இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 13 ஜனவரி, 2022

சனவரி 14 : முதல் வாசகம்நீங்கள் தேர்ந்துகொண்ட அரசனுக்கு எதிராய் முறையிடுவீர்கள்; ஆண்டவர் உங்களுக்குச் செவிமடுக்கமாட்டார்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 10-22a

சனவரி  14  :   முதல் வாசகம்

நீங்கள் தேர்ந்துகொண்ட அரசனுக்கு எதிராய் முறையிடுவீர்கள்; ஆண்டவர் உங்களுக்குச் செவிமடுக்கமாட்டார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 10-22a
அந்நாள்களில்

இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடிச் சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர். அவர்கள் அவரிடம், “இதோ உமக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறைகளில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்” என்று கேட்டுக்கொண்டனர். ‘எங்களுக்கு நீதி வழங்க ஓர் அரசனைத் தாரும்’ என்று அவர்கள் கேட்டது, சாமுவேலுக்குத் தீயதெனப் பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டார். ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டனர்.”

ஓர் அரசன் வேண்டும் என்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார்: “உங்கள் மீது ஆட்சிசெய்யும் அரசனின் உரிமைகளாவன: அவன் உங்கள் புதல்வர்களைத் தன் தேரோட்டிகளாகவும் தன் குதிரை வீரர்களாகவும் வைத்துக்கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்குமுன் ஓடச் செய்வான். அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஐம்பதின்மர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விளைச்சலை அறுவடை செய்பவராகவும், தன் போர்க் கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான். மேலும் அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளத் தைலம் செய்கிறவர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சுடுபவர்களாகவும் வைத்துக்கொள்வான். அவன் உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலருக்குக் கொடுப்பான். உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு தன் காரியத் தலைவருக்கும் அலுவலருக்கும் கொடுப்பான். உங்கள் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றையும் உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான். உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்குப் பணியாளர்களாய் இருப்பீர்கள். அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்துகொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீர்கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டார்.”

மக்களோ சாமுவேலின் குரலுக்குச் செவிகொடுக்க மறுத்து, “இல்லை, எங்களுக்குக் கட்டாயமாய் ஓர் அரசன் வேண்டும். அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னின்று நடத்துவார்” என்றனர். மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டுவைத்தார். ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “அவர்கள் குரலுக்குச் செவிகொடுத்து, அவர்கள்மீது ஓர் அரசனை ஆளச் செய்”.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 14th : Gospel The Son of Man has authority on earth to forgive sins.A Reading from the Holy Gospel according to St. Mark 2: 1-12

January 14th :  Gospel 

The Son of Man has authority on earth to forgive sins.

A Reading from the Holy Gospel according to St. Mark 2: 1-12 
When Jesus returned to Capernaum, word went round that he was back; and so many people collected that there was no room left, even in front of the door. He was preaching the word to them when some people came bringing him a paralytic carried by four men, but as the crowd made it impossible to get the man to him, they stripped the roof over the place where Jesus was; and when they had made an opening, they lowered the stretcher on which the paralytic lay. Seeing their faith, Jesus said to the paralytic, ‘My child, your sins are forgiven.’ Now some scribes were sitting there, and they thought to themselves, ‘How can this man talk like that? He is blaspheming. Who can forgive sins but God?’ Jesus, inwardly aware that this was what they were thinking, said to them, ‘Why do you have these thoughts in your hearts? Which of these is easier: to say to the paralytic, “Your sins are forgiven” or to say, “Get up, pick up your stretcher and walk”? But to prove to you that the Son of Man has authority on earth to forgive sins,’ – he turned to the paralytic – ‘I order you: get up, pick up your stretcher, and go off home.’ And the man got up, picked up his stretcher at once and walked out in front of everyone, so that they were all astounded and praised God saying, ‘We have never seen anything like this.’

The Word of the Lord.

January 14th : Responsorial PsalmPsalm 88(89):16-19 I will sing for ever of your love, O Lord.

January 14th :  Responsorial Psalm

Psalm 88(89):16-19 

I will sing for ever of your love, O Lord.
Happy the people who acclaim such a king,
  who walk, O Lord, in the light of your face,
who find their joy every day in your name,
  who make your justice the source of their bliss.

