இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

ஏப்ரல் 29 : முதல் வாசகம் பர்னபாவையும் சவுலையும் எனது பணிக்காக ஒதுக்கி வையுங்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24- 13: 5

 ஏப்ரல் 29   :  முதல் வாசகம்

பர்னபாவையும் சவுலையும் எனது பணிக்காக ஒதுக்கி வையுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24- 13: 5


அந்நாள்களில்

கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றனர்.

அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும் போதகராகவும் இருந்தனர். அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள். அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 29th : Gospel I, the light, have come into the world A Reading from the Holy Gospel according to St.John 12: 44-50

 April 29th :  Gospel 

I, the light, have come into the world

A Reading from the Holy Gospel according to St.John 12: 44-50 

At that time: Jesus cried out and said, “Whoever believes in me, believes not in me but in him who sent me. And whoever sees me sees him who sent me. I have come into the world as light, so that whoever believes in me may not remain in darkness. If anyone hears my words and does not keep them, I do not judge him; for I did not come to judge the world but to save the world. The one who rejects me and does not receive my words has a judge; the word that I have spoken will judge him on the last day. For I have not spoken on my own authority, but the Father who sent me has himself given me a commandment— what to say and what to speak. And I know that his commandment is eternal life. What I say, therefore, I say as the Father has told me.”

The Gospel of the Lord.

April 29th : Responsorial Psalm Psalm 67:2–3, 5, 6 and 8 (R. 4)

 April 29th :  Responsorial  Psalm

Psalm 67:2–3, 5, 6 and 8 (R. 4)

Response :  Let the peoples praise you, O God; let all the peoples praise you!

O God, be gracious and bless us and let your face shed its light upon us. So will your ways be known upon earth and all nations learn your salvation. 

R.:  Let the peoples praise you, O God; let all the peoples praise you!

Let the nations be glad and shout for joy, with uprightness you rule the peoples; you guide the nations on earth. 

R.:  Let the peoples praise you, O God; let all the peoples praise you!

Let the peoples praise you, O God; let all the peoples praise you. May God still give us his blessing that all the ends of the earth may revere him. 

R.:  Let the peoples praise you, O God; let all the peoples praise you!

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. I am the light of the world, says the Lord; whoever follows me will have the light of life.

R. Alleluia.


April 29th : First Reading 'I want Barnabas and Saul set apart' A Reading from the Acts of Apostles 12: 24-13:5

 April 29th  :  First Reading 

'I want Barnabas and Saul set apart'

A Reading from the Acts of  Apostles 12: 24-13:5 

In those days: The word of God increased and multiplied. And Barnabas and Saul returned from Jerusalem when they had completed their service, bringing with them John, whose other name was Mark. Now there were in the church at Antioch prophets and teachers, Barnabas, Simeon who was called Niger, Lucius of Cyrene, Manaen a lifelong friend of Herod the tetrarch, and Saul. While they were worshipping the Lord and fasting, the Holy Spirit said, “Set apart for me Barnabas and Saul for the work to which I have called them.” Then after fasting and praying they laid their hands on them and sent them off. So, being sent out by the Holy Spirit, they went down to Seleucia, and from there they sailed to Cyprus. When they arrived at Salamis, they proclaimed the word of God in the synagogues of the Jews.

The Word of the Lord.


திங்கள், 27 ஏப்ரல், 2026

ஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30

ஏப்ரல் 28  :  நற்செய்தி வாசகம்

நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30
அக்காலத்தில்

எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார்.

அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்திபா 87: 1-3. 4-5. 6-7a (பல்லவி: திபா 117: 1a)

ஏப்ரல் 28  :  பதிலுரைப் பாடல்

திபா 87: 1-3. 4-5. 6-7a (பல்லவி: திபா 117: 1a)

பல்லவி: பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
அல்லது: அல்லேலூயா.

1
நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும் விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3
கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி

4
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.
5
‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி

6
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.
7a
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! 

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஏப்ரல் 28 : முதல் வாசகம்ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26

ஏப்ரல் 28  :  முதல் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26
அந்நாள்களில்

ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை. அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந்தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர்.

இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்றுவர அனுப்பி வைத்தார்கள். அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.

பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 28th : Gospel The Father and I are oneA Reading from the Holy Gospel according to St.John 10:22-30

April 28th  :  Gospel 

The Father and I are one

A Reading from the Holy Gospel according to St.John 10:22-30 

At that time the Feast of Dedication took place at Jerusalem. It was winter, and Jesus was walking in the temple, in the colonnade of Solomon. So the Jews gathered around him and said to him, “How long will you keep us in suspense? If you are the Christ, tell us plainly.” Jesus answered them, “I told you, and you do not believe. The works that I do in my Father’s name bear witness about me, but you do not believe because you are not among my sheep. My sheep hear my voice, and I know them, and they follow me. I give them eternal life, and they will never perish, and no one will snatch them out of my hand. My Father, who has given them to me, is greater than all, and no one is able to snatch them out of the Father’s hand. I and the Father are one.”

The Gospel of the Lord.

April 28th : Responsorial PsalmPsalm 87:1–3, 4–5, 6–7 (Psalm 117:1a)Response : O praise the Lord, all you nations.

April 28th :  Responsorial Psalm

Psalm 87:1–3, 4–5, 6–7 (Psalm 117:1a)

Response : O praise the Lord, all you nations.

Founded by him on the holy mountain, the Lord loves the gates of Sion, more than all the dwellings of Jacob. Of you are told glorious things, you, O city of God! 

R.: O praise the Lord, all you nations.

“Rahab and Babylon I will count among those who know me; of Tyre, Philistia, Ethiopia, it is told, ‘There was this one born.’ But of Sion it shall be said, ‘Each one was born in her.’” He, the Most High, established it. 

R.: O praise the Lord, all you nations.

In his register of peoples the Lord writes, “Here was this one born.” The singers cry out in chorus, “In you, all find their home.” 

R.: O praise the Lord, all you nations.

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. My sheep hear my voice, says the Lord, and I know them, and they follow me.

R. Alleluia.

April 28th : First Reading They started preaching to the Greeks, proclaiming the Lord JesusA Reading from the Acts of Apostles 11:19-26

April 28th :  First Reading 

They started preaching to the Greeks, proclaiming the Lord Jesus

A Reading from the Acts of Apostles  11:19-26 

In those days: Those who were scattered because of the persecution that arose over Stephen travelled as far as Phoenicia and Cyprus and Antioch, speaking the word to no one except Jews. But there were some of them, men of Cyprus and Cyrene, who on coming to Antioch spoke to the Hellenists also, preaching the Lord Jesus. And the hand of the Lord was with them, and a great number who believed turned to the Lord. The report of this came to the ears of the church in Jerusalem, and they sent Barnabas to Antioch. When he came and saw the grace of God, he was glad, and he exhorted them all to remain faithful to the Lord with steadfast purpose, for he was a good man, full of the Holy Spirit and of faith. And a great many people were added to the Lord. So Barnabas went to Tarsus to look for Saul, and when he had found him, he brought him to Antioch. For a whole year they met with the church and taught a great many people. And in Antioch the disciples were first called Christians.

The Word of the Lord.