இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 15 மார்ச், 2022

மார்ச் 16 : முதல் வாசகம்வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20

மார்ச் 16 :  முதல் வாசகம்

வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20
யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் “வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்” என்றனர்.

ஆண்டவரே, என்னைக் கவனியும்; என் எதிரிகள் சொல்வதைக் கேளும். நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழி பறித்திருக்கின்றார்கள்; அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 16th : GospelThey will condemn the Son of Man to deathA Reading from the Holy Gospel according to St.Matthew 20:17-28

March 16th :  Gospel

They will condemn the Son of Man to death

A Reading from the Holy Gospel according to St.Matthew 20:17-28 
Jesus was going up to Jerusalem, and on the way he took the Twelve to one side and said to them, ‘Now we are going up to Jerusalem, and the Son of Man is about to be handed over to the chief priests and scribes. They will condemn him to death and will hand him over to the pagans to be mocked and scourged and crucified; and on the third day he will rise again.’
  Then the mother of Zebedee’s sons came with her sons to make a request of him, and bowed low; and he said to her, ‘What is it you want?’ She said to him, ‘Promise that these two sons of mine may sit one at your right hand and the other at your left in your kingdom.’ ‘You do not know what you are asking’ Jesus answered. ‘Can you drink the cup that I am going to drink?’ They replied, ‘We can.’ ‘Very well,’ he said ‘you shall drink my cup, but as for seats at my right hand and my left, these are not mine to grant; they belong to those to whom they have been allotted by my Father.’
  When the other ten heard this they were indignant with the two brothers. But Jesus called them to him and said, ‘You know that among the pagans the rulers lord it over them, and their great men make their authority felt. This is not to happen among you. No; anyone who wants to be great among you must be your servant, and anyone who wants to be first among you must be your slave, just as the Son of Man came not to be served but to serve, and to give his life as a ransom for many.’

The Word of the Lord.

March 16th : Responsorial PsalmPsalm 30(31):5-6,14-16 ©Save me in your love, O Lord.

March 16th :  Responsorial Psalm

Psalm 30(31):5-6,14-16 ©

Save me in your love, O Lord.
Release me from the snares they have hidden
  for you are my refuge, Lord.
Into your hands I commend my spirit.
  It is you who will redeem me, Lord.

Save me in your love, O Lord.

I have heard the slander of the crowd,
  fear is all around me,
as they plot together against me,
  as they plan to take my life.

Save me in your love, O Lord.

But as for me, I trust in you, Lord;
  I say: ‘You are my God.
My life is in your hands, deliver me
  from the hands of those who hate me.’

Save me in your love, O Lord.

Gospel Acclamation cf.Jn6:63,68
Glory to you, O Christ, you are the Word of God!
Your words are spirit, Lord, and they are life;
you have the message of eternal life.
Glory to you, O Christ, you are the Word of God!

March 16th : First ReadingMy enemies are digging a pit for meA Reading from the Book of Jeremiah 18: 18-20

March 16th : First Reading

My enemies are digging a pit for me

A Reading from the Book of Jeremiah 18: 18-20 
‘Come on,’ they said, ‘let us concoct a plot against Jeremiah; the priest will not run short of instruction without him, nor the sage of advice, nor the prophet of the word. Come on, let us hit at him with his own tongue; let us listen carefully to every word he says.’
Listen to me, O Lord,
hear what my adversaries are saying.
Should evil be returned for good?
For they are digging a pit for me.
Remember how I stood in your presence
to plead on their behalf,
to turn your wrath away from them.

The Word of the Lord.

திங்கள், 14 மார்ச், 2022

மார்ச் 15 : நற்செய்தி வாசகம்அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

மார்ச் 15 :  நற்செய்தி வாசகம்

அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள்.

தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப்பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர் சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்படவேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 15 : பதிலுரைப் பாடல்திபா 50: 8-9. 16bc-17. 21,23 (பல்லவி: 23)பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.

மார்ச் 15 :  பதிலுரைப் பாடல்

திபா 50: 8-9. 16bc-17. 21,23 (பல்லவி: 23)

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.
8
நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9
உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. - பல்லவி

16bc
என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17
நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். - பல்லவி

21
இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக்கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக் கின்றேன்.
23
நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

எசே 18: 31
எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

மார்ச் 15 : முதல் வாசகம்நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 10, 16-20

மார்ச் 15 :  முதல் வாசகம்

நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 10, 16-20
எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாய் இருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.

உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்கிறார் ஆண்டவர்; “ உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்; இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்.

மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 15th : Gospel They do not practise what they preachA Reading from the Holy Gospel according to St. Matthew 23: 1-12

March 15th :  Gospel 

They do not practise what they preach

A Reading from the Holy Gospel according to St. Matthew 23: 1-12 
Addressing the people and his disciples Jesus said, ‘The scribes and the Pharisees occupy the chair of Moses. You must therefore do what they tell you and listen to what they say; but do not be guided by what they do: since they do not practise what they preach. They tie up heavy burdens and lay them on men’s shoulders, but will they lift a finger to move them? Not they! Everything they do is done to attract attention, like wearing broader phylacteries and longer tassels, like wanting to take the place of honour at banquets and the front seats in the synagogues, being greeted obsequiously in the market squares and having people call them Rabbi.
  ‘You, however, must not allow yourselves to be called Rabbi, since you have only one master, and you are all brothers. You must call no one on earth your father, since you have only one Father, and he is in heaven. Nor must you allow yourselves to be called teachers, for you have only one Teacher, the Christ. The greatest among you must be your servant. Anyone who exalts himself will be humbled, and anyone who humbles himself will be exalted.’

The Word of the Lord.

March 15th : Responsorial PsalmPsalm 49(50):8-9,16-17,21,23 ©I will show God’s salvation to the upright.

March 15th :  Responsorial Psalm

Psalm 49(50):8-9,16-17,21,23 ©

I will show God’s salvation to the upright.
‘I find no fault with your sacrifices,
  your offerings are always before me.
I do not ask more bullocks from your farms,
  nor goats from among your herds.

I will show God’s salvation to the upright.

‘But how can you recite my commandments
  and take my covenant on your lips,
you who despise my law
  and throw my words to the winds,

I will show God’s salvation to the upright.

‘You do this, and should I keep silence?
  Do you think that I am like you?
A sacrifice of thanksgiving honours me
  and I will show God’s salvation to the upright.’

I will show God’s salvation to the upright.

Gospel Acclamation Mt4:17
Glory and praise to you, O Christ!
Repent, says the Lord,
for the kingdom of heaven is close at hand.
Glory and praise to you, O Christ!

March 15th : First ReadingCease to do evil; learn to do goodA Reading from the Book of Isaiah 1: 10,16-20

March 15th : First Reading

Cease to do evil; learn to do good

A Reading from the Book of Isaiah 1: 10,16-20 
Hear the word of the Lord,
you rulers of Sodom;
listen to the command of our God,
you people of Gomorrah.
‘Wash, make yourselves clean.
Take your wrong-doing out of my sight.
Cease to do evil.
Learn to do good,
search for justice,
help the oppressed,
be just to the orphan,
plead for the widow.
‘Come now, let us talk this over,
says the Lord.
Though your sins are like scarlet,
they shall be as white as snow;
though they are red as crimson,
they shall be like wool.
‘If you are willing to obey,
you shall eat the good things of the earth.
But if you persist in rebellion,
the sword shall eat you instead.’

The Word of the Lord.