இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 14 : நற்செய்தி வாசகம்சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 13-15

ஆகஸ்ட் 14 :  நற்செய்தி வாசகம்

சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 13-15
அக்காலத்தில்

சிறு பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஆகஸ்ட் 14 : பதிலுரைப் பாடல்திபா 16: 1-2a,5. 7-8. 11 (பல்லவி: 5a)பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

ஆகஸ்ட் 14 :  பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2a,5. 7-8. 11 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2a
நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி

7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! 

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 14 : முதல் வாசகம்யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள்.யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 14-29

ஆகஸ்ட் 14 :  முதல் வாசகம்

யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 14-29
அந்நாள்களில்

யோசுவா மக்களிடம் கூறியது: “ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள். நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள். ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்."

மக்கள் மறுமொழியாக, “ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்” என்றனர்.

யோசுவா மக்களிடம், “உங்களால் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய இயலாது. ஏனெனில் அவர் தூய கடவுள். அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள். உங்கள் குற்றங்களையும் பாவங்களையும் அவர் மன்னிக்க மாட்டார். ஆனால் நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் அவர் மீண்டும் உங்களுக்குத் தீங்கு செய்வார். உங்களுக்கு நன்மை செய்த அவர் உங்களை அழித்துவிடுவார்” என்றார்.

மக்கள் யோசுவாவிடம், “இல்லை, நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்” என்றனர். யோசுவா மக்களிடம் “ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அவரை நீங்களே தெரிந்துகொண்டீர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகள்” என்றார். அவர்கள், “நாங்களே சாட்சிகள்” என்றனர். இப்பொழுது உங்கள் நடுவில் உள்ள வேற்றுத் தெய்வங்களை விலக்கி விடுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடம் உங்கள் இதயங்களைத் திருப்புங்கள்” என்றார். மக்கள் யோசுவாவிடம், “எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் ஊழியம் புரிவோம். அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்” என்றனர்.

அன்று யோசுவா மக்களுக்காக உடன்படிக்கை செய்தார். செக்கேமில் அவர் அவர்களுக்கு விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொடுத்தார். யோசுவா இவ்வார்த்தைகளைக் கடவுளின் திருச்சட்ட நூலில் எழுதினார். ஒரு பெரும் கல்லை எடுத்து அதை ஆண்டவரின் திருத்தலத்தில் ஒரு கருவாலி மரத்தின் கீழ் நாட்டினார். யோசுவா எல்லா மக்களிடமும், “இதோ! இக்கல் நமக்கு எதிரான சான்றாக இருக்கும். ஏனெனில் ஆண்டவர் நம்மோடு பேசிய எல்லாவற்றையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்” என்றார். யோசுவா மக்களை அவரவர் உரிமைச் சொத்தாகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப்பத்து.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 14th : GospelDo not stop the little children coming to me.A Reading from the Holy Gospel according to St.Matthew 19:13-15

August 14th  :   Gospel

Do not stop the little children coming to me.

A Reading from the Holy Gospel according to St.Matthew 19:13-15 
People brought little children to Jesus, for him to lay his hands on them and say a prayer. The disciples turned them away, but Jesus said, ‘Let the little children alone, and do not stop them coming to me; for it is to such as these that the kingdom of heaven belongs.’ Then he laid his hands on them and went on his way.

The Word of the Lord.

August 14th : Responsorial PsalmPsalm 15(16):1-2,5,7-8,11

August 14th  :   Responsorial Psalm

Psalm 15(16):1-2,5,7-8,11 
You are my inheritance, O Lord.

Preserve me, God, I take refuge in you.
  I say to the Lord: ‘You are my God.’
O Lord, it is you who are my portion and cup;
  it is you yourself who are my prize.

You are my inheritance, O Lord.

I will bless the Lord who gives me counsel,
  who even at night directs my heart.
I keep the Lord ever in my sight:
  since he is at my right hand, I shall stand firm.

You are my inheritance, O Lord.

You will show me the path of life,
  the fullness of joy in your presence,
  at your right hand happiness for ever.

You are my inheritance, O Lord.

Gospel Acclamation cf.Col3:16a,17

Alleluia, alleluia!