I will sing for ever of your love, O Lord.

For you, O Lord, are the glory of their strength;
  by your favour it is that our might is exalted;
for our ruler is in the keeping of the Lord;
  our king in the keeping of the Holy One of Israel.

I will sing for ever of your love, O Lord.

Gospel Acclamation cf.Ep1:17,18

Alleluia, alleluia!
May the Father of our Lord Jesus Christ
enlighten the eyes of our mind,
so that we can see what hope his call holds for us.
Alleluia!

January 14th : First ReadingThe people of Israel demand a king.1 Samuel 8: 4-7,10-22

January 14th :  First Reading

The people of Israel demand a king.

1 Samuel 8: 4-7,10-22 
All the elders of Israel gathered together and came to Samuel at Ramah. ‘Look,’ they said to him ‘you are old, and your sons do not follow your ways. So give us a king to rule over us, like the other nations.’ It displeased Samuel that they should say, ‘Let us have a king to rule us’, so he prayed to the Lord. But the Lord said to Samuel, ‘Obey the voice of the people in all that they say to you, for it is not you they have rejected; they have rejected me from ruling over them.’
  All that the Lord had said Samuel repeated to the people who were asking him for a king. He said, ‘These will be the rights of the king who is to reign over you. He will take your sons and assign them to his chariotry and cavalry, and they will run in front of his chariot. He will use them as leaders of a thousand and leaders of fifty; he will make them plough his ploughland and harvest his harvest and make his weapons of war and the gear for his chariots. He will also take your daughters as perfumers, cooks and bakers. He will take the best of your fields, of your vineyards and olive groves and give them to his officials. He will tithe your crops and vineyards to provide for his eunuchs and his officials. He will take the best of your manservants and maidservants, of your cattle and your donkeys, and make them work for him. He will tithe your flocks, and you yourselves will become his slaves. When that day comes, you will cry out on account of the king you have chosen for yourselves, but on that day God will not answer you.’
  The people refused to listen to the words of Samuel. They said, ‘No! We want a king, so that we in our turn can be like the other nations; our king shall rule us and be our leader and fight our battles.’ Samuel listened to all that the people had to say and repeated it in the ears of the Lord. The Lord then said to Samuel, ‘Obey their voice and give them a king.’

The Word of the Lord.

புதன், 12 ஜனவரி, 2022

சனவரி 13 : நற்செய்தி வாசகம்தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

சனவரி  13 : நற்செய்தி வாசகம்

தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார்.

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 13 : பதிலுரைப் பாடல்திபா 44: 9-10. 13-14. 23-24 (பல்லவி: 26b)பல்லவி: உமது பேரன்பை முன்னிட்டு ஆண்டவரே, எங்களை மீட்டருளும்.

சனவரி  13 : பதிலுரைப் பாடல்

திபா 44: 9-10. 13-14. 23-24 (பல்லவி: 26b)

பல்லவி: உமது பேரன்பை முன்னிட்டு ஆண்டவரே, எங்களை மீட்டருளும்.
9
இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்; இழிவுபடுத்திவிட்டீர். எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்.
10
எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படி செய்தீர். எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர். - பல்லவி

13
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்; எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.
14
வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்; ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர். - பல்லவி

23
என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்; எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.
24
நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக்கொள்கின்றீர்? எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்துவிடுகின்றீர்? - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா!

 இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

சனவரி 13 : முதல் வாசகம்கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11

சனவரி  13 :  முதல் வாசகம்

கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11

அந்நாள்களில்
இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினர், பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம் இறங்கினர். பெலிஸ்தியர் இஸ்ரயேலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல, போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுள் நாலாயிரம் பேரைப் போர்க்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.

வீரர்கள் பாளையத்திற்குத் திரும்பியபோது, இஸ்ரயேலின் பெரியோர் கூறியது: “இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள் கையினின்று நம்மைக் காக்கும்”.

ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி, கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டுவரச் செய்தனர். ஏலியின் இரு புதல்வர்களான ஒப்னியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேலர் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.

