இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 19 பிப்ரவரி, 2025

பிப்ரவரி 20 : நற்செய்தி வாசகம் மெசியாவாகிய மானிட மகன் பாடுகள் பட வேண்டும். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33

 பிப்ரவரி 20 :  நற்செய்தி வாசகம்

மெசியாவாகிய மானிட மகன் பாடுகள் பட வேண்டும்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-33


அக்காலத்தில்

இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

“மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 20 : பதிலுரைப் பாடல் திபா 102: 15-17. 18,20,19. 28,22,21 (பல்லவி: 19b)

 பிப்ரவரி 20 :  பதிலுரைப் பாடல்

திபா 102: 15-17. 18,20,19. 28,22,21 (பல்லவி: 19b)


பல்லவி: ஆண்டவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.

15

வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.

16

ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.

17

திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். - பல்லவி

18

இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.

20

அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.

19

ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். - பல்லவி

28

உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்!

22

அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர்.

21

சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.


பிப்ரவரி 20 : முதல் வாசகம் என் உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 1-13

 பிப்ரவரி 20 :  முதல் வாசகம்

என் உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 9: 1-13


அந்நாள்களில்

கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள். மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. நடமாடி உயிர்வாழும் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசுமையான செடிகளை உணவாகத் தந்ததுபோல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.

இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள். உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன். ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார். நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்."

கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: “இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழி மரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.” அப்பொழுது கடவுள், “எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்கும் இடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 20th : Gospel The way you think is not God's way, but man's A Reading from the Holy Gospel according to St.Mark 8: 27-33

 February 20th :  Gospel 

The way you think is not God's way, but man's

A Reading from the Holy Gospel according to St.Mark 8: 27-33 


Jesus and his disciples left for the villages round Caesarea Philippi. On the way he put this question to his disciples, ‘Who do people say I am?’ And they told him. ‘John the Baptist,’ they said ‘others Elijah; others again, one of the prophets.’ ‘But you,’ he asked ‘who do you say I am?’ Peter spoke up and said to him, ‘You are the Christ.’ And he gave them strict orders not to tell anyone about him.

  And he began to teach them that the Son of Man was destined to suffer grievously, to be rejected by the elders and the chief priests and the scribes, and to be put to death, and after three days to rise again; and he said all this quite openly. Then, taking him aside, Peter started to remonstrate with him. But, turning and seeing his disciples, he rebuked Peter and said to him, ‘Get behind me, Satan! Because the way you think is not God’s way but man’s.’

The Word of the Lord.


February 20th : Responsorial Psalm Psalm 101(102):16-21,29,22-23

 February 20th :  Responsorial Psalm

Psalm 101(102):16-21,29,22-23 


The Lord looked down from heaven to the earth.

The nations shall fear the name of the Lord

  and all the earth’s kings your glory,

when the Lord shall build up Zion again

  and appear in all his glory.

Then he will turn to the prayers of the helpless;

  he will not despise their prayers.

The Lord looked down from heaven to the earth.

Let this be written for ages to come

  that a people yet unborn may praise the Lord;

for the Lord leaned down from his sanctuary on high.

  He looked down from heaven to the earth

that he might hear the groans of the prisoners

  and free those condemned to die.

The Lord looked down from heaven to the earth.

The sons of your servants shall dwell untroubled

  and their race shall endure before you

that the name of the Lord may be proclaimed in Zion

  and his praise in the heart of Jerusalem,

when peoples and kingdoms are gathered together

  to pay their homage to the Lord.

The Lord looked down from heaven to the earth.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

By his own choice the Father made us his children

by the message of the truth,

so that we should be a sort of first-fruits

of all that he created.

Alleluia!

February 20th : First Reading The sign of the Covenant A Reading from the Book of Genesis 9: 1-13

 February 20th :  First Reading 

The sign of the Covenant

A Reading from the Book of Genesis 9: 1-13 


God blessed Noah and his sons, saying to them, ‘Be fruitful, multiply and fill the earth. Be the terror and the dread of all the wild beasts and all the birds of heaven, of everything that crawls on the ground and all the fish of the sea; they are handed over to you. Every living and crawling thing shall provide food for you, no less than the foliage of plants. I give you everything, with this exception: you must not eat flesh with life, that is to say blood, in it. I will demand an account of your life-blood. I will demand an account from every beast and from man. I will demand an account of every man’s life from his fellow men.

