இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

August 7th : First reading The sons of Israel complain in the desertA reading from the book of Numbers 11:4-15

August 7th :  First reading 

The sons of Israel complain in the desert

A reading from the book of Numbers 11:4-15 
The sons of Israel began to wail, ‘Who will give us meat to eat?’ they said. ‘Think of the fish we used to eat free in Egypt, the cucumbers, melons, leeks, onions and garlic! Here we are wasting away, stripped of everything; there is nothing but manna for us to look at!’
  The manna was like coriander seed, and had the appearance of bdellium. The people went round gathering it, and ground it in a mill or crushed it with a pestle; it was then cooked in a pot and made into pancakes. It tasted like cake made with oil. When the dew fell on the camp at night-time, the manna fell with it.
  Moses heard the people wailing, every family at the door of its tent. The anger of the Lord flared out, and Moses greatly worried over this. And he spoke to the Lord:
  ‘Why do you treat your servant so badly? Why have I not found favour with you, so that you load on me the weight of all this nation? Was it I who conceived all this people, was it I who gave them birth, that you should say to me, “Carry them in your bosom, like a nurse with a baby at the breast, to the land that I swore to give their fathers”? Where am I to find meat to give to all this people, when they come worrying me so tearfully and say, “Give us meat to eat”? I am not able to carry this nation by myself alone; the weight is too much for me. If this is how you want to deal with me, I would rather you killed me! If only I had found favour in your eyes, and not lived to see such misery as this!’

The Word of the Lord.

சனி, 5 ஆகஸ்ட், 2023

ஆகஸ்ட் 6 : நற்செய்தி வாசகம்அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9

ஆகஸ்ட் 6 :  நற்செய்தி வாசகம்

அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9
அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின.

இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.

அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.

இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.

அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்த போது இயேசு, “மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக் கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 6 : இரண்டாம் வாசகம்விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19

ஆகஸ்ட் 6 :  இரண்டாம் வாசகம்

விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19
சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள்.

“என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.

எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 17: 5c
அல்லேலூயா, அல்லேலூயா!

 என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். அல்லேலூயா.

ஆகஸ்ட் 6 : பதிலுரைப் பாடல்திபா 97: 1-2. 5-6. 9 (பல்லவி: 9a, 1a)பல்லவி: உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.

ஆகஸ்ட் 6 :  பதிலுரைப் பாடல்

திபா 97: 1-2. 5-6. 9 (பல்லவி: 9a, 1a)

பல்லவி: உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.
1
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
2
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி

5
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
6
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. - பல்லவி

9
ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! - பல்லவி

ஆகஸ்ட் 6 : ஆண்டவரின் தோற்றமாற்றம் விழாமுதல் வாசகம்அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

ஆகஸ்ட் 6 :  ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா

முதல் வாசகம்

அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 6th : Gospel His face shone like the sunA reading from the Holy Gospel according to St.Matthew 17:1-9 Jesus took with him Peter and James and his brother John and led them up a high mountain where they could be alone. There in their presence he was transfigured: his face shone like the sun and his clothes became as white as the light. Suddenly Moses and Elijah appeared to them; they were talking with him. Then Peter spoke to Jesus. ‘Lord,’ he said ‘it is wonderful for us to be here; if you wish, I will make three tents here, one for you, one for Moses and one for Elijah.’ He was still speaking when suddenly a bright cloud covered them with shadow, and from the cloud there came a voice which said, ‘This is my Son, the Beloved; he enjoys my favour. Listen to him.’ When they heard this the disciples fell on their faces, overcome with fear. But Jesus came up and touched them. ‘Stand up,’ he said ‘do not be afraid.’ And when they raised their eyes they saw no one but only Jesus. As they came down from the mountain Jesus gave them this order, ‘Tell no one about the vision until the Son of Man has risen from the dead.’The Word of the Lord.

