இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

September 30th : Gospel'I will follow you wherever you go'A Reading from the Holy Gospel according to St. Luke 9:57-62

September 30th :  Gospel

'I will follow you wherever you go'

A Reading from the Holy Gospel according to St. Luke 9:57-62 

As Jesus and his disciples travelled along they met a man on the road who said to him, ‘I will follow you wherever you go.’ Jesus answered, ‘Foxes have holes and the birds of the air have nests, but the Son of Man has nowhere to lay his head.’
  Another to whom he said, ‘Follow me’, replied, ‘Let me go and bury my father first.’ But he answered, ‘Leave the dead to bury their dead; your duty is to go and spread the news of the kingdom of God.’
  Another said, ‘I will follow you, sir, but first let me go and say goodbye to my people at home.’ Jesus said to him, ‘Once the hand is laid on the plough, no one who looks back is fit for the kingdom of God.’

The Gospel of the Lord.

September 30th : Responsorial PsalmPsalm 87(88):10-15 Let my prayer come into your presence, O Lord.

September 30th :  Responsorial Psalm

Psalm 87(88):10-15 

Let my prayer come into your presence, O Lord.
I call to you, Lord, all the day long;
  to you I stretch out my hands.
Will you work your wonders for the dead?
  Will the shades stand and praise you?

Let my prayer come into your presence, O Lord.

Will your love be told in the grave
  or your faithfulness among the dead?
Will your wonders be known in the dark
  or your justice in the land of oblivion?

Let my prayer come into your presence, O Lord.

As for me, Lord, I call to you for help:
  in the morning my prayer comes before you.
Lord, why do you reject me?
  Why do you hide your face?

Let my prayer come into your presence, O Lord.

Gospel Acclamation Ps118:105

Alleluia, alleluia!
Your word is a lamp for my steps
and a light for my path.
Alleluia!

September 30th : First ReadingHow can man be in the right against God?A Reading from the Book of Job 9:1-13,14-16.

September 30th :  First Reading

How can man be in the right against God?

A Reading from the Book of Job 9:1-13,14-16.
Job spoke to his friends:
Indeed, I know it is as you say:
  how can man be in the right against God?
If any were so rash as to challenge him for reasons,
  one in a thousand would be more than they could answer.
His heart is wise, and his strength is great:
  who then can successfully defy him?
He moves the mountains, though they do not know it;
  he throws them down when he is angry.
He shakes the earth, and moves it from its place,
  making all its pillars tremble.
The sun, at his command, forbears to rise,
  and on the stars he sets a seal.
He and no other stretched out the skies,
  and trampled the Sea’s tall waves.
The Bear, Orion too, are of his making,
  the Pleiades and the Mansions of the South.
His works are great, beyond all reckoning,
  his marvels, past all counting.
Were he to pass me, I should not see him,
  nor detect his stealthy movement.
Were he to snatch a prize, who could prevent him,
  or dare to say, ‘What are you doing?’
How dare I plead my cause, then,
  or choose arguments against him?
Suppose I am in the right, what use is my defence?
  For he whom I must sue is judge as well.
If he deigned to answer my citation,
  could I be sure that he would listen to my voice?

The Word of the Lord.

செப்டம்பர் 30 : நற்செய்தி வாசகம்நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

செப்டம்பர் 30 :  நற்செய்தி வாசகம்

நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62
அக்காலத்தில்

இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.

இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 30 : பதிலுரைப் பாடல்திபா 88: 9bc-10. 11-12. 13-14 . (பல்லவி: 2a)பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!

செப்டம்பர் 30 :  பதிலுரைப் பாடல்

திபா 88: 9bc-10. 11-12. 13-14 . (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!
9bc.ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்; உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன்.
10.இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? - பல்லவி

11.கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா?
12.இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா? - பல்லவி

13.ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.
14.ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்? - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 3: 8-9 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா

செப்டம்பர் 30 : முதல் வாசகம்இறைவன் முன் மனிதர் நேர்மையாய் இருப்பதெப்படி?யோபு நூலிலிருந்து வாசகம் 9: 1-12, 14-16.

