இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 30 மே, 2022

மே 31 : தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்விழாமுதல் வாசகம்இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18

மே 31 :  தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
விழா

முதல் வாசகம்

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம் போல் இருக்கும்.

உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 31st : Gospel The Almighty has done great things for meA Reading from the Holy Gospel according to St.Luke 1:39-56

May 31st :  Gospel 

The Almighty has done great things for me

A Reading from the Holy Gospel according to St.Luke 1:39-56 
Mary set out and went as quickly as she could to a town in the hill country of Judah. She went into Zechariah’s house and greeted Elizabeth. Now as soon as Elizabeth heard Mary’s greeting, the child leapt in her womb and Elizabeth was filled with the Holy Spirit. She gave a loud cry and said, ‘Of all women you are the most blessed, and blessed is the fruit of your womb. Why should I be honoured with a visit from the mother of my Lord? For the moment your greeting reached my ears, the child in my womb leapt for joy. Yes, blessed is she who believed that the promise made her by the Lord would be fulfilled.’
  And Mary said:
‘My soul proclaims the greatness of the Lord
and my spirit exults in God my saviour;
because he has looked upon his lowly handmaid.
Yes, from this day forward all generations will call me blessed,
for the Almighty has done great things for me.
Holy is his name,
and his mercy reaches from age to age for those who fear him.
He has shown the power of his arm,
he has routed the proud of heart.
He has pulled down princes from their thrones and exalted the lowly.
The hungry he has filled with good things, the rich sent empty away.
He has come to the help of Israel his servant, mindful of his mercy
– according to the promise he made to our ancestors –
of his mercy to Abraham and to his descendants for ever.’
Mary stayed with Elizabeth about three months and then went back home.

The Word of the Lord.

May 31st : Responsorial Psalm Isaiah 12 The rejoicing of a redeemed peopleGreat in your midst is the Holy One of Israel.

May 31st : Responsorial Psalm Isaiah 12 

The rejoicing of a redeemed people

Great in your midst is the Holy One of Israel.
Truly, God is my salvation,
  I trust, I shall not fear.
For the Lord is my strength, my song,
  he became my saviour.
With joy you will draw water
  from the wells of salvation.

Great in your midst is the Holy One of Israel.

Give thanks to the Lord, give praise to his name!
  Make his mighty deeds known to the peoples!
  Declare the greatness of his name.

Great in your midst is the Holy One of Israel.

Sing a psalm to the Lord
  for he has done glorious deeds;
  make them known to all the earth!
People of Zion, sing and shout for joy,
  for great in your midst is the Holy One of Israel.

Great in your midst is the Holy One of Israel.

Gospel Acclamation cf.Lk1:45

Alleluia, alleluia!

Blessed is the Virgin Mary, who believed
that the promise made her by the Lord would be fulfilled.
Alleluia!

May 31st : First ReadingThe Lord, the king of Israel, is in your midstZephaniah 3: 14-18

May 31st :  First Reading

The Lord, the king of Israel, is in your midst

Zephaniah 3: 14-18 
Shout for joy, daughter of Zion,
Israel, shout aloud!
Rejoice, exult with all your heart,
daughter of Jerusalem!
The Lord has repealed your sentence;
he has driven your enemies away.
The Lord, the king of Israel, is in your midst;
you have no more evil to fear.
When that day comes, word will come to Jerusalem:
Zion, have no fear,
do not let your hands fall limp.
The Lord your God is in your midst,
a victorious warrior.
He will exult with joy over you,
he will renew you by his love;
he will dance with shouts of joy for you
as on a day of festival.

The Word of the Lord.

ஞாயிறு, 29 மே, 2022

மே 30 : நற்செய்தி வாசகம் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன். ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33

மே 30 :    நற்செய்தி வாசகம்
 

துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்.
 

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33
 
அக்காலத்தில்

சீடர்கள் இயேசுவிடம், “இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்றார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “இப்போது நம்புகிறீர்களா! இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்.

