இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 7 ஜனவரி, 2026

January 8th : Reslonsorial Psalm Psalm 72:1–2, 14 and 15cd, 17 (R. see 11)

 January 8th : Reslonsorial Psalm

Psalm 72:1–2, 14 and 15cd, 17 (R. see 11)

Response : All nations on earth shall fall prostrate before you, O Lord.

O God, give your judgment to the king, to a king’s son your justice, that he may judge your people in justice, and your poor in right judgment. 

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

From oppression and violence he redeems their souls; to him their blood is dear. They shall pray for him without ceasing, and bless him all the day. 

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

May his name endure forever, his name continue like the sun. Every tribe shall be blest in him, all nations shall call him blessed. 

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. The Lord has anointed me to proclaim good news to the poor, to proclaim liberty to the captives.

R. Alleluia.

January 8th : First Reading Anyone who loves God must also love his brother. A Reading from the First Letter of St.John 4: 19-5:4

 January 8th :  First Reading 

Anyone who loves God must also love his brother.

A Reading from the First Letter of St.John 4: 19-5:4 

Beloved: We love because he first loved us. If anyone says, “I love God”, and hates his brother, he is a liar; for he who does not love his brother whom he has seen cannot love God whom he has not seen. And this commandment we have from him: whoever loves God must also love his brother. Everyone who believes that Jesus is the Christ has been born of God, and everyone who loves the Father loves whoever has been born of him. By this we know that we love the children of God, when we love God and obey his commandments. For this is the love of God, that we keep his commandments. And his commandments are not burdensome. For everyone who has been born of God overcomes the world. And this is the victory that has overcome the world—our faith.

The Word of the Lord.


செவ்வாய், 6 ஜனவரி, 2026

சனவரி 7 : நற்செய்தி வாசகம் இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52

 சனவரி  7 :  நற்செய்தி வாசகம்

இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52


ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின் இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.

பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘அது பேய்’ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்.

ஏனெனில் அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 7 : பதிலுரைப் பாடல் திபா 72: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 11)

 சனவரி 7 :  பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 11)


பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2

அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. - பல்லவி

10

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.

11

எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். - பல்லவி

12

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.

13

வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 திமொ 3: 16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! 

பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை; விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை. அல்லேலூயா.

சனவரி 7 : முதல் வாசகம் நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18

 சனவரி 7 : முதல் வாசகம்

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18


அன்பார்ந்தவர்களே,

கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.

அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார்.

கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம். எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 7th : Gospel His disciples saw him walking on the lake. A Reading from the Holy Gospel according to St. Mark 6:45-52

 January 7th :  Gospel 

His disciples saw him walking on the lake.

A Reading from the Holy Gospel according to St. Mark 6:45-52 

After the five thousand men were satisfied, Jesus made his disciples get into the boat and go before him to the other side, to Bethsaida, while he dismissed the crowd. And after he had taken leave of them, he went up on the mountain to pray. And when evening came, the boat was out on the sea, and he was alone on the land. And he saw that they were making headway painfully, for the wind was against them. And about the fourth watch of the night he came to them, walking on the sea. He meant to pass by them, but when they saw him walking on the sea they thought it was a ghost, and cried out, for they all saw him and were terrified. But immediately he spoke to them and said, “Take heart; it is I. Do not be afraid.” And he got into the boat with them, and the wind ceased. And they were utterly astounded, for they did not understand about the loaves, but their hearts were hardened.

The Gospel of the Lord.

January 7th : Responsorial Psalm Psalm 72:1–2, 10–11, 12–13 (R. see 11)

 January 7th : Responsorial Psalm

Psalm 72:1–2, 10–11, 12–13 (R. see 11)

Response : All nations on earth shall fall prostrate before you, O Lord.

O God, give your judgment to the king, to a king’s son your justice, that he may judge your:  people in justice, and your poor in right judgment. 

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

The kings of Tarshish and the islands shall pay him tribute. The kings of Sheba and Seba shall bring him gifts. Before him all kings shall fall prostrate, all nations shall serve him. 

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

For he shall save the needy when they cry, the poor, and those who are helpless. He will have pity on the weak and the needy, and save the lives of the needy. 

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Glory to you, O Christ, proclaimed among the nations, glory to you, O Christ, believed on in the world.

R. Alleluia.

January 7th : First Reading As long as we love one another God's love will be complete in us A Reading from the First Letter of St.John 4: 11-18

 January 7th : First Reading 

As long as we love one another God's love will be complete in us

A Reading from the First Letter of St.John 4: 11-18 

Beloved, if God so loved us, we also ought to love one another. No one has ever seen God; if we love one another, God abides in us and his love is perfected in us. By this we know that we abide in him and he in us, because he has given us of his Spirit. And we have seen and testify that the Father has sent his Son to be the Saviour of the world. Whoever confesses that Jesus is the Son of God, God abides in him, and he in God. So we have come to know and to believe the love that God has for us. God is love, and whoever abides in love abides in God, and God abides in him. By this is love perfected with us,

so that we may have confidence for the day of judgment, because as he is so also are we in this world. There is no fear in love, but perfect love casts out fear. For fear has to do with punishment, and whoever fears has not been perfected in love.

The Word of the Lord.


திங்கள், 5 ஜனவரி, 2026

சனவரி 6 : நற்செய்தி வாசகம் இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44

 சனவரி 6 :  நற்செய்தி வாசகம்

இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44


அக்காலத்தில்

இயேசு படகிலிருந்து கலிலேயா கடற்கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இதற்குள் நெடு நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்” என்றனர்.

அவர் அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று பதிலளித்தார். அவர்கள், “நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?” என்று கேட்டார்கள். அப்பொழுது அவர், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்” என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என்றார்கள்.

அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 6 : பதிலுரைப் பாடல் திபா 72: 1-2. 3-4ab. 7-8 (பல்லவி: 11) பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்

 சனவரி  6 :  பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 3-4ab. 7-8 (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.


1

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2

அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! - பல்லவி

3

மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.

4ab

எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. - பல்லவி

7

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.

8

ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! 

“ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்.” அல்லேலூயா.