா, அல்லேலூயா! 
பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

சனவரி 1 : பதிலுரைப் பாடல்திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 1a)பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

சனவரி 1 :  பதிலுரைப் பாடல்
திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 1a)
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி
4
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி
5
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. - பல்லவி

சனவரி 1 : இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழாமுதல் வாசகம்இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27

சனவரி 1 :  இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா
முதல் வாசகம்
இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

January 1st : Second readingGod sent his Son, born of a womanA reading from the letter of St.Paul to the Galatians 4:4-7.

January 1st :  Second reading
God sent his Son, born of a woman
A reading from the letter of St.Paul to the Galatians 4:4-7.
When the appointed time came, God sent his Son, born of a woman, born a subject of the Law, to redeem the subjects of the Law and to enable us to be adopted as sons. The proof that you are sons is that God has sent the Spirit of his Son into our hearts: the Spirit that cries, ‘Abba, Father’, and it is this that makes you a son, you are not a slave any more; and if God has made you son, then he has made you heir.
The Word of the Lord.
Gospel Acclamation  Heb1:1-2
Alleluia, alleluia!
At various times in the past
and in various different ways,
God spoke to our ancestors through the prophets;
but in our own time, the last days,
he has spoken to us through his Son.
Alleluia!