இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

ஏப்ரல் 14 : முதல் வாசகம்நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26

ஏப்ரல் 14 :  முதல் வாசகம்

நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26
அந்நாள்களில்

தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர். ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, “நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளை யெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள்.

தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டுவருமாறு ஆள் அனுப்பினார்கள். அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பி வந்து, “நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டு இருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை” என்று அறிவித்தார்கள்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர். அப்பொழுது ஒருவர் வந்து, “நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்” என்று அவர்களிடம் அறிவித்தார். உடனே காவல் தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 14th : Gospel God sent his Son into the world so that through him the world might be saved.A Reading from the Holy Gospel according to St. John 3: 16-21

April 14th : Gospel 

God sent his Son into the world so that through him the world might be saved.

A Reading from the Holy Gospel according to St. John 3: 16-21 
Jesus said to Nicodemus:
‘God loved the world so much that he gave his only Son,
so that everyone who believes in him may not be lost
but may have eternal life.
For God sent his Son into the world
not to condemn the world,
but so that through him the world might be saved.
No one who believes in him will be condemned;
but whoever refuses to believe is condemned already,
because he has refused to believe in the name of God’s only Son.
On these grounds is sentence pronounced:
that though the light has come into the world
men have shown they prefer darkness to the light
because their deeds were evil.
And indeed, everybody who does wrong
hates the light and avoids it,
for fear his actions should be exposed;
but the man who lives by the truth comes out into the light,
so that it may be plainly seen that what he does is done in God.’

The Gospel of the Lord.

April 14th : Responsorial PsalmPsalm 33(34):2-9 This poor man called and the Lord heard him.or Alleluia!

April 14th :  Responsorial Psalm

Psalm 33(34):2-9 

This poor man called and the Lord heard him.
or Alleluia!
I will bless the Lord at all times,
  his praise always on my lips;
in the Lord my soul shall make its boast.
  The humble shall hear and be glad.

This poor man called and the Lord heard him.
or Alleluia!

Glorify the Lord with me.
  Together let us praise his name.
I sought the Lord and he answered me;
  from all my terrors he set me free.

This poor man called and the Lord heard him.
or Alleluia!

Look towards him and be radiant;
  let your faces not be abashed.
This poor man called, the Lord heard him
  and rescued him from all his distress.

This poor man called and the Lord heard him.
or Alleluia!

The angel of the Lord is encamped
  around those who revere him, to rescue them.
Taste and see that the Lord is good.
  He is happy who seeks refuge in him.

This poor man called and the Lord heard him.
or Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Christ has risen and shone upon us
whom he redeemed with his blood.
Alleluia!

April 14th : First Reading The men you imprisoned are in the Temple, preaching to the people.A Reading from the Acts of Apostles 5 :17-26.

April 14th :  First Reading 

The men you imprisoned are in the Temple, preaching to the people.

A Reading from the Acts of Apostles 5 :17-26. 
The high priest intervened with all his supporters from the party of the Sadducees. Prompted by jealousy, they arrested the apostles and had them put in the common gaol.
  But at night the angel of the Lord opened the prison gates and said as he led them out, ‘Go and stand in the Temple, and tell the people all about this new Life.’ They did as they were told; they went into the Temple at dawn and began to preach.
  When the high priest arrived, he and his supporters convened the Sanhedrin – this was the full Senate of Israel – and sent to the gaol for them to be brought. But when the officials arrived at the prison they found they were not inside, so they went back and reported, ‘We found the gaol securely locked and the warders on duty at the gates, but when we unlocked the door we found no one inside.’ When the captain of the Temple and the chief priests heard this news they wondered what this could mean. Then a man arrived with fresh news. ‘At this very moment’ he said, ‘the men you imprisoned are in the Temple. They are standing there preaching to the people.’ The captain went with his men and fetched them. They were afraid to use force in case the people stoned them.

The Word of the Lord.

திங்கள், 12 ஏப்ரல், 2021

ஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-15

ஏப்ரல் 13 :  நற்செய்தி வாசகம்

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-15
அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.

நிக்கதேம் அவரைப் பார்த்து, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்?

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்திபா 93 : 1ab. 1c-2. 5 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவர் ஆட்சிசெய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்

https://youtu.be/FSwVBnIDVTAஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்

திபா 93 : 1ab. 1c-2. 5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவர் ஆட்சிசெய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

அல்லது: அல்லேலூயா.
1ab
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். - பல்லவி

1c
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.
2
உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். - பல்லவி

5
உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 15

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகனில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அவர் உயர்த்தப்பட வேண்டும். அல்லேலூயா.

ஏப்ரல் 13 : முதல் வாசகம்ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37

ஏப்ரல் 13 :  முதல் வாசகம்

ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37

அந்நாள்களில்
நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.

தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள், ‘ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்’ என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

TUESDAY APRIL 13, 2021 📖GOSPEL "No one has ascended into heaven except he who descended from heaven, the Son of man" A Reading From The Holy Gospel According To John (3, 7b-15)

TUESDAY APRIL 13, 2021 

📖GOSPEL 

"No one has ascended into heaven except he who descended from heaven, the Son of man" 

A Reading From The Holy Gospel According To John (3, 7b-15) 
At that time, Jesus was saying to Nicodemus, “You must be born from above. The wind blows where it wants: you hear its voice, but you do not know where it comes from or where it is going. So it is with those who are born by the breath of the Spirit. Nicodemus continued: "How can this be done? "Jesus answered him:" Are you a master who teaches Israel and you do not know these things? Amen, amen, I say to you, we speak of what we know, we testify of what we have seen, and you do not receive our testimony. If you don't believe when I tell you about the things of earth, how will you believe when I tell you about the things of heaven? For no one has ascended into heaven except he who descended from heaven, the Son of man. As the bronze serpent was lifted up by Moses in the wilderness, thus must the Son of man be lifted up, that in him everyone who believes may have eternal life. " 

The Gospel of the Lord.

TUESDAY APRIL 13, 2021 RESPONSORIAL Respons : The Lord is king; he dressed himself in magnificence. OR Hallelujah! Psalm 92 (93)

TUESDAY APRIL 13, 2021 

RESPONSORIAL 

Respons : The Lord is king; he dressed himself in magnificence. OR Hallelujah! 

Psalm 92 (93) 
The Lord is king;
he is clothed in magnificence,
the Lord has put on his strength. R 

And the earth stands firm, steadfast;
from the start your throne has stood
firm, you have always been. R 

Your wills are truly immutable:
holiness fills your house,
Lord, for the rest of time. R 

_______ 

🌿Gospel Acclamation. 

Hallelujah, Hallelujah! He must be exalted in order that all who believe in the Son of Man may have life. Hallelujah. 

____________________________.,

TUESDAY APRIL 13, 2021 FIRST READING "One heart and one soul" Reading from the book of Acts of the Apostles (4, 32-37),

TUESDAY APRIL 13, 2021 

FIRST READING 

"One heart and one soul" 

Reading from the book of Acts of the Apostles (4, 32-37), 
The multitude of those who had become believers had one heart and one soul; and no one said that his possessions belonged to him, but they had everything in common. The Apostles bore witness to the resurrection of the Lord Jesus with great power, and abundant grace was upon them all. None of them was destitute, for all those who owned estates or houses sold them, and they brought the proceeds of the sale to deposit at the feet of the Apostles; then it was distributed according to individual needs.
There was a Levite from Cyprus, Joseph, nicknamed Barnabas by the Apostles, which translates as "man of comfort." He sold a field he owned and brought the money from it, which he deposited at the feet of the Apostles. 

The Word of the Lord.
_________________________________.