Let the message of Christ, in all its richness,
find a home with you;
through him give thanks to God the Father.
Alleluia!

August 14th: First Reading A Reading from the Book of Joshua 24:14-29 .'The Lord is a holy God, a jealous God

August 14th:  First Reading 

A Reading from the Book of Joshua 24:14-29 .

'The Lord is a holy God, a jealous God'
Joshua said to all the people, ‘Fear the Lord and serve him perfectly and sincerely; put away the gods that your ancestors served beyond the River and in Egypt, and serve the Lord. But if you will not serve the Lord, choose today whom you wish to serve, whether the gods that your ancestors served beyond the River, or the gods of the Amorites in whose land you are now living. As for me and my House, we will serve the Lord.’
  The people answered, ‘We have no intention of deserting the Lord and serving other gods! Was it not the Lord our God who brought us and our ancestors out of the land of Egypt, the house of slavery, who worked those great wonders before our eyes and preserved us all along the way we travelled and among all the peoples through whom we journeyed? What is more, the Lord drove all those peoples out before us, as well as the Amorites who used to live in this country. We too will serve the Lord, for he is our God.’
  Then Joshua said to the people, ‘You cannot serve the Lord, because he is a holy God, he is a jealous God who will not forgive your transgressions or your sins. If you desert the Lord to follow alien gods he in turn will afflict and destroy you after the goodness he has shown you.’ The people answered Joshua, ‘No; it is the Lord we wish to serve.’ Then Joshua said to the people, ‘You are witnesses against yourselves that you have chosen the Lord, to serve him.’ They answered, ‘We are witnesses.’ ‘Then cast away the alien gods among you and give your hearts to the Lord the God of Israel!’ The people answered Joshua, ‘It is the Lord our God we choose to serve; it is his voice that we will obey.’
  That day, Joshua made a covenant for the people; he laid down a statute and ordinance for them at Shechem. Joshua wrote these words in the Book of the Law of God. Then he took a great stone and set it up there, under the oak in the sanctuary of the Lord, and Joshua said to all the people, ‘See! This stone shall be a witness against us because it has heard all the words that the Lord has spoken to us: it shall be a witness against you in case you deny your God.’ Then Joshua sent the people away, and each returned to his own inheritance.
  After these things Joshua son of Nun, the servant of the Lord, died; he was a hundred and ten years old.

The Word of the Lord.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 13 : நற்செய்தி வாசகம்உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

ஆகஸ்ட்  13 :  நற்செய்தி வாசகம்

உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12
அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டனர்.

அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?” என்று கேட்டார்.

மேலும் அவர், “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள்.

அதற்கு அவர், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள். அதற்கு அவர், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஆகஸ்ட் 13 : பதிலுரைப் பாடல்திபா 136: 1-3. 16-18. 21,22,24 (பல்லவி: 1c)பல்லவி: என்றும் உள்ளது ஆண்டவரது பேரன்பு.

ஆகஸ்ட்  13 :  பதிலுரைப் பாடல்

திபா 136: 1-3. 16-18. 21,22,24 (பல்லவி: 1c)

பல்லவி: என்றும் உள்ளது ஆண்டவரது பேரன்பு.
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்.
2
தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
3
தலைவர்களின் தலைவருக்கு நன்றி செலுத்துங்கள். - பல்லவி

16
பாலை நிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்.
17
மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்.
18
வலிமைமிகு மன்னர்களைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள். - பல்லவி

21
அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்.
22
அதைத் தம் அடியார்களாகிய இஸ்ரயேலர்க்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்.
24
நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 தெச 2: 13

அல்லேலூயா, அல்லேலூயா! 

கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.

ஆகஸ்ட் 13 : முதல் வாசகம்உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன்.யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-13

ஆகஸ்ட் 13 :  முதல் வாசகம்

உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-13
அந்நாள்களில்

செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது:

“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: ‘முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர். உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை நதிக்கு அப்பாலிருந்து அழைத்து வந்து, கானான் நாடு முழுவதிலும் நடத்திச் சென்றேன்; அவனது வழிமரபைப் பெருக்கினேன்; அவனுக்கு ஈசாக்கை அளித்தேன். ஈசாக்கிற்கு யாக்கோபையும் ஏசாவையும் அளித்தேன்; ஏசாவுக்கு செபீர் மலையை உடைமையாக அளித்தேன். யாக்கோபும் அவன் மக்களும் எகிப்திற்குச் சென்றனர்.

