இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 6 ஜூலை, 2022

July 7 : Responsorial PsalmPsalm 79(80):2-3,15-16 ©Let your face shine on us, O Lord, and we shall be saved.

July 7 : Responsorial Psalm

Psalm 79(80):2-3,15-16 ©

Let your face shine on us, O Lord, and we shall be saved.
O shepherd of Israel, hear us,
  shine forth from your cherubim throne.
O Lord, rouse up your might,
  O Lord, come to our help.

Let your face shine on us, O Lord, and we shall be saved.

God of hosts, turn again, we implore,
  look down from heaven and see.
Visit this vine and protect it,
  the vine your right hand has planted.

Let your face shine on us, O Lord, and we shall be saved.

Gospel Acclamation Ps94:8

Alleluia, alleluia!
Harden not your hearts today,
but listen to the voice of the Lord.
Alleluia!

July 7 : First readingHosea 11:1-4,8-9 I am the Holy One in your midst and have no wish to destroy

July 7 : First reading

Hosea 11:1-4,8-9 ©

I am the Holy One in your midst and have no wish to destroy
Thus says the Lord:
When Israel was a child I loved him,
and I called my son out of Egypt.
But the more I called to them, the further they went from me;
they have offered sacrifice to the Baals
and set their offerings smoking before the idols.
I myself taught Ephraim to walk,
I took them in my arms;
yet they have not understood that I was the one looking after them.
I led them with reins of kindness,
with leading-strings of love.
I was like someone who lifts an infant close against his cheek;
stooping down to him I gave him his food.
Ephraim, how could I part with you?
Israel, how could I give you up?
How could I treat you like Admah,
or deal with you like Zeboiim?
My heart recoils from it,
my whole being trembles at the thought.
I will not give rein to my fierce anger,
I will not destroy Ephraim again,
for I am God, not man:
I am the Holy One in your midst
and have no wish to destroy.

The word of the Lord

செவ்வாய், 5 ஜூலை, 2022

ஜூலை 6 : நற்செய்தி வாசகம்வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7

ஜூலை 6 :  நற்செய்தி வாசகம்

வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7
அக்காலத்தில்

இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.

இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 6 : பதிலுரைப் பாடல்திபா 105: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 4b)பல்லவி: ஆண்டவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!அல்லது: அல்லேலூயா.

ஜூலை 6 : பதிலுரைப் பாடல்

திபா 105: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 4b)

பல்லவி: ஆண்டவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

அல்லது: அல்லேலூயா.
2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
3
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! - பல்லவி

4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
5
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். - பல்லவி

6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா!

 இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா

ஜூலை 6 : முதல் வாசகம்ஆண்டவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 10: 1-3, 7-8, 12

ஜூலை 6 :  முதல் வாசகம்

ஆண்டவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 10: 1-3, 7-8, 12
இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக் கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது; எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது; எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள் சிறப்புப் பெற்றன. இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்; ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்; அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார். அப்போது அவர்கள், “நமக்கு அரசன் இல்லை; ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை; அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?” என்பார்கள்.

சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்து போவான். இஸ்ரயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்; முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்; அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்,’ குன்றுகளைப் பார்த்து ‘எங்கள்மேல் விழுங்கள்’ என்று சொல்வார்கள்.

நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 6th : Gospel 'Go to the lost sheep of the House of Israel'A Reading from the Holy Gospel according to St.Matthew 10:1-7

July 6th :  Gospel 

'Go to the lost sheep of the House of Israel'

A Reading from the Holy Gospel according to St.Matthew 10:1-7 
Jesus summoned his twelve disciples, and gave them authority over unclean spirits with power to cast them out and to cure all kinds of diseases and sickness.
  These are the names of the twelve apostles: first, Simon who is called Peter, and his brother Andrew; James the son of Zebedee, and his brother John; Philip and Bartholomew; Thomas, and Matthew the tax collector; James the son of Alphaeus, and Thaddaeus; Simon the Zealot and Judas Iscariot, the one who was to betray him. These twelve Jesus sent out, instructing them as follows:
  ‘Do not turn your steps to pagan territory, and do not enter any Samaritan town; go rather to the lost sheep of the House of Israel. And as you go, proclaim that the kingdom of heaven is close at hand.’

The Word of the Lord.

July 6th : Responsorial PsalmPsalm 104(105):2-7 Constantly seek the face of the Lord.orAlleluia!

July 6th :  Responsorial Psalm

Psalm 104(105):2-7 

Constantly seek the face of the Lord.
or
Alleluia!
O sing to the Lord, sing his praise;
  tell all his wonderful works!
Be proud of his holy name,
  let the hearts that seek the Lord rejoice.

Constantly seek the face of the Lord.
or
Alleluia!

Consider the Lord and his strength;
  constantly seek his face.
Remember the wonders he has done,
  his miracles, the judgements he spoke.

Constantly seek the face of the Lord.
or
Alleluia!

O children of Abraham, his servant,
  O sons of the Jacob he chose.
He, the Lord, is our God:
  his judgements prevail in all the earth.

Constantly seek the face of the Lord.
or
Alleluia!

Gospel Acclamation James1:18

Alleluia, alleluia!

By his own choice the Father made us his children
by the message of the truth,
so that we should be a sort of first-fruits
of all that he created.
Alleluia!

July 6th : First ReadingSeek integrity and reap a harvest of kindness.A Reading from the Book of Hosea 10:1-3,7-8,12.

July 6th :   First Reading

Seek integrity and reap a harvest of kindness.

A Reading from the Book of Hosea 10:1-3,7-8,12.
Israel was a luxuriant vine
yielding plenty of fruit.
The more his fruit increased,
the more altars he built;
the richer his land became,
the richer he made the sacred stones.
Their heart is a divided heart;
very well, they must pay for it:
the Lord is going to break their altars down
and destroy their sacred stones.
Then they will say,
‘We have no king
because we have not feared the Lord.’
But what can a king do for us?
Samaria has had her day.
Her king is like a straw drifting on the water.
The idolatrous high places shall be destroyed –
that sin of Israel;
thorn and thistle will grow on their altars.
Then they will say to the mountains, ‘Cover us!’
and to the hills, ‘Fall on us!’
Sow integrity for yourselves,
reap a harvest of kindness,
break up your fallow ground:
it is time to go seeking the Lord
until he comes to rain salvation on you.

The Word of the Lord.

திங்கள், 4 ஜூலை, 2022

ஜூலை 5 : நற்செய்தி வாசகம்அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

ஜூலை 5 : நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38
அக்காலத்தில்

பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 5 : பதிலுரைப் பாடல்திபா 115: 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 9a)பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

ஜூலை 5 :  பதிலுரைப் பாடல்

திபா 115: 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 9a)

பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
3
நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.
4
அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! - பல்லவி

5
அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை;
6
செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை. - பல்லவி

7
கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.
8
அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர். - பல்லவி

9
இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
10
ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.