இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 6 மார்ச், 2026

மார்ச் 7 : முதல் வாசகம்நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

மார்ச் 7 :  முதல் வாசகம்

நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20
ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.

உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து, நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்;

அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 7th : GospelThe prodigal sonA Reading from the Holy Gospel according to St.Luke 15:1-3,11-32

March 7th :  Gospel

The prodigal son

A Reading from the Holy Gospel according to St.Luke 15:1-3,11-32 

At that time: The tax collectors and sinners were all drawing near to hear Jesus. And the Pharisees and the scribes grumbled, saying, “This man receives sinners and eats with them.” So he told them this parable: he said, “There was a man who had two sons. And the younger of them said to his father, ‘Father, give me the share of property that is coming to me.’ And he divided his property between them. Not many days later, the younger son gathered all he had and took a journey into a far country, and there he squandered his property in reckless living. And when he had spent everything, a severe famine arose in that country, and he began to be in need. So he went and hired himself out to one of the citizens of that country, who sent him into his fields to feed pigs. And he was longing to be fed with the pods that the pigs ate, and no one gave him anything. “But when he came to himself, he said, ‘How many of my father’s hired servants have more than enough bread, but I perish here with hunger! I will arise and go to my father, and I will say to him, “Father, I have sinned against heaven and before you. I am no longer worthy to be called your son. Treat me as one of your hired servants.”’ And he arose and came to his father. But while he was still a long way off, his father saw him and felt compassion, and ran and embraced him and kissed him. And the son said to him, ‘Father, I have sinned against heaven and before you. I am no longer worthy to be called your son.’ But the father said to his servants, ‘Bring quickly the best robe, and put it on him, and put a ring on his hand, and shoes on his feet. And bring the fattened calf and kill it, and let us eat and celebrate. For this my son was dead, and is alive again; he was lost, and is found.’ And they began to celebrate. “Now his older son was in the field, and as he came and drew near to the house he heard music and dancing. And he called one of the servants and asked what these things meant. And he said to him, ‘Your brother has come, and your father has killed the fattened calf, because he has received him back safe and sound.’ But he was angry and refused to go in. His father came out and entreated him, but he answered his father, ‘Look, these many years I have served you, and I never disobeyed your command, yet you never gave me a young goat, that I might celebrate with my friends. But when this son of yours came, who has devoured your property with prostitutes, you killed the fattened calf for him!’

And he said to him, ‘Son, you are always with me, and all that is mine is yours. It was fitting to celebrate and be glad, for this your brother was dead, and is alive; he was lost, and is found.’”

The Gospel of the Lord.

March 7th : Responsorial PsalmPsalm 103:1–2, 3–4, 9–10, 11–12 (R. 8a)Response : The Lord is compassionate and gracious.

March 7th : Responsorial  Psalm

Psalm 103:1–2, 3–4, 9–10, 11–12 (R. 8a)

Response : The Lord is compassionate and gracious.

Bless the Lord, O my soul, and all within me, his holy name. Bless the Lord, O my soul, and never forget all his benefits. 

R.: The Lord is compassionate and gracious.

It is the Lord who forgives all your sins, who heals every one of your ills, who redeems your life from the grave, who crowns you with mercy and compassion. 

R.: The Lord is compassionate and gracious.

He will not always find fault; nor persist in his anger forever. He does not treat us according to our sins, nor repay us according to our faults. 

R.: The Lord is compassionate and gracious.

For as the heavens are high above the earth, so strong his mercy for those who fear him. As far as the east is from the west, so far from us does he remove our transgressions. 

R.: The Lord is compassionate and gracious.

Verse before the Gospel

V. Glory and praise to you, O Christ.

R. Glory and praise to you, O Christ.

V. I will arise and go to my father, and I will say to him: Father, I have sinned against heaven and before you.

R. Glory and praise to you, O Christ.

March 7th : First ReadingHave pity on us one more timeA Reading from the book of the Prophet Micah 7:14-15,18-20

March 7th :  First Reading

Have pity on us one more time

A Reading from the book of the Prophet Micah 7:14-15,18-20

Shepherd your people, O Lord, with your staff, the flock of your inheritance, who dwell alone in a forest in the midst of a garden land; let them graze in Bashan and Gilead as in the days of old. As in the days when you came out of the land of Egypt, I will show them marvelous things. Who is a God like you, pardoning iniquity and passing over transgression for the remnant of his inheritance? He does not retain his anger for ever, because he delights in steadfast love. He will again have compassion on us; he will tread our iniquities underfoot. You will cast all our sins into the depths of the sea. You will show faithfulness to Jacob and steadfast love to Abraham, as you have sworn to our fathers from the days of old.

The Word of the Lord.

வியாழன், 5 மார்ச், 2026

மார்ச் 6 : நற்செய்தி வாசகம்இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43, 45-46அக்காலத்தில்

மார்ச் 6 :  நற்செய்தி வாசகம்

இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43, 45-46
அக்காலத்தில்

இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: “மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக் குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.

அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?” என இயேசு கேட்டார்.

அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்” என்றார்கள். இயேசு அவர்களிடம், “ ‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்ட போது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்துகொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 6 : பதிலுரைப் பாடல்திபா 105: 16-17. 18-19. 20-21 (பல்லவி: 5a)பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

மார்ச் 6 :  பதிலுரைப் பாடல்

திபா 105: 16-17. 18-19. 20-21 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
16
நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார்.
17
அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். - பல்லவி

18
அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்.
19
காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. - பல்லவி

20
மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்;
21
அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.

