இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 12 மார்ச், 2025

March 13th : Gospel Ask, and it will be given to you; search, and you will findA Reading from the Holy Gospel according to St.Matthew 7:7-12

March 13th :  Gospel 

Ask, and it will be given to you; search, and you will find

A Reading from the Holy Gospel according to St.Matthew 7:7-12 
Jesus said to his disciples, ‘Ask, and it will be given to you; search, and you will find; knock, and the door will be opened to you. For the one who asks always receives; the one who searches always finds; the one who knocks will always have the door opened to him. Is there a man among you who would hand his son a stone when he asked for bread? Or would hand him a snake when he asked for a fish? If you, then, who are evil, know how to give your children what is good, how much more will your Father in heaven give good things to those who ask him!
  ‘So always treat others as you would like them to treat you; that is the meaning of the Law and the Prophets.’

The Word of the Lord.

March 13th : Responsorial PsalmPsalm 137(138):1-3,7-8 On the day I called, you answered me, O Lord.

March 13th :  Responsorial Psalm

Psalm 137(138):1-3,7-8 

On the day I called, you answered me, O Lord.
I thank you, Lord, with all my heart:
  you have heard the words of my mouth.
In the presence of the angels I will bless you.
  I will adore before your holy temple.

On the day I called, you answered me, O Lord.

I thank you for your faithfulness and love,
  which excel all we ever knew of you.
On the day I called, you answered;
  you increased the strength of my soul.

On the day I called, you answered me, O Lord.

You stretch out your hand and save me,
  your hand will do all things for me.
Your love, O Lord, is eternal,
  discard not the work of your hands.

On the day I called, you answered me, O Lord.

Gospel Acclamation  

Joel2:12-13

Glory to you, O Christ, you are the Word of God!
Now, now – it is the Lord who speaks –
come back to me with all your heart,
for I am all tenderness and compassion.
Glory to you, O Christ, you are the Word of God!

March 13th : First Reading I am alone, Lord, and have no-one but youA reading from the book of Esther 4:17

March 13th :  First Reading 

I am alone, Lord, and have no-one but you

A reading from the book of Esther 4:17 
Queen Esther took refuge with the Lord in the mortal peril which had overtaken her. She besought the Lord God of Israel in these words:
‘My Lord, our King, the only one,
come to my help, for I am alone
and have no helper but you
and am about to take my life in my hands.
‘I have been taught from my earliest years, in the bosom of my family,
that you, Lord, chose
Israel out of all the nations
and our ancestors out of all the people of old times
to be your heritage for ever;
and that you have treated them as you promised.
‘Remember, Lord; reveal yourself
in the time of our distress.
‘As for me, give me courage,
King of gods and master of all power.
Put persuasive words into my mouth
when I face the lion;
change his feeling into hatred for our enemy,
that the latter and all like him may be brought to their end.
‘As for ourselves, save us by your hand,
and come to my help, for I am alone
and have no one but you, Lord.’

The Word of the Lord.

மார்ச் 13 : நற்செய்தி வாசகம்கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12

மார்ச் 13 :  நற்செய்தி வாசகம்

கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 13 : பதிலுரைப் பாடல்திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: 3a)பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.

மார்ச் 13 :  பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: 3a)

பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.
1
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a
உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். - பல்லவி

2bc
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3
நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். - பல்லவி

7c
உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8
நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 51: 10a, 12a

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.

மார்ச் 13 : முதல் வாசகம்ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு துணையற்ற எனக்கு உதவி செய்யும்.எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t

மார்ச் 13 :  முதல் வாசகம்

ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு துணையற்ற எனக்கு உதவி செய்யும்.

எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t
சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார். “என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன். ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும் அவர்களின் மூதாதையர் அனைவரிடையிலிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும், நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினீர் என்றும், நான் பிறந்த நாள்தொட்டு என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்; எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும். தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே, அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே, எனக்குத் துணிவைத் தாரும். சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்; எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்; இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும்.

ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்; ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செவ்வாய், 11 மார்ச், 2025

March 12th : Gospel As Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be a sign A reading from the Holy Gospel according to St.Luke 11: 29-32

 March 12th :  Gospel  

As Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be a sign

A reading from the Holy Gospel according to St.Luke 11: 29-32


The crowds got even bigger, and Jesus addressed them:

  ‘This is a wicked generation; it is asking for a sign. The only sign it will be given is the sign of Jonah. For just as Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be to this generation. On Judgement day the Queen of the South will rise up with the men of this generation and condemn them, because she came from the ends of the earth to hear the wisdom of Solomon; and there is something greater than Solomon here. On Judgement day the men of Nineveh will stand up with this generation and condemn it, because when Jonah preached they repented; and there is something greater than Jonah here.’

The Word of the Lord.


March 12th : Responsorial Psalm Psalm 50(51):3-4,12-13,18-19

 March 12th :  Responsorial Psalm

Psalm 50(51):3-4,12-13,18-19 


A humbled, contrite heart, O God, you will not spurn.

Have mercy on me, God, in your kindness.

  In your compassion blot out my offence.

O wash me more and more from my guilt

  and cleanse me from my sin.

A humbled, contrite heart, O God, you will not spurn.

A pure heart create for me, O God,

  put a steadfast spirit within me.

Do not cast me away from your presence,

  nor deprive me of your holy spirit.

A humbled, contrite heart, O God, you will not spurn.

For in sacrifice you take no delight,

  burnt offering from me you would refuse,

my sacrifice, a contrite spirit.

  A humbled, contrite heart you will not spurn.

A humbled, contrite heart, O God, you will not spurn.

Gospel Acclamation Ezk33:11

Glory and praise to you, O Christ!

I take pleasure, not in the death of a wicked man

– it is the Lord who speaks –

but in the turning back of a wicked man

who changes his ways to win life.

Glory and praise to you, O Christ!


March 12th : First reading The Ninevites repent, and God spares them A reading from the book of Jonah 3: 1-10

 March 12th :  First reading  

The Ninevites repent, and God spares them

A reading from the book of Jonah 3: 1-10


The word of the Lord was addressed to Jonah: ‘Up!’ he said ‘Go to Nineveh, the great city, and preach to them as I told you to.’ Jonah set out and went to Nineveh in obedience to the word of the Lord. Now Nineveh was a city great beyond compare: it took three days to cross it. Jonah went on into the city, making a day’s journey. He preached in these words, ‘Only forty days more and Nineveh is going to be destroyed.’ And the people of Nineveh believed in God; they proclaimed a fast and put on sackcloth, from the greatest to the least. The news reached the king of Nineveh, who rose from his throne, took off his robe, put on sackcloth and sat down in ashes. A proclamation was then promulgated throughout Nineveh, by decree of the king and his ministers, as follows: ‘Men and beasts, herds and flocks, are to taste nothing; they must not eat, they must not drink water. All are to put on sackcloth and call on God with all their might; and let everyone renounce his evil behaviour and the wicked things he has done. Who knows if God will not change his mind and relent, if he will not renounce his burning wrath, so that we do not perish?’ God saw their efforts to renounce their evil behaviour, and God relented: he did not inflict on them the disaster which he had threatened.

The Word of the Lord.

மார்ச் 12 : நற்செய்தி வாசகம் இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

 மார்ச்  12 :  நற்செய்தி வாசகம்

இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32


அக்காலத்தில்

மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.

தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!

தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

ஆண்டவரின் அருள்வாக்கு.