இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 13 : முதல் வாசகம்ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 1-10, 13b, 30-32

ஆகஸ்ட் 13 : முதல் வாசகம்

ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 1-10, 13b, 30-32
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ‘புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்’ என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன?

என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது. உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.

ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால், மலைகளின்மேல் உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித் தன் கண்களை ஏறெடுக்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால், அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து, பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால், வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து, தன் கையால் அநீதி செய்யாது விலகி, மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால், என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகொண்டால், அவன் நீதிமான் ஆவான்; அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும், முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால், அவன் வாழமாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப் பழி அவன் மேலேயே இருக்கும்.

எனவே, இஸ்ரயேல் வீட்டாரே! ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். மனம் மாறி, உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது. எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 13th : GospelDo not stop the little children coming to meA Reading from the Holy Gospel according to St.Matthew 19: 13-15

August 13th : Gospel

Do not stop the little children coming to me

A Reading from the Holy Gospel according to St.Matthew 19: 13-15 
People brought little children to Jesus, for him to lay his hands on them and say a prayer. The disciples turned them away, but Jesus said, ‘Let the little children alone, and do not stop them coming to me; for it is to such as these that the kingdom of heaven belongs.’ Then he laid his hands on them and went on his way.

The Word of the Lord.

August 13th : Responsorial PsalmPsalm 50(51):12-15,18-19 ©A pure heart create for me, O God.

August 13th : Responsorial Psalm

Psalm 50(51):12-15,18-19 ©

A pure heart create for me, O God.
A pure heart create for me, O God,
  put a steadfast spirit within me.
Do not cast me away from your presence,
  nor deprive me of your holy spirit.

A pure heart create for me, O God.

Give me again the joy of your help;
  with a spirit of fervour sustain me,
that I may teach transgressors your ways
  and sinners may return to you.

A pure heart create for me, O God.

For in sacrifice you take no delight,
  burnt offering from me you would refuse,
my sacrifice, a contrite spirit.
  A humbled, contrite heart you will not spurn.

A pure heart create for me, O God.

Gospel Acclamation cf.Col3:16a,17

Alleluia, alleluia!
Let the message of Christ, in all its richness,
find a home with you;
through him give thanks to God the Father.
Alleluia!

August 13th : First ReadingYou, not your children, will suffer for your sins: so repent, and liveA Reading from the Book of Ezekiel 18: 1-10,13,30-32

August 13th : First Reading

You, not your children, will suffer for your sins: so repent, and live

A Reading from the Book of Ezekiel 18: 1-10,13,30-32 
The word of the Lord was addressed to me as follows:
  ‘Why do you keep repeating this proverb in the land of Israel: “The fathers have eaten unripe grapes; and the children’s teeth are set on edge”?
  ‘As I live – it is the Lord who speaks – there will no longer be any reason to repeat this proverb in Israel. See now: all life belongs to me; the father’s life and the son’s life, both alike belong to me. The man who has sinned, he is the one who shall die.
  ‘The upright man is law-abiding and honest; he does not eat on the mountains or raise his eyes to the idols of the House of Israel, does not seduce his neighbour’s wife or sleep with a woman during her periods. He oppresses no one, returns pledges, never steals, gives his own bread to the hungry, his clothes to the naked. He never charges usury on loans, takes no interest, abstains from evil, gives honest judgement between man and man, keeps my laws and sincerely respects my observances – such a man is truly upright. It is the Lord who speaks.
  ‘But if anyone has a son prone to violence and bloodshed, then this son shall certainly not live; having committed all these appalling crimes he will have to die, and his blood be on his own head.
  House of Israel, in future I mean to judge each of you by what he does – it is the Lord who speaks. Repent, renounce all your sins, avoid all occasions of sin! Shake off all the sins you have committed against me, and make yourselves a new heart and a new spirit! Why are you so anxious to die, House of Israel? I take no pleasure in the death of anyone – it is the Lord who speaks. Repent and live!’

The Word of the Lord.

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட் 12 : நற்செய்தி வாசகம்உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

ஆகஸ்ட் 12 : நற்செய்தி வாசகம்

உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12
அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டனர்.

அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?” என்று கேட்டார்.

மேலும் அவர், “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள்.

அதற்கு அவர், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள். அதற்கு அவர், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 12 : பதிலுரைப் பாடல்எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 1c)பல்லவி: ஆண்டவரே, உம் சினம் தணிந்து எனக்கு ஆறுதல் அளித்துள்ளீர்.

ஆகஸ்ட் 12 : பதிலுரைப் பாடல்

எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 1c)

பல்லவி: ஆண்டவரே, உம் சினம் தணிந்து எனக்கு ஆறுதல் அளித்துள்ளீர்.
2
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். - பல்லவி

4bcd
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி

5
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
6
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 தெச 2: 13
அல்லேலூயா, அல்லேலூயா! 

கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.

ஆகஸ்ட் 12 : முதல் வாசகம்என் மாட்சி உன்மேல் பட, உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, நீயோ வேசித்தனம் செய்தாய்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 1-15, 60, 63

ஆகஸ்ட் 12 : முதல் வாசகம்

என் மாட்சி உன்மேல் பட, உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, நீயோ வேசித்தனம் செய்தாய்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 16: 1-15, 60, 63

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு. நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே, உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள். நீ பிறந்த வரலாறு இதுவே: நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை. நீ நீராட்டப்பட்டுத் தூய்மை ஆக்கப்படவில்லை; உப்பு நீரால் கழுவப்படவில்லை; துணிகளால் சுற்றப்படவும் இல்லை; உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி, இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை. ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய்.

ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய். அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, ‘வாழ்ந்திடு’ என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, ‘வாழ்ந்திடு’ என்றேன். உன்னை வயல்வெளியில் வளரும் பயிர் போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவம் எய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன; உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது. ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய்.

அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்த மேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன். பூப் பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப் பட்டால் உன்னைப் போர்த்தினேன்.

அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்; கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன். மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன். பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணி செய்யப்பட்டாய். நார்ப் பட்டும் மெல்லிய துகிலும், பூப் பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய். உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடம் எல்லாம் வேசித்தனம் செய்தாய்.

ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன் படிக்கையை நினைவுகூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.

நீ செய்ததை எல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றை எல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 12th : Gospel Husband and wife are no longer two, but one bodyA Reading from the Holy Gospel according to St.Matthew 19: 3-12

August 12th : Gospel 

Husband and wife are no longer two, but one body

A Reading from the Holy Gospel according to St.Matthew 19: 3-12 
Some Pharisees approached Jesus, and to test him they said, ‘Is it against the Law for a man to divorce his wife on any pretext whatever?’ He answered, ‘Have you not read that the creator from the beginning made them male and female and that he said: This is why a man must leave father and mother, and cling to his wife, and the two become one body? They are no longer two, therefore, but one body. So then, what God has united, man must not divide.’
  They said to him, ‘Then why did Moses command that a writ of dismissal should be given in cases of divorce?’ ‘It was because you were so unteachable’ he said ‘that Moses allowed you to divorce your wives, but it was not like this from the beginning. Now I say this to you: the man who divorces his wife – I am not speaking of fornication – and marries another, is guilty of adultery.’
  The disciples said to him, ‘If that is how things are between husband and wife, it is not advisable to marry.’ But he replied, ‘It is not everyone who can accept what I have said, but only those to whom it is granted. There are eunuchs born that way from their mother’s womb, there are eunuchs made so by men and there are eunuchs who have made themselves that way for the sake of the kingdom of heaven. Let anyone accept this who can.’

The Word of the Lord.

August 12th : Responsorial Psalm Isaiah 12 The rejoicing of a redeemed peopleYour anger has passed, O Lord, and you give me comfort.

August 12th : Responsorial Psalm 

Isaiah 12 
The rejoicing of a redeemed people

Your anger has passed, O Lord, and you give me comfort.
Truly, God is my salvation,
  I trust, I shall not fear.
For the Lord is my strength, my song,
  he became my saviour.
With joy you will draw water
  from the wells of salvation.

Your anger has passed, O Lord, and you give me comfort.

Give thanks to the Lord, give praise to his name!
  Make his mighty deeds known to the peoples!
  Declare the greatness of his name.
Your anger has passed, O Lord, and you give me comfort.
Sing a psalm to the Lord
  for he has done glorious deeds;
  make them known to all the earth!
People of Zion, sing and shout for joy,
  for great in your midst is the Holy One of Israel.

Your anger has passed, O Lord, and you give me comfort.

Gospel Acclamation Ps110:7,8

Alleluia, alleluia!
Your precepts, O Lord, are all of them sure;
they stand firm for ever and ever.
Alleluia!

August 12th : First ReadingI clothed you with my own splendour but you made yourself a prostituteA Reading from the Book of Ezekiel 16: 1-15,60,63

August 12th : First Reading

I clothed you with my own splendour but you made yourself a prostitute

A Reading from the Book of Ezekiel 16: 1-15,60,63 
The word of the Lord was addressed to me as follows, ‘Son of man, confront Jerusalem with her filthy crimes. Say, “The Lord says this: By origin and birth you belong to the land of Canaan. Your father was an Amorite and your mother a Hittite. At birth, the very day you were born, there was no one to cut your navel-string, or wash you in cleansing water, or rub you with salt, or wrap you in napkins. No one leaned kindly over you to do anything like that for you. You were exposed in the open fields; you were as unloved as that on the day you were born.
  ‘“I saw you struggling in your blood as I was passing, and I said to you as you lay in your blood: Live, and grow like the grass of the fields. You developed, you grew, you reached marriageable age. Your breasts and your hair both grew, but you were quite naked. Then I saw you as I was passing. Your time had come, the time for love. I spread part of my cloak over you and covered your nakedness; I bound myself by oath, I made a covenant with you – it is the Lord who speaks – and you became mine. I bathed you in water, I washed the blood off you, I anointed you with oil. I gave you embroidered dresses, fine leather shoes, a linen headband and a cloak of silk. I loaded you with jewels, gave you bracelets for your wrists and a necklace for your throat. I gave you nose-ring and earrings; I put a beautiful diadem on your head. You were loaded with gold and silver, and dressed in fine linen and embroidered silks. Your food was the finest flour, honey and oil. You grew more and more beautiful; and you rose to be queen. The fame of your beauty spread through the nations, since it was perfect, because I had clothed you with my own splendour – it is the Lord who speaks.
  ‘“You have become infatuated with your own beauty; you have used your fame to make yourself a prostitute; you have offered your services to all comers. But I will remember the covenant that I made with you when you were a girl, and I will conclude a covenant with you that shall last for ever. And so remember and be covered with shame, and in your confusion be reduced to silence, when I have pardoned you for all that you have done – it is the Lord who speaks.”’

The Word of the Lord.