இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 23 ஆகஸ்ட், 2023

ஆகஸ்ட் 24 : நற்செய்தி வாசகம்இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51

ஆகஸ்ட் 24 :  நற்செய்தி வாசகம்

இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51
அக்காலத்தில்

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.

அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.

நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.

நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும், “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 24 : பதிலுரைப் பாடல்திபா 145: 10-11. 12-13ab. 17-18 (பல்லவி: 12 காண்க)பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.

ஆகஸ்ட் 24 :  பதிலுரைப் பாடல்

திபா 145: 10-11. 12-13ab. 17-18 (பல்லவி: 12 காண்க)

பல்லவி: ஆண்டவரே, உம் அன்பர்கள் உமதரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.
10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ab
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 49b
அல்லேலூயா, அல்லேலூயா! 

ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 24 : புனித பர்த்தலமேயு - திருத்தூதர் விழாமுதல் வாசகம்பன்னிரண்டு அடிக்கற்களின் மீதும் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 9b-14

ஆகஸ்ட் 24 :  புனித பர்த்தலமேயு - திருத்தூதர் விழா

முதல் வாசகம்

பன்னிரண்டு அடிக்கற்களின் மீதும் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 9b-14
சகோதரர் சகோதரிகளே,

ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, “வா, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்” என்று என்னிடம் கூறினார்.

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது.

அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 24th : Gospel You will see heaven laid open, and the Son of ManA reading from the Holy Gospel according to St.John 1:45-51

August 24th :  Gospel 

You will see heaven laid open, and the Son of Man

A reading from the Holy Gospel according to St.John 1:45-51 
Philip found Nathanael and said to him, ‘We have found the one Moses wrote about in the Law, the one about whom the prophets wrote: he is Jesus son of Joseph, from Nazareth.’ ‘From Nazareth?’ said Nathanael ‘Can anything good come from that place?’ ‘Come and see’ replied Philip. When Jesus saw Nathanael coming he said of him, ‘There is an Israelite who deserves the name, incapable of deceit.’ ‘How do you know me?’ said Nathanael. ‘Before Philip came to call you,’ said Jesus ‘I saw you under the fig tree.’ Nathanael answered, ‘Rabbi, you are the Son of God, you are the King of Israel.’ Jesus replied, ‘You believe that just because I said: I saw you under the fig tree. You will see greater things than that.’ And then he added ‘I tell you most solemnly, you will see heaven laid open and, above the Son of Man, the angels of God ascending and descending.’

The Word of the Lord.

August 24th : Responsorial PsalmPsalm 144(145):10-13a,17-18 Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

August 24th :  Responsorial Psalm

Psalm 144(145):10-13a,17-18 

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.
All your creatures shall thank you, O Lord,
  and your friends shall repeat their blessing.
They shall speak of the glory of your reign
  and declare your might, O God.

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

They make known to men your mighty deeds
  and the glorious splendour of your reign.
Yours is an everlasting kingdom;
  your rule lasts from age to age.

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

The Lord is just in all his ways
  and loving in all his deeds.
He is close to all who call him,
  who call on him from their hearts.

Your friends, O Lord, make known the glorious splendour of your reign.

Gospel Acclamation Jn1:49

Alleluia, alleluia!

Rabbi, you are the Son of God,
you are the King of Israel.
Alleluia!

August 24th : First readingHe showed me Jerusalem, the holy city, coming down from God out of heavenApocalypse 21: 9-14

August 24th :  First reading

He showed me Jerusalem, the holy city, coming down from God out of heaven

Apocalypse 21: 9-14 
The angel came to speak to me, and said, ‘Come here and I will show you the bride that the Lamb has married.’ In the spirit, he took me to the top of an enormous high mountain and showed me Jerusalem, the holy city, coming down from God out of heaven. It had all the radiant glory of God and glittered like some precious jewel of crystal-clear diamond. The walls of it were of a great height, and had twelve gates; at each of the twelve gates there was an angel, and over the gates were written the names of the twelve tribes of Israel; on the east there were three gates, on the north three gates, on the south three gates, and on the west three gates. The city walls stood on twelve foundation stones, each one of which bore the name of one of the twelve apostles of the Lamb.