செப்டம்பர் 30 :  முதல் வாசகம்

இறைவன் முன் மனிதர் நேர்மையாய் இருப்பதெப்படி?

யோபு நூலிலிருந்து வாசகம் 9: 1-12, 14-16.
யோபு தன் நண்பர்களுக்குக் கூறிய மறுமொழி:

உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்; ஆனால், மனிதர் இறைவன் முன் நேர்மையாய் இருப்பதெப்படி? ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா? இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்; அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்? அவர் மலைகளை அகற்றுவார்; அவை அதை அறியா; அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார். அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று; அதிரும் அதனுடைய தூண்கள். அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்; அவர் மறைத்திடுவார் விண்மீன்களை. தாமே தனியாய் வானை விரித்தவர். ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர். வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே. உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே.

இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை. நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை. இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைக் கேட்பார் யார்? இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்? எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்? நான் நேர்மையாக இருந்தாலும், அவருக்குப் பதிலுரைக்க இயலேன். என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன்; நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும், என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்தி வாசக மறையுரை(செப்டம்பர் 30)பொதுக்காலம் இருபத்து ஆறாம் வாரம் புதன்கிழமை

திங்கள், 28 செப்டம்பர், 2020

September 29th : Gospel You will see heaven laid open, and the Son of Man.A Reading from the Holy Gospel according to St.John 1:47-51

September 29th : Gospel 

You will see heaven laid open, and the Son of Man.

A Reading from the Holy Gospel according to St.John 1:47-51 
When Jesus saw Nathanael coming he said of him, ‘There is an Israelite who deserves the name, incapable of deceit.’ ‘How do you know me?’ said Nathanael. ‘Before Philip came to call you,’ said Jesus ‘I saw you under the fig tree.’ Nathanael answered, ‘Rabbi, you are the Son of God, you are the King of Israel.’ Jesus replied, ‘You believe that just because I said: I saw you under the fig tree. You will see greater things than that.’ And then he added ‘I tell you most solemnly, you will see heaven laid open and, above the Son of Man, the angels of God ascending and descending.’

The Word of the Lord.

September 29th : Responsorial PsalmPsalm 137(138):1-5 In the presence of the angels I will bless you, O Lord.

September 29th :  Responsorial Psalm

Psalm 137(138):1-5 

In the presence of the angels I will bless you, O Lord.
I thank you, Lord, with all my heart:
  you have heard the words of my mouth.
In the presence of the angels I will bless you.
  I will adore before your holy temple.

In the presence of the angels I will bless you, O Lord.

I thank you for your faithfulness and love,
  which excel all we ever knew of you.
On the day I called, you answered;
  you increased the strength of my soul.

In the presence of the angels I will bless you, O Lord.

All earth’s kings shall thank you
  when they hear the words of your mouth.
They shall sing of the Lord’s ways:
  ‘How great is the glory of the Lord!’

In the presence of the angels I will bless you, O Lord.

Gospel Acclamation Ps102:21

Alleluia, alleluia!
Give thanks to the Lord, all his hosts,
his servants who do his will.
Alleluia!

September 29th : First readingHis robe was white as snowA Reading from the Book of Daniel 7:9-10,13-14

September 29th  : First reading

His robe was white as snow

A Reading from the Book of Daniel 7:9-10,13-14 
As I watched:
Thrones were set in place
and one of great age took his seat.
His robe was white as snow,
the hair of his head as pure as wool.
His throne was a blaze of flames,
its wheels were a burning fire.
A stream of fire poured out,
issuing from his presence.
A thousand thousand waited on him,
ten thousand times ten thousand stood before him.
A court was held
and the books were opened.
I gazed into the visions of the night.
And I saw, coming on the clouds of heaven,
one like a son of man.
He came to the one of great age
and was led into his presence.
On him was conferred sovereignty,
glory and kingship,
and men of all peoples, nations and languages became his servants.
His sovereignty is an eternal sovereignty
which shall never pass away,
nor will his empire ever be destroyed.

The Word of the Lord.