மார்ச் 6 : முதல் வாசகம்இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13a, 17b-28

மார்ச் 6 :  முதல் வாசகம்

இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13a, 17b-28
இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும்விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார். அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.

அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர். இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி; “உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறார்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப்போகிறேன்” என்றார். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார்.

தொலையில் அவர் வருவதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, “இதோ வருகிறான் கனவின் மன்னன்! நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்றுவிட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்” என்றனர்.

ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, “நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்” என்றார். ரூபன் அவர்களை நோக்கி, “அவன் இரத்தத்தைச் சிந்தாதீர்கள். அவனைப் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளிவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்” என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார்.

யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு, அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி.

பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும், வெள்ளைப் போளத்தையும் அவர்கள் ஒட்டகங்களின்மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, “நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்? வாருங்கள்; இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கை வைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்” என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.

ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 6th : GospelMatthew 21:33–43, 45–46

March 6th : Gospel

Matthew 21:33–43, 45–46

At that time: Jesus said to the chief priests and the elders of the people, “Hear another parable. There was a master of a house who planted a vineyard and put a fence round it and dug a wine press in it and built a tower and leased it to tenants, and went into another country. When the season for fruit drew near, he sent his servants to the tenants to get his fruit. And the tenants took his servants and beat one, killed another, and stoned another. Again he sent other servants, more than at first. And they did the same to them. Finally he sent his son to them, saying, ‘They will respect my son.’ But when the tenants saw the son, they said to themselves, ‘This is the heir. Come, let us kill him and have his inheritance.’ And they took him and threw him out of the vineyard and killed him. When therefore the owner of the vineyard comes, what will he do to those tenants?” They said to him, “He will put those wretches to a miserable death and let out the vineyard to other tenants who will give him the fruits in their seasons.” Jesus said to them, “Have you never read in the Scriptures: ‘The stone that the builders rejected has become the cornerstone; this was the Lord’s doing, and it is marvelllous in our eyes’? Therefore I tell you, the kingdom of God will be taken away from you and given to a people producing its fruits.” When the chief priests and the Pharisees heard his parables, they perceived that he was speaking about them. And although they were seeking to arrest him, they feared the crowds, because they held him to be a prophet.

The Gospel of the Lord.

March 6th : Responsorial PsalmPsalm 105:16–17, 18–19, 20–21 (R. see 5a)Response : Remember the wonders the Lord has done.

March 6th : Responsorial Psalm

Psalm 105:16–17, 18–19, 20–21 (R. see 5a)

Response : Remember the wonders the Lord has done.

But he called down a famine on the land; he broke their staff of bread. He had sent a man ahead of them, Joseph, sold as a slave. 

R.: Remember the wonders the Lord has done.

His feet were weighed down in chains, his neck was bound with iron, until what he said came to pass, and the word of the Lord proved him true. 

R.: Remember the wonders the Lord has done.

Then the king sent orders and released him; the ruler of the peoples set him free. He made him master of his house and ruler of all his possessions. 

R.: Remember the wonders the Lord has done.

Alleluia
V. Glory and praise to you, O Christ.

R. Glory and praise to you, O Christ.

V. For God so loved the world, that he gave his only begotten Son, that whoever believes in him should not perish but have eternal life.

R. Glory and praise to you, O Christ.

March 6th : First ReadingGenesis 37:3-4, 12-13a, 17b-28

March 6th : First Reading

Genesis 37:3-4, 12-13a, 17b-28

Israel loved Joseph more than any other of his sons, because he was the son of his old age. And he made him a robe of many colours. But when his brothers saw that their father loved him more than all his brothers, they hated him and could not speak peacefully to him. Now his brothers went to pasture their father’s flock near Shechem. And Israel said to Joseph, “Are not your brothers pasturing the flock at Shechem? Come, I will send you to them.” So Joseph went after his brothers and found them at Dothan. They saw him from afar, and before he came near to them they conspired against him to kill him. They said to one another, “Here comes this dreamer. Come now, let us kill him and throw him into one of the pits. Then we will say that a fierce animal has devoured him, and we will see what will become of his dreams.” But when Reuben heard it, he rescued him out of their hands, saying, “Let us not take his life.” And Reuben said to them, “Shed no blood; throw him into this pit here in the wilderness, but do not lay a hand on him”— that he might rescue him out of their hand to restore him to his father. So when Joseph came to his brothers, they stripped him of his robe, the robe of many colours that he wore. And they took him and threw him into a pit. The pit was empty; there was no water in it. Then they sat down to eat. And looking up they saw a caravan of Ishmaelites coming from Gilead, with their camels bearing gum, balm, and myrrh, on their way to carry it down to Egypt. Then Judah said to his brothers, What profit is it if we kill our brother and conceal his blood? Come, let us sell him to the Ishmaelites, and let not our hand be upon him, for he is our brother, our own flesh.” And his brothers listened to him. Then Midianite traders passed by. And they drew Joseph up and lifted him out of the pit, and sold him to the Ishmaelites for twenty shekels of silver. They took Joseph to Egypt.

The word of the Lord.