இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 2 மே, 2022

மே 3 : புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழாமுதல் வாசகம்யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.

மே 3 :  புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - 
திருத்தூதர்கள் விழா

முதல் வாசகம்

யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

சகோதரர் சகோதரிகளே,

உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 3rd : Gospel To have seen me is to have seen the fatherA Reading from the Holy Gospel according to St. John 14 : 6-14

May 3rd  :  Gospel 

To have seen me is to have seen the father

A Reading from the Holy Gospel according to St. John 14 : 6-14 
Jesus said to Thomas:
‘I am the Way, the Truth and the Life.
No one can come to the Father except through me.
If you know me, you know my Father too.
From this moment you know him and have seen him.’
Philip said, ‘Lord, let us see the Father and then we shall be satisfied.’
  ‘Have I been with you all this time, Philip,’ said Jesus to him ‘and you still do not know me?
‘To have seen me is to have seen the Father,
so how can you say, “Let us see the Father”?
Do you not believe
that I am in the Father and the Father is in me?
The words I say to you I do not speak as from myself:
it is the Father, living in me, who is doing this work.
You must believe me when I say
that I am in the Father and the Father is in me;
believe it on the evidence of this work, if for no other reason.
I tell you most solemnly,
whoever believes in me
will perform the same works as I do myself,
he will perform even greater works,
because I am going to the Father.
Whatever you ask for in my name I will do,
so that the Father may be glorified in the Son.
If you ask for anything in my name,
I will do it.’

The Word of the Lord.

May 3rd : Responsorial PsalmPsalm 18(19):2-5 ©Their word goes forth through all the earth.or Alleluia!

May 3rd  :  Responsorial Psalm

Psalm 18(19):2-5 ©

Their word goes forth through all the earth.
or Alleluia!
The heavens proclaim the glory of God,
  and the firmament shows forth the work of his hands.
Day unto day takes up the story
  and night unto night makes known the message.

Their word goes forth through all the earth.
or Alleluia!

No speech, no word, no voice is heard
  yet their span extends through all the earth,
  their words to the utmost bounds of the world.

Their word goes forth through all the earth.
or Alleluia!

Gospel Acclamation Jn14:6,9

Alleluia, alleluia!

I am the Way, the Truth, and the Life, says the Lord.
Philip, to have seen me is to have seen the Father.
Alleluia!

May 3rd : First ReadingThe Lord appeared to James, and then to all the apostlesA Reading from the First Letter of St.Paul to the Corinthians 15 :1-8

May 3rd  :  First Reading

The Lord appeared to James, and then to all the apostles

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 15 :1-8 
Brothers, I want to remind you of the gospel I preached to you, the gospel that you received and in which you are firmly established; because the gospel will save you only if you keep believing exactly what I preached to you – believing anything else will not lead to anything.
  Well then, in the first place, I taught you what I had been taught myself, namely that Christ died for our sins, in accordance with the scriptures; that he was buried; and that he was raised to life on the third day, in accordance with the scriptures; that he appeared first to Cephas and secondly to the Twelve. Next he appeared to more than five hundred of the brothers at the same time, most of whom are still alive, though some have died; then he appeared to James, and then to all the apostles; and last of all he appeared to me too; it was as though I was born when no one expected it.

The Word of the Lord.

ஞாயிறு, 1 மே, 2022

மே 2 : நற்செய்தி வாசகம்அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29

மே 2 :   நற்செய்தி வாசகம்

அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 2 : பதிலுரைப் பாடல்திபா 119: 23-24. 26-27. 29-30 (பல்லவி: 1b)பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.அல்லது: அல்லேலூயா.

மே 2 :  பதிலுரைப் பாடல்

திபா 119: 23-24. 26-27. 29-30 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.
23
தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.
24
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். - பல்லவி

26
என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும்.
27
உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். - பல்லவி

29
பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
30
உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! 

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

மே 2 : முதல் வாசகம்ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15

மே 2 :  முதல் வாசகம்

ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15
அந்நாள்களில்

ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

பின்பு அவர்கள், “இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்” என்று கூறினார்கள். மேலும் அவர்கள், “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்” என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 2nd : Gospel Do not work for food that cannot last, but for food that endures to eternal lifeA Reading from the Holy Gospel according to St. John 6: 22-29

May 2nd :  Gospel 

Do not work for food that cannot last, but for food that endures to eternal life

A Reading from the Holy Gospel according to St. John 6: 22-29 
After Jesus had fed the five thousand, his disciples saw him walking on the water. Next day, the crowd that had stayed on the other side saw that only one boat had been there, and that Jesus had not got into the boat with his disciples, but that the disciples had set off by themselves. Other boats, however, had put in from Tiberias, near the place where the bread had been eaten. When the people saw that neither Jesus nor his disciples were there, they got into those boats and crossed to Capernaum to look for Jesus. When they found him on the other side, they said to him, ‘Rabbi, when did you come here?’
  Jesus answered:
‘I tell you most solemnly,
you are not looking for me because you have seen the signs
but because you had all the bread you wanted to eat.
Do not work for food that cannot last,
but work for food that endures to eternal life,
the kind of food the Son of Man is offering you,
for on him the Father, God himself, has set his seal.’
Then they said to him, ‘What must we do if we are to do the works that God wants?’ Jesus gave them this answer, ‘This is working for God: you must believe in the one he has sent.’

The Word of the Lord.

May 2nd : Responsorial PsalmPsalm 118(119):23-24,26-27,29-30 ©They are happy whose life is blameless.or Alleluia!

May 2nd :  Responsorial Psalm

Psalm 118(119):23-24,26-27,29-30 ©

They are happy whose life is blameless.
or Alleluia!
Though princes sit plotting against me
  I ponder on your statutes.
Your will is my delight;
  your statutes are my counsellors.

They are happy whose life is blameless.
or Alleluia!

I declared my ways and you answered;
  teach me your statutes.
Make me grasp the way of your precepts
  and I will muse on your wonders.

They are happy whose life is blameless.
or Alleluia!

Keep me from the way of error
  and teach me your law.
I have chosen the way of truth
  with your decrees before me.

They are happy whose life is blameless.
or Alleluia!

Gospel Acclamation Jn20:29

Alleluia, alleluia!

‘You believe, Thomas, because you can see me.
Happy are those who have not seen and yet believe.
Alleluia!

May 2nd : First Reading They could not get the better of Stephen because the Spirit prompted what he saidA Reading from the Acts of Apostles 6: 8-15

May 2nd :  First Reading 

They could not get the better of Stephen because the Spirit prompted what he said

A Reading from the Acts of Apostles 6: 8-15 
Stephen was filled with grace and power and began to work miracles and great signs among the people. But then certain people came forward to debate with Stephen, some from Cyrene and Alexandria who were members of the synagogue called the Synagogue of Freedmen, and others from Cilicia and Asia. They found they could not get the better of him because of his wisdom, and because it was the Spirit that prompted what he said. So they procured some men to say, ‘We heard him using blasphemous language against Moses and against God.’ Having in this way turned the people against him as well as the elders and scribes, they took Stephen by surprise, and arrested him and brought him before the Sanhedrin. There they put up false witnesses to say, ‘This man is always making speeches against this Holy Place and the Law. We have heard him say that Jesus the Nazarene is going to destroy this Place and alter the traditions that Moses handed down to us.’ The members of the Sanhedrin all looked intently at Stephen, and his face appeared to them like the face of an angel.

The Word of the Lord.