இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 21 செப்டம்பர், 2022

September 22nd : Responsorial PsalmPsalm 89(90):3-6,12-14,17 O Lord, you have been our refuge from one generation to the next.

September 22nd : Responsorial Psalm

Psalm 89(90):3-6,12-14,17 

O Lord, you have been our refuge from one generation to the next.
You turn men back to dust
  and say: ‘Go back, sons of men.’
To your eyes a thousand years
  are like yesterday, come and gone,
  no more than a watch in the night.

O Lord, you have been our refuge from one generation to the next.

You sweep men away like a dream,
  like the grass which springs up in the morning.
In the morning it springs up and flowers:
  by evening it withers and fades.

O Lord, you have been our refuge from one generation to the next.

Make us know the shortness of our life
  that we may gain wisdom of heart.
Lord, relent! Is your anger for ever?
  Show pity to your servants.

O Lord, you have been our refuge from one generation to the next.

In the morning, fill us with your love;
  we shall exult and rejoice all our days.
Let the favour of the Lord be upon us:
  give success to the work of our hands.

O Lord, you have been our refuge from one generation to the next.

Gospel Acclamation Ps118:18
Alleluia, alleluia!

Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!

September 22nd : First ReadingNothing is new and all is vanityEcclesiastes 1:2-11

September 22nd :  First Reading

Nothing is new and all is vanity

Ecclesiastes 1:2-11 
Vanity of vanities, the Preacher says. Vanity of vanities. All is vanity! For all his toil, his toil under the sun, what does man gain by it?
  A generation goes, a generation comes, yet the earth stands firm for ever. The sun rises, the sun sets; then to its place it speeds and there it rises. Southward goes the wind, then turns to the north; it turns and turns again; back then to its circling goes the wind. Into the sea all the rivers go, and yet the sea is never filled, and still to their goal the rivers go. All things are wearisome. No man can say that eyes have not had enough of seeing, ears their fill of hearing. What was will be again; what has been done will be done again; and there is nothing new under the sun. Take anything of which it may be said, ‘Look now, this is new.’ Already, long before our time, it existed. Only no memory remains of earlier times, just as in times to come next year itself will not be remembered.

The Word of the Lord.

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

செப்டம்பர் 21 : நற்செய்தி வாசகம்இயேசு ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

செப்டம்பர் 21 : நற்செய்தி வாசகம்

இயேசு ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13
அக்காலத்தில்

மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.

இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 21 : பதிலுரைப் பாடல்திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

செப்டம்பர் 21 : பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
1
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. - பல்லவி

3
அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

செப்டம்பர் 21 : புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழாமுதல் வாசகம்இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13

செப்டம்பர் 21 :  புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா

முதல் வாசகம்

இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13
சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சி அடைவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 21st : Gospel It is not the healthy who need the doctor, but the sickA Reading from the Holy Gospel according to St.Matthew 9: 9-13

September 21st : Gospel 

It is not the healthy who need the doctor, but the sick

A Reading from the Holy Gospel according to St.Matthew 9: 9-13 
As Jesus was walking on, he saw a man named Matthew sitting by the customs house, and he said to him, ‘Follow me.’ And he got up and followed him.
  While he was at dinner in the house it happened that a number of tax collectors and sinners came to sit at the table with Jesus and his disciples. When the Pharisees saw this, they said to his disciples, ‘Why does your master eat with tax collectors and sinners?’ When he heard this he replied, ‘It is not the healthy who need the doctor, but the sick. Go and learn the meaning of the words: What I want is mercy, not sacrifice. And indeed I did not come to call the virtuous, but sinners.’

The Word of the Lord.

September 21st : Responsorial PsalmPsalm 18(19):2-5 Their word goes forth through all the earth.

September 21st : Responsorial Psalm

Psalm 18(19):2-5 

Their word goes forth through all the earth.
The heavens proclaim the glory of God,
  and the firmament shows forth the work of his hands.
Day unto day takes up the story
  and night unto night makes known the message.

Their word goes forth through all the earth.

No speech, no word, no voice is heard
  yet their span extends through all the earth,
  their words to the utmost bounds of the world.

Their word goes forth through all the earth.

Gospel Acclamation cf.Te Deum

Alleluia, alleluia!

We praise you, O God,
we acknowledge you to be the Lord.
The glorious company of the apostles praise you, O Lord.
Alleluia!

September 21st : First ReadingWe are all to come to unity, fully mature in the knowledge of the Son of GodEphesians 4: 1-7,11-13

September 21st : First Reading

We are all to come to unity, fully mature in the knowledge of the Son of God

Ephesians 4: 1-7,11-13 
I, the prisoner in the Lord, implore you to lead a life worthy of your vocation. Bear with one another charitably, in complete selflessness, gentleness and patience. Do all you can to preserve the unity of the Spirit by the peace that binds you together. There is one Body, one Spirit, just as you were all called into one and the same hope when you were called. There is one Lord, one faith, one baptism, and one God who is Father of all, over all, through all and within all.
  Each one of us, however, has been given his own share of grace, given as Christ allotted it. To some, his gift was that they should be apostles; to some, prophets; to some, evangelists; to some, pastors and teachers; so that the saints together make a unity in the work of service, building up the body of Christ. In this way we are all to come to unity in our faith and in our knowledge of the Son of God, until we become the perfect Man, fully mature with the fullness of Christ himself.

The Word of the Lord.

திங்கள், 19 செப்டம்பர், 2022

செப்டம்பர் 20 : நற்செய்தி வாசகம்இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

செப்டம்பர் 20 : நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21
அக்காலத்தில்

இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. “உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அவருக்கு அறிவித்தார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 20 : பதிலுரைப் பாடல்திபா 119: 1,27. 30,34. 35,44 (பல்லவி: 35a)பல்லவி: ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.

செப்டம்பர் 20 : பதிலுரைப் பாடல்

திபா 119: 1,27. 30,34. 35,44 (பல்லவி: 35a)

பல்லவி: ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.
1
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
27
உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். - பல்லவி

30
உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.
34
உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். - பல்லவி

35
உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
44
உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.