மோசேயையும் ஆரோனையும் அனுப்பி அங்கே என் செயல்களின் மூலம் எகிப்தை வதைத்தேன். பின்னர் உங்களை வெளியே கொணர்ந்தேன். உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன். அவர்கள் கடலுக்குள் சென்றார்கள். எகிப்தியர் தேரில் குதிரைகளுடன் செங்கடலுக்குள் உங்கள் தந்தையரைத் துரத்திச் சென்றனர். அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர். அவர் அவர்களுக்கும் எகிப்தியருக்கும் இடையில் இருளை வைத்தார். அவர் எகிப்தியரைக் கடலில் அமிழ்த்தினார். நான் எகிப்தியருக்குச் செய்ததை அவர்கள் கண்கள் கண்டன. நீங்கள் நீண்ட காலம் பாலைநிலத்தில் வாழ்ந்தீர்கள்.

யோர்தானுக்குக் கிழக்கில் வாழும் எமோரியரின் நாட்டுக்கு உங்களைக் கொண்டு வந்தேன். அவர்கள் உங்களுடன் போரிட்டார்கள். நான் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்தேன். அவர்களது நிலத்தை நீங்கள் உடைமையாக்கிக் கொண்டீர்கள். உங்கள் முன்னிருந்து அவர்களை அழித்து ஒழித்தேன். மோவாபின் அரசன் சிப்போரின் மகன் பாலாக்கு இஸ்ரயேலுக்கு எதிராகப் படை திரட்டிப் போர் தொடுத்தான். உங்களைச் சபிக்குமாறு பேகோரின் மகன் பிலயாமை அழைக்க ஆள் அனுப்பினான். நான் பிலயாமுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை. அவன் உங்களுக்கு ஆசி வழங்கினான். உங்களைப் பாலாக்கின் கையினின்று விடுவித்தேன்.

நீங்கள் யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள். எரிகோவின் மக்களும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், இத்தியரும், கிர்காசியரும், இவ்வியரும், எபூசியரும், உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அவர்களையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன். நான் உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்பினேன். அவை உங்கள் முன்னிருந்து இரு எமோரிய அரசர்களை விரட்டின. இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று; உங்கள் அம்பாலும் அன்று. நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

Gospel of Jesus Christ according to Saint Matthew 19, 3-12

GOSPEL 

“It was because of the hardness of your heart that Moses allowed you to send your wives away. But in the beginning it was not so ” 
Alleluia. Alleluia.
Accept the word of God:
for what it really is:
not the word of men,
but the word of God.
Alleluia. (cf. 1 Thess 2:13) 

Gospel of Jesus Christ according to Saint Matthew 19, 3-12 
At that time
    the Pharisees came to Jesus to test him;
they asked him:
"Is it lawful for a man to dismiss his wife
for any reason?" "
    He replied:
" Have you not read this?
From the beginning, the Creator made them male and female?
    and said,
“Because of this, a man will leave his father and mother,
he will be attached to his wife,
and they will both become one flesh. ”
    So they are no longer two, but one flesh.
So, what God has united,
may not be separated by man! "
    The Pharisees replied:
" Why then did Moses command
delivery of a divorce certificate before repudiation? "
    Jesus answered:
" It is because of your hardness of heart
Moses allowed you to send your wives.
But in the beginning it was not so.
    But I tell you:
if someone sends his wife away
- except in the case of an illegitimate union -
and he marries another,
he is adultery. "
    His disciples say to him:
" If such is the situation of a man
in relation to his wife, it is
better not to marry. "
    He answered them,
" All can not receive this word,
but only those to whom it is given.
    There are people who do not marry
because, from birth, they are incapable of doing so;
there are some who cannot get married
because they have been mutilated by men;
there are those who have chosen not to marry
because of the kingdom of Heaven.
He who can understand, let him understand! " 

            - Let us acclaim the Word of God.