The Word of the Lord.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

ஆகஸ்ட் 23 : நற்செய்தி வாசகம்நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

ஆகஸ்ட் 23 :  நற்செய்தி வாசகம்

நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16
அக்காலத்தில்

இயேசு கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.

அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 23 : பதிலுரைப் பாடல்திபா 21: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே, உம் வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்.

ஆகஸ்ட் 23 :  பதிலுரைப் பாடல்

திபா 21: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம் வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்.
1
ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
2
அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. - பல்லவி

3
உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர் கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.
4
அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். - பல்லவி

5
நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று. மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்.
6
உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!

 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

ஆகஸ்ட் 23 : முதல் வாசகம்செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவிகொடுப்பார்.நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 9: 6-15

ஆகஸ்ட் 23 :  முதல் வாசகம்

செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவிகொடுப்பார்.

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 9: 6-15
அந்நாள்களில்

செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில் ‘சிலைத் தூண் கருவாலி’ மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர்.

இது யோத்தாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கெரிசிம் மலைக்கு ஏறிச் சென்று அதன் உச்சியில் நின்றுகொண்டு உரத்த குரலில் கூப்பிட்டுக் கூறியது: “செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவிகொடுப்பார். மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம், ‘எங்களை அரசாளும்’ என்று கூறின. ஒலிவ மரம் அவற்றிடம், ‘எனது எண்ணெயால் தெய்வங்களும் மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர். அப்படியிருக்க அதை உற்பத்தி செய்வதை நான் விட்டுக்கொடுத்து மரங்களுக்கு மேல் அசைந்தாட வருவேனா?’ என்றது. மரங்கள் அத்தி மரத்திடம், ‘வாரும், எங்களை அரசாளும்’ என்றன. அத்தி மரம் அவற்றிடம், ‘எனது இனிமையையும் நல்ல பழத்தையும் விட்டுவிட்டு, மரங்கள் மீது அசைந்தாட வருவேனா?’ என்றது.

மரங்கள் திராட்சைக் கொடியிடம், ‘வாரும், எங்களை அரசாளும்’ என்றன. திராட்சைக் கொடி அவற்றிடம், ‘தெய்வங்களையும் மானிடரையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள்மேல் அசைந்தாட வருவேனா?’ என்றது. மரங்கள் எல்லாம் முட்புதரிடம், ‘வாரும் எங்களை அரசாளும்’ என்றன. முட்புதர் மரங்களிடம், ‘உண்மையில், உங்கள்மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்; என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்; இல்லையேல், முட்புதரான என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும்’ என்றது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 23rd : Gospel Why be envious because I am generous?A reading from the Holy Gospel according to St.Matthew 20: 1-16

August 23rd :  Gospel 

Why be envious because I am generous?

A reading from the Holy Gospel according to St.Matthew 20: 1-16 
Jesus said to his disciples: ‘The kingdom of heaven is like a landowner going out at daybreak to hire workers for his vineyard. He made an agreement with the workers for one denarius a day, and sent them to his vineyard. Going out at about the third hour he saw others standing idle in the market place and said to them, “You go to my vineyard too and I will give you a fair wage.” So they went. At about the sixth hour and again at about the ninth hour, he went out and did the same. Then at about the eleventh hour he went out and found more men standing round, and he said to them, “Why have you been standing here idle all day?” “Because no one has hired us” they answered. He said to them, “You go into my vineyard too.” In the evening, the owner of the vineyard said to his bailiff, “Call the workers and pay them their wages, starting with the last arrivals and ending with the first.” So those who were hired at about the eleventh hour came forward and received one denarius each. When the first came, they expected to get more, but they too received one denarius each. They took it, but grumbled at the landowner. “The men who came last” they said “have done only one hour, and you have treated them the same as us, though we have done a heavy day’s work in all the heat.” He answered one of them and said, “My friend, I am not being unjust to you; did we not agree on one denarius? Take your earnings and go. I choose to pay the last comer as much as I pay you. Have I no right to do what I like with my own? Why be envious because I am generous?” Thus the last will be first, and the first, last.’

The Word of the Lord.