‘He who sheds man’s blood

shall have his blood shed by man,

for in the image of God

man was made.

‘As for you, be fruitful, multiply, teem over the earth and be lord of it.’

  God spoke to Noah and his sons, ‘See, I establish my Covenant with you, and with your descendants after you; also with every living creature to be found with you, birds, cattle and every wild beast with you: everything that came out of the ark, everything that lives on the earth. I establish my Covenant with you: no thing of flesh shall be swept away again by the waters of the flood. There shall be no flood to destroy the earth again.’

  God said, ‘Here is the sign of the Covenant I make between myself and you and every living creature with you for all generations: I set my bow in the clouds and it shall be a sign of the Covenant between me and the earth.’

The Word of the Lord.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

February 19th : Gospel The blind man was cured and could see everything distinctly A Reading from the Holy Gospel according to St.Mark 8: 22-26

 February 19th : Gospel 

The blind man was cured and could see everything distinctly

A Reading from the Holy Gospel according to St.Mark 8: 22-26 


Jesus and his disciples came to Bethsaida, and some people brought to him a blind man whom they begged him to touch. He took the blind man by the hand and led him outside the village. Then putting spittle on his eyes and laying his hands on him, he asked, ‘Can you see anything?’ The man, who was beginning to see, replied, ‘I can see people; they look like trees to me, but they are walking about.’ Then he laid his hands on the man’s eyes again and he saw clearly; he was cured, and he could see everything plainly and distinctly. And Jesus sent him home, saying, ‘Do not even go into the village.’

The Word of the Lord.


February 19th : Responsorial Psalm Psalm 115(116):12-15,18-19

 February 19th : Responsorial Psalm

Psalm 115(116):12-15,18-19 


A thanksgiving sacrifice I make to you, O Lord.

or

Alleluia!

How can I repay the Lord

  for his goodness to me?

The cup of salvation I will raise;

  I will call on the Lord’s name.

A thanksgiving sacrifice I make to you, O Lord.

or

Alleluia!

My vows to the Lord I will fulfil

  before all his people.

O precious in the eyes of the Lord

  is the death of his faithful.

A thanksgiving sacrifice I make to you, O Lord.

or

Alleluia!

My vows to the Lord I will fulfil

  before all his people,

in the courts of the house of the Lord,

  in your midst, O Jerusalem.

A thanksgiving sacrifice I make to you, O Lord.

or

Alleluia!

Gospel Acclamation Ps118:105

Alleluia, alleluia!

Your word is a lamp for my steps

and a light for my path.

Alleluia!

February 19th : First Reading The dove returns A Reading from the Book of Genesis 8: 6-13, 20-22

 February 19th : First Reading

The dove returns

A Reading from the Book of Genesis 8: 6-13, 20-22 


At the end of forty days Noah opened the porthole he had made in the ark and he sent out the raven. This went off, and flew back and forth until the waters dried up from the earth. Then he sent out the dove, to see whether the waters were receding from the surface of the earth. The dove, finding nowhere to perch, returned to him in the ark, for there was water over the whole surface of the earth; putting out his hand he took hold of it and brought it back into the ark with him. After waiting seven more days, again he sent out the dove from the ark. In the evening, the dove came back to him and there it was with a new olive-branch in its beak. So Noah realised that the waters were receding from the earth. After waiting seven more days he sent out the dove, and now it returned to him no more.

  It was in the six hundred and first year of Noah’s life, in the first month and on the first of the month, that the water dried up from the earth. Noah lifted back the hatch of the ark and looked out. The surface of the ground was dry!

  Noah built an altar for the Lord, and choosing from all the clean animals and all the clean birds he offered burnt offerings on the altar. The Lord smelt the appeasing fragrance and said to himself, ‘Never again will I curse the earth because of man, because his heart contrives evil from his infancy. Never again will I strike down every living thing as I have done.

‘As long as earth lasts,

sowing and reaping,

cold and heat,

summer and winter,

day and night

shall cease no more.’

The Word of the Lord.

பிப்ரவரி 19 : நற்செய்தி வாசகம் பார்வை பெற்றவர் அனைத்தையும் தெளிவாகக் கண்டார். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 22-26

 பிப்ரவரி 19 :  நற்செய்தி வாசகம்

பார்வை பெற்றவர் அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 22-26


அக்காலத்தில்

இயேசுவும் சீடர்களும் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார்.

இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், “ஊரில் நுழைய வேண்டாம்” என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.