இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 29 ஏப்ரல், 2026

April 30th : Gospel Whoever welcomes the one I send welcomes me A Reading from the Holy Gospel according to St.John 13: 16-20

 April 30th : Gospel 

Whoever welcomes the one I send welcomes me

A Reading from the Holy Gospel according to St.John 13: 16-20 

When Jesus had washed the feet of his disciples, he said to them, “Truly, truly, I say to you, a servant is not greater than his master, nor is a messenger greater than the one who sent him. If you know these things, blessed are you if you do them. I am not speaking of all of you; I know whom I have chosen. But the Scripture will be fulfilled, ‘He who ate my bread has lifted his heel against me.’ I am telling you this now, before it takes place, that when it does take place you may believe that I am he. Truly, truly, I say to you, whoever receives the one I send receives me, and whoever receives me receives the one who sent me.”

The Gospel of the Lord.

April 30th : Responsorial Psalm Psalm 89:2–3, 21–22, 25 and 27 (R. 2a) Response : I will sing forever of your mercies, O Lord.

 April 30th :  Responsorial Psalm

Psalm 89:2–3, 21–22, 25 and 27 (R. 2a)

Response : I will sing forever of your mercies, O Lord.

I will sing forever of your mercies, O Lord; through all ages my mouth will proclaim your fidelity. I have declared your mercy is established forever; your fidelity stands firm as the heavens. 

R.: I will sing forever of your mercies, O Lord.

I have found my servant David, and with my holy oil anointed him. My hand shall always be with him, and my arm shall make him strong. 

R.: I will sing forever of your mercies, O Lord.

My mercy and my faithfulness shall be with him; by my name his might shall be exalted. He will call out to me, ‘You are my father, my God, the rock of my salvation.’ 

R.: I will sing forever of your mercies, O Lord.

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Jesus Christ, you are the faithful witness, the firstborn of the dead, you have loved us and freed us from our sins by your blood.

R. Alleluia.


April 30th : First Reading God has raised up one of David's descendants, Jesus, as Saviour A Reading from the Acts of Apostles 13: 13-25

 April 30th :  First Reading 

God has raised up one of David's descendants, Jesus, as Saviour

A Reading from the Acts of Apostles 13: 13-25 

Paul and his companions set sail from Paphos and came to Perga in Pamphylia. And John left them and returned to Jerusalem, but they went on from Perga and came to Antioch in Pisidia. And on the Sabbath day they went into the synagogue and sat down. After the reading from the Law and the Prophets, the rulers of the synagogue sent a message to them, saying, “Brothers, if you have any word of encouragement for the people, say it.” So Paul stood up, and motioning with his hand said: “Men of Israel and you who fear God, listen. The God of this people Israel chose our fathers and made the people great during their stay in the land of Egypt, and with uplifted arm he led them out of it. And for about forty years he put up with them in the wilderness. And after destroying seven nations in the land of Canaan, he gave them their land as an inheritance. All this took about four hundred and fifty years. And after that he gave them judges until Samuel the prophet. Then they asked for a king, and God gave them Saul the son of Kish, a man of the tribe of Benjamin, for forty years. And when he had removed him, he raised up David to be their king, of whom he testified and said, ‘I have found in David the son of Jesse a man after my heart, who will do all my will.’ Of this man’s offspring God has brought to Israel a Saviour, Jesus, as he promised. Before his coming, John had proclaimed a baptism of repentance to all the people of Israel. And as John was finishing his course, he said, ‘What do you suppose that I am? I am not he. No, but behold, after me one is coming, the sandals of whose feet I am not worthy to untie.’”

The Word of the Lord.

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

ஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம் நான் உலகிற்கு ஒளியாக வந்தேன். ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 44-50

 ஏப்ரல்  29  :  நற்செய்தி வாசகம்

நான் உலகிற்கு ஒளியாக வந்தேன்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 44-50


அக்காலத்தில்

இயேசு உரத்த குரலில் கூறியது: “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன். நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.

என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும். ஏனெனில் நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல் திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3) பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

 ஏப்ரல் 29  :  பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!

அல்லது: அல்லேலூயா.

1

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!

2


அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

5

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

7

கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா!

 "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஏப்ரல் 29 : முதல் வாசகம் பர்னபாவையும் சவுலையும் எனது பணிக்காக ஒதுக்கி வையுங்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24- 13: 5

 ஏப்ரல் 29   :  முதல் வாசகம்

பர்னபாவையும் சவுலையும் எனது பணிக்காக ஒதுக்கி வையுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24- 13: 5


அந்நாள்களில்

கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றனர்.

அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும் போதகராகவும் இருந்தனர். அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள். அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 29th : Gospel I, the light, have come into the world A Reading from the Holy Gospel according to St.John 12: 44-50

 April 29th :  Gospel 

I, the light, have come into the world

A Reading from the Holy Gospel according to St.John 12: 44-50 

At that time: Jesus cried out and said, “Whoever believes in me, believes not in me but in him who sent me. And whoever sees me sees him who sent me. I have come into the world as light, so that whoever believes in me may not remain in darkness. If anyone hears my words and does not keep them, I do not judge him; for I did not come to judge the world but to save the world. The one who rejects me and does not receive my words has a judge; the word that I have spoken will judge him on the last day. For I have not spoken on my own authority, but the Father who sent me has himself given me a commandment— what to say and what to speak. And I know that his commandment is eternal life. What I say, therefore, I say as the Father has told me.”

The Gospel of the Lord.

April 29th : Responsorial Psalm Psalm 67:2–3, 5, 6 and 8 (R. 4)

 April 29th :  Responsorial  Psalm

Psalm 67:2–3, 5, 6 and 8 (R. 4)

Response :  Let the peoples praise you, O God; let all the peoples praise you!

O God, be gracious and bless us and let your face shed its light upon us. So will your ways be known upon earth and all nations learn your salvation. 

R.:  Let the peoples praise you, O God; let all the peoples praise you!

Let the nations be glad and shout for joy, with uprightness you rule the peoples; you guide the nations on earth. 

R.:  Let the peoples praise you, O God; let all the peoples praise you!

Let the peoples praise you, O God; let all the peoples praise you. May God still give us his blessing that all the ends of the earth may revere him. 

R.:  Let the peoples praise you, O God; let all the peoples praise you!

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. I am the light of the world, says the Lord; whoever follows me will have the light of life.

R. Alleluia.


April 29th : First Reading 'I want Barnabas and Saul set apart' A Reading from the Acts of Apostles 12: 24-13:5

 April 29th  :  First Reading 

'I want Barnabas and Saul set apart'

A Reading from the Acts of  Apostles 12: 24-13:5 

In those days: The word of God increased and multiplied. And Barnabas and Saul returned from Jerusalem when they had completed their service, bringing with them John, whose other name was Mark. Now there were in the church at Antioch prophets and teachers, Barnabas, Simeon who was called Niger, Lucius of Cyrene, Manaen a lifelong friend of Herod the tetrarch, and Saul. While they were worshipping the Lord and fasting, the Holy Spirit said, “Set apart for me Barnabas and Saul for the work to which I have called them.” Then after fasting and praying they laid their hands on them and sent them off. So, being sent out by the Holy Spirit, they went down to Seleucia, and from there they sailed to Cyprus. When they arrived at Salamis, they proclaimed the word of God in the synagogues of the Jews.

The Word of the Lord.


திங்கள், 27 ஏப்ரல், 2026

ஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30

ஏப்ரல் 28  :  நற்செய்தி வாசகம்

நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30
அக்காலத்தில்

எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார்.

அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.