August 6th :  Gospel 

His face shone like the sun

A reading from the Holy Gospel according to St.Matthew 17:1-9 

Jesus took with him Peter and James and his brother John and led them up a high mountain where they could be alone. There in their presence he was transfigured: his face shone like the sun and his clothes became as white as the light. Suddenly Moses and Elijah appeared to them; they were talking with him. Then Peter spoke to Jesus. ‘Lord,’ he said ‘it is wonderful for us to be here; if you wish, I will make three tents here, one for you, one for Moses and one for Elijah.’ He was still speaking when suddenly a bright cloud covered them with shadow, and from the cloud there came a voice which said, ‘This is my Son, the Beloved; he enjoys my favour. Listen to him.’ When they heard this the disciples fell on their faces, overcome with fear. But Jesus came up and touched them. ‘Stand up,’ he said ‘do not be afraid.’ And when they raised their eyes they saw no one but only Jesus.
  As they came down from the mountain Jesus gave them this order, ‘Tell no one about the vision until the Son of Man has risen from the dead.’

The Word of the Lord.
Jesus took with him Peter and James and his brother John and led them up a high mountain where they could be alone. There in their presence he was transfigured: his face shone like the sun and his clothes became as white as the light. Suddenly Moses and Elijah appeared to them; they were talking with him. Then Peter spoke to Jesus. ‘Lord,’ he said ‘it is wonderful for us to be here; if you wish, I will make three tents here, one for you, one for Moses and one for Elijah.’ He was still speaking when suddenly a bright cloud covered them with shadow, and from the cloud there came a voice which said, ‘This is my Son, the Beloved; he enjoys my favour. Listen to him.’ When they heard this the disciples fell on their faces, overcome with fear. But Jesus came up and touched them. ‘Stand up,’ he said ‘do not be afraid.’ And when they raised their eyes they saw no one but only Jesus.
  As they came down from the mountain Jesus gave them this order, ‘Tell no one about the vision until the Son of Man has risen from the dead.’

The Word of the Lord.

August 6th : Second reading We heard this ourselves, spoken from heaven2 Peter 1:16-19

August 6th :  Second reading 

We heard this ourselves, spoken from heaven

2 Peter 1:16-19 
It was not any cleverly invented myths that we were repeating when we brought you the knowledge of the power and the coming of our Lord Jesus Christ; we had seen his majesty for ourselves. He was honoured and glorified by God the Father, when the Sublime Glory itself spoke to him and said, ‘This is my Son, the Beloved; he enjoys my favour.’ We heard this ourselves, spoken from heaven, when we were with him on the holy mountain.
  So we have confirmation of what was said in prophecies; and you will be right to depend on prophecy and take it as a lamp for lighting a way through the dark until the dawn comes and the morning star rises in your minds.

The Word of the Lord.

Gospel Acclamation Mt17:5

Alleluia, alleluia!

This is my Son, the Beloved:
he enjoys my favour.
Listen to him.
Alleluia!

August 6th : Responsorial PsalmPsalm 96(97):1-2,5-6,9 The Lord is king, most high above all the earth.

August 6th :  Responsorial Psalm

Psalm 96(97):1-2,5-6,9 

The Lord is king, most high above all the earth.
The Lord is king, let earth rejoice,
  let all the coastlands be glad.
Cloud and darkness are his raiment;
  his throne, justice and right.

The Lord is king, most high above all the earth.

The mountains melt like wax
  before the Lord of all the earth.
The skies proclaim his justice;
  all peoples see his glory.

The Lord is king, most high above all the earth.

For you indeed are the Lord
  most high above all the earth,
  exalted far above all spirits.

The Lord is king, most high above all the earth.

August 6th : First readingHis robe was white as snowA reading from the book of Daniel 7:9-10,13-14

August 6th :   First reading

His robe was white as snow

A reading from the book of Daniel 7:9-10,13-14 
As I watched:
Thrones were set in place
and one of great age took his seat.
His robe was white as snow,
the hair of his head as pure as wool.
His throne was a blaze of flames,
its wheels were a burning fire.
A stream of fire poured out,
issuing from his presence.
A thousand thousand waited on him,
ten thousand times ten thousand stood before him.
A court was held
and the books were opened.
I gazed into the visions of the night.
And I saw, coming on the clouds of heaven,
one like a son of man.
He came to the one of great age
and was led into his presence.
On him was conferred sovereignty,
glory and kingship,
and men of all peoples, nations and languages became his servants.
His sovereignty is an eternal sovereignty
which shall never pass away,
nor will his empire ever be destroyed.

The Word of the Lord.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

ஆகஸ்ட் 5 : நற்செய்தி வாசகம்ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12

ஆகஸ்ட் 5 :  நற்செய்தி வாசகம்

ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12
அக்காலத்தில்

குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான்.

ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.

ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.

யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.