என் வழியாய் நீங்கள் அமைதி காணும்பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.
 

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 30 : பதிலுரைப் பாடல்திபா 68: 1-2. 3-4ac. 5-6ab (பல்லவி: 32a)பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.

மே 30 :  பதிலுரைப் பாடல்

திபா 68: 1-2. 3-4ac. 5-6ab (பல்லவி: 32a)

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.
அல்லது: அல்லேலூயா.

1
கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்;
2
புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். - பல்லவி

3
நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்.
4ac
கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். - பல்லவி

5
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!
6ab
தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 1
அல்லேலூயா, அல்லேலூயா! 

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.

மே 30 : முதல் வாசகம்நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8

மே 30 :  முதல் வாசகம்

நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8
அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, அவர்களை நோக்கி, “நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே” என்றார்கள். “அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?” எனப் பவுல் கேட்க, அவர்கள், “நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்” என்றார்கள். அப்பொழுது பவுல், “யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப்பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்” என்றார்.

இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர். பவுல் அவர்கள்மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள்மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப் பேச்சுப் பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர்.

பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சி பற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 30th : Gospel Be brave, for I have conquered the worldA Reading from the Holy Gospel according to St.John 16: 29-33

May 30th :  Gospel 

Be brave, for I have conquered the world

A Reading from the Holy Gospel according to St.John 16: 29-33 
His disciples said to Jesus, ‘Now you are speaking plainly and not using metaphors! Now we see that you know everything, and do not have to wait for questions to be put into words; because of this we believe that you came from God.’ Jesus answered them:
‘Do you believe at last?
Listen; the time will come – in fact it has come already –
when you will be scattered,
each going his own way and leaving me alone.
And yet I am not alone,
because the Father is with me.
I have told you all this
so that you may find peace in me.
In the world you will have trouble,
but be brave: I have conquered the world.’

The Word of the Lord.

May 30th : Responsorial PsalmPsalm 67(68):2-7 ©Kingdoms of the earth, sing to God.orAlleluia!

May 30th :  Responsorial Psalm

Psalm 67(68):2-7 ©

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!
Let God arise, let his foes be scattered.
  Let those who hate him flee before him.
As smoke is blown away so will they be blown away;
  like wax that melts before the fire,
  so the wicked shall perish at the presence of God.

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!

But the just shall rejoice at the presence of God,
  they shall exult and dance for joy.
O sing to the Lord, make music to his name;
  rejoice in the Lord, exult at his presence.

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!

Father of the orphan, defender of the widow,
  such is God in his holy place.
God gives the lonely a home to live in;
  he leads the prisoners forth into freedom.

Kingdoms of the earth, sing to God.
or
Alleluia!

Gospel Acclamation Jn16:28

Alleluia, alleluia!

I came from the Father
and have come into the world,
and now I leave the world
to go to the Father.
Alleluia!

May 30th : First Reading The moment Paul laid hands on them the Holy Spirit came down on themA Reading from the Acts of Apostles 19: 1-8

May 30th :  First Reading 

The moment Paul laid hands on them the Holy Spirit came down on them

A Reading from the Acts of Apostles 19: 1-8 
While Apollos was in Corinth, Paul made his way overland as far as Ephesus, where he found a number of disciples. When he asked, ‘Did you receive the Holy Spirit when you became believers?’ they answered, ‘No, we were never even told there was such a thing as a Holy Spirit.’ ‘Then how were you baptised?’ he asked. ‘With John’s baptism’ they replied. ‘John’s baptism’ said Paul ‘was a baptism of repentance; but he insisted that the people should believe in the one who was to come after him – in other words, Jesus.’ When they heard this, they were baptised in the name of the Lord Jesus, and the moment Paul had laid hands on them the Holy Spirit came down on them, and they began to speak with tongues and to prophesy. There were about twelve of these men.
  He began by going to the synagogue, where he spoke out boldly and argued persuasively about the kingdom of God. He did this for three months.

The Word of the Lord.