இந்த ஆரவாரத்தைக் கேட்டதும் பெலிஸ்தியர், “எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?” என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்தினுள் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டனர். அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு, “கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை! நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலைநிலத்தில் பல்வேறு வாதைகளால் துன்புறுத்தியவர்! பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தது போல, நீங்களும் எபிரேயருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்!” என்றனர்.

பெலிஸ்தியர் மீண்டும் போர்தொடுத்தனர். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்குத் தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் மாண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 13th : Gospel The leprosy left the man at once, and he was cured.A Reading from the Holy Gospel according to St.Mark 1: 40-45

January 13th :  Gospel 

The leprosy left the man at once, and he was cured.

A Reading from the Holy Gospel according to St.Mark 1: 40-45 
A leper came to Jesus and pleaded on his knees: ‘If you want to’ he said ‘you can cure me.’ Feeling sorry for him, Jesus stretched out his hand and touched him. ‘Of course I want to!’ he said. ‘Be cured!’ And the leprosy left him at once and he was cured. Jesus immediately sent him away and sternly ordered him, ‘Mind you say nothing to anyone, but go and show yourself to the priest, and make the offering for your healing prescribed by Moses as evidence of your recovery.’ The man went away, but then started talking about it freely and telling the story everywhere, so that Jesus could no longer go openly into any town, but had to stay outside in places where nobody lived. Even so, people from all around would come to him.

The Word of the Lord.

January 13th : Responsorial PsalmPsalm 43(44):10-11,14-15,24-25 Redeem us, O Lord, because of your love.

January 13th :  Responsorial Psalm

Psalm 43(44):10-11,14-15,24-25 

Redeem us, O Lord, because of your love.
Yet now you have rejected us, disgraced us;
  you no longer go forth with our armies.
You make us retreat from the foe
  and our enemies plunder us at will.

Redeem us, O Lord, because of your love.

You make us the taunt of our neighbours,
  the laughing-stock of all who are near.
Among the nations, you make us a byword,
  among the peoples a thing of derision.

Redeem us, O Lord, because of your love.

Awake, O Lord, why do you sleep?
  Arise, do not reject us for ever!
Why do you hide your face
  and forget our oppression and misery?

Redeem us, O Lord, because of your love.

Gospel Acclamation Ps118:88

Alleluia, alleluia!
Because of your love give me life,
and I will do your will.
Alleluia!

January 13th : First Reading Israel is defeated and the ark of God is captured.1 Samuel 4: 1-11

January 13th : First Reading 

Israel is defeated and the ark of God is captured.

1 Samuel 4: 1-11 
It happened at that time that the Philistines mustered to fight Israel and Israel went out to meet them in battle, encamping near Ebenezer while the Philistines were encamped at Aphek. The Philistines drew up their battle line against Israel, the battle was hotly engaged, and Israel was defeated by the Philistines and about four thousand of their army were killed on the field. The troops returned to the camp and the elders of Israel said, ‘Why has the Lord allowed us to be defeated today by the Philistines? Let us fetch the ark of our God from Shiloh so that it may come among us and rescue us from the power of our enemies.’’ So the troops sent to Shiloh and brought away the ark of the Lord of Hosts, he who is seated on the cherubs; the two sons of Eli, Hophni and Phinehas, came with the ark. When the ark of the Lord arrived in the camp, all Israel gave a great shout so that the earth resounded. When the Philistines heard the noise of the shouting, they said, ‘What can this great shouting in the Hebrew camp mean?’ And they realised that the ark of the Lord had come into the camp. At this the Philistines were afraid; and they said, ‘God has come to the camp.’ ‘Alas!’ they cried ‘This has never happened before. Alas! Who will save us from the power of this mighty God? It was he who struck down Egypt with every kind of plague! But take courage and be men, Philistines, or you will become slaves to the Hebrews as they have been slaves to you. Be men and fight.’ So the Philistines joined battle and Israel was defeated, each man fleeing to his tent. The slaughter was great indeed, and there fell of the Israelites thirty thousand foot soldiers. The ark of God was captured too, and the two sons of Eli died, Hophni and Phinehas.

The Word of the Lord.