இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 7 ஜனவரி, 2025

January 8th : Gospel His disciples saw him walking on the lake. A Reading from the Holy Gospel according to St. Mark 6 : 45-52

 January 8th :  Gospel 

His disciples saw him walking on the lake.

A Reading from the Holy Gospel according to St. Mark 6 : 45-52 


After the five thousand had eaten and were filled, Jesus made his disciples get into the boat and go on ahead to Bethsaida, while he himself sent the crowd away. After saying goodbye to them he went off into the hills to pray. When evening came, the boat was far out on the lake, and he was alone on the land. He could see they were worn out with rowing, for the wind was against them; and about the fourth watch of the night he came towards them, walking on the lake. He was going to pass them by, but when they saw him walking on the lake they thought it was a ghost and cried out; for they had all seen him and were terrified. But he at once spoke to them, and said, ‘Courage! It is I! Do not be afraid.’ Then he got into the boat with them, and the wind dropped. They were utterly and completely dumbfounded, because they had not seen what the miracle of the loaves meant; their minds were closed.

The Word of the Lord.

January 8th : Responsorial Psalm Psalm 71(72):1-2,10-13 All nations shall fall prostrate before you, O Lord.

 January 8th :   Responsorial Psalm

Psalm 71(72):1-2,10-13 


All nations shall fall prostrate before you, O Lord.

O God, give your judgement to the king,

  to a king’s son your justice,

that he may judge your people in justice

  and your poor in right judgement.

All nations shall fall prostrate before you, O Lord.

The kings of Tarshish and the sea coasts

  shall pay him tribute.

The kings of Sheba and Seba

  shall bring him gifts.

Before him all kings shall fall prostrate,

  all nations shall serve him.

All nations shall fall prostrate before you, O Lord.

For he shall save the poor when they cry

  and the needy who are helpless.

He will have pity on the weak

  and save the lives of the poor.

All nations shall fall prostrate before you, O Lord.

Gospel Acclamation Lk4:17

Alleluia, alleluia!

The Lord has sent me to bring the good news to the poor,

to proclaim liberty to captives.

Alleluia!

January 8th : First Reading As long as we love one another God's love will be complete in us A reading from the first letter of St.John 4: 11-18

 January 8th : First Reading 

As long as we love one another God's love will be complete in us

A reading from the first letter of St.John 4: 11-18 


My dear people,

since God has loved us so much,

we too should love one another.

No one has ever seen God;

but as long as we love one another

God will live in us

and his love will be complete in us.

We can know that we are living in him

and he is living in us

because he lets us share his Spirit.

We ourselves saw and we testify

that the Father sent his Son

as saviour of the world.

If anyone acknowledges that Jesus is the Son of God,

God lives in him, and he in God.

We ourselves have known and put our faith in

God’s love towards ourselves.

God is love

and anyone who lives in love lives in God,

and God lives in him.

Love will come to its perfection in us

when we can face the day of Judgement without fear;

because even in this world

we have become as he is.

In love there can be no fear,

but fear is driven out by perfect love:

because to fear is to expect punishment,

and anyone who is afraid is still imperfect in love.

The Word of the Lord.


சனவரி 8 : நற்செய்தி வாசகம் இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52

 சனவரி  8 :  நற்செய்தி வாசகம்

இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52


ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின் இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.

பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘அது பேய்’ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்.

ஏனெனில் அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 8 : பதிலுரைப் பாடல் திபா 72: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 11) பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

 சனவரி 8 :  பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 11)


பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2

அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. - பல்லவி

10

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.

11

எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். - பல்லவி

12

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.

13

வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 திமொ 3: 16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! 

பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை; விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பட்ட கிறிஸ்துவே, உமக்கு மகிமை. அல்லேலூயா.

சனவரி 8 : முதல் வாசகம் நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18

 சனவரி 8 : முதல் வாசகம்

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு நிலைத்திருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18


அன்பார்ந்தவர்களே,

கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.

அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார்.

கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம். எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

திங்கள், 6 ஜனவரி, 2025

சனவரி 7 : நற்செய்தி வாசகம்இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44

சனவரி  7 :  நற்செய்தி வாசகம்

இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44
அக்காலத்தில்

இயேசு படகிலிருந்து கலிலேயா கடற்கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இதற்குள் நெடு நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்” என்றனர்.

அவர் அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று பதிலளித்தார். அவர்கள், “நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?” என்று கேட்டார்கள். அப்பொழுது அவர், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்” என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என்றார்கள்.

அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 7 : பதிலுரைப் பாடல்திபா 72: 1-2. 3-4ab. 7-8 (பல்லவி: 11)பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

சனவரி  7 :  பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 3-4ab. 7-8 (பல்லவி: 11)

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! - பல்லவி

3
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
4ab
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. - பல்லவி

7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! 

“ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்.” அல்லேலூயா.

சனவரி 7 : முதல் வாசகம்கடவுள் அன்பாய் இருக்கிறார்.திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10

சனவரி  7 :  முதல் வாசகம்

கடவுள் அன்பாய் இருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10
அன்பார்ந்தவர்களே,

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்.

நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 7th : GospelThe feeding of the five thousand.A Reading from the Holy Gospel according to St.Mark 6: 34-44

January 7th :   Gospel

The feeding of the five thousand.

A Reading from the Holy Gospel according to St.Mark 6: 34-44
As Jesus stepped ashore he saw a large crowd; and he took pity on them because they were like sheep without a shepherd, and he set himself to teach them at some length. By now it was getting very late, and his disciples came up to him and said, ‘This is a lonely place and it is getting very late. So send them away, and they can go to the farms and villages round about, to buy themselves something to eat.’ He replied, ‘Give them something to eat yourselves.’ They answered, ‘Are we to go and spend two hundred denarii on bread for them to eat?’ ‘How many loaves have you?’ he asked. ‘Go and see.’ And when they had found out they said, ‘Five, and two fish.’ Then he ordered them to get all the people together in groups on the green grass, and they sat down on the ground in squares of hundreds and fifties. Then he took the five loaves and the two fish, raised his eyes to heaven and said the blessing; then he broke the loaves and handed them to his disciples to distribute among the people. He also shared out the two fish among them all. They all ate as much as they wanted. They collected twelve basketfuls of scraps of bread and pieces of fish. Those who had eaten the loaves numbered five thousand men.

The Gospel of the Lord.