இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

September 6th : Gospel He would not allow them to speak because they knew he was the ChristA reading from the Holy Gospel according to St.Luke 4:38-44

September 6th :  Gospel 

He would not allow them to speak because they knew he was the Christ

A reading from the Holy Gospel according to St.Luke 4:38-44 
Leaving the synagogue, Jesus went to Simon’s house. Now Simon’s mother-in-law was suffering from a high fever and they asked him to do something for her. Leaning over her he rebuked the fever and it left her. And she immediately got up and began to wait on them.
  At sunset all those who had friends suffering from diseases of one kind or another brought them to him, and laying his hands on each he cured them. Devils too came out of many people, howling, ‘You are the Son of God.’ But he rebuked them and would not allow them to speak because they knew that he was the Christ.
  When daylight came he left the house and made his way to a lonely place. The crowds went to look for him, and when they had caught up with him they wanted to prevent him leaving them, but he answered, ‘I must proclaim the Good News of the kingdom of God to the other towns too, because that is what I was sent to do.’ And he continued his preaching in the synagogues of Judaea.

The Word of the Lord.

September 6th : Responsorial PsalmPsalm 51(52):10-11 I trust in the goodness of God for ever and ever.

September 6th :  Responsorial Psalm

Psalm 51(52):10-11 

I trust in the goodness of God for ever and ever.
I am like a growing olive tree
  in the house of God.
I trust in the goodness of God
  for ever and ever.

I trust in the goodness of God for ever and ever.

I will thank you for evermore;
  for this is your doing.
I will proclaim that your name is good,
  in the presence of your friends.

I trust in the goodness of God for ever and ever.

Gospel Acclamation 1P1:25

Alleluia, alleluia!

The word of the Lord remains for ever:
What is this word?
It is the Good News that has been brought to you.
Alleluia!

September 6th : First readingThe message of the truth has reached you and is spreading all over the worldA reading from the letter of St.Paul to the Colossians 1:1-8

September 6th :  First reading

The message of the truth has reached you and is spreading all over the world

A reading from the letter of St.Paul to the Colossians 1:1-8 
From Paul, appointed by God to be an apostle of Christ Jesus, and from our brother Timothy to the saints in Colossae, our faithful brothers in Christ: Grace and peace to you from God our Father.
  We have never failed to remember you in our prayers and to give thanks for you to God, the Father of our Lord Jesus Christ, ever since we heard about your faith in Christ Jesus and the love that you show towards all the saints because of the hope which is stored up for you in heaven. It is only recently that you heard of this, when it was announced in the message of the truth. The Good News which has reached you is spreading all over the world and producing the same results as it has among you ever since the day when you heard about God’s grace and understood what this really is. Epaphras, who taught you, is one of our closest fellow workers and a faithful deputy for us as Christ’s servant, and it was he who told us all about your love in the Spirit.

The Word of the Lord.

திங்கள், 4 செப்டம்பர், 2023

செப்டம்பர் 5 : நற்செய்தி வாசகம்நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37

செப்டம்பர் 5  :  நற்செய்தி வாசகம்

நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37
அக்காலத்தில்

இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது.

“வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று.

எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 5 : பதிலுரைப் பாடல்திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 13)பல்லவி: வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.

செப்டம்பர் 5 :  பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 13)

பல்லவி: வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.
1
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா!

 நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

செப்டம்பர் 5 : முதல் வாசகம்அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார்.திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6, 9-11

செப்டம்பர் 5 :  முதல் வாசகம்

அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6, 9-11
சகோதரர் சகோதரிகளே,

இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.

‘எங்கும் அமைதி, ஆபத்து இல்லை’ என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார். ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 5th : Gospel 'I know who you are: the Holy One of God'A reading from the Holy Gospel according to St.Luke 4: 31-37.

September 5th :  Gospel 

'I know who you are: the Holy One of God'

A reading from the Holy Gospel according to St.Luke 4: 31-37.
Jesus went down to Capernaum, a town in Galilee, and taught them on the sabbath. And his teaching made a deep impression on them because he spoke with authority.
  In the synagogue there was a man who was possessed by the spirit of an unclean devil, and it shouted at the top of its voice, ‘Ha! What do you want with us, Jesus of Nazareth? Have you come to destroy us? I know who you are: the Holy One of God.’ But Jesus said sharply, ‘Be quiet! Come out of him!’ And the devil, throwing the man down in front of everyone, went out of him without hurting him at all. Astonishment seized them and they were all saying to one another, ‘What teaching! He gives orders to unclean spirits with authority and power and they come out.’ And reports of him went all through the surrounding countryside.

The Word of the Lord.

September 5th : Responsorial PsalmPsalm 26(27):1,4,13-14 I am sure I shall see the Lord’s goodness in the land of the living.

September 5th :  Responsorial Psalm

Psalm 26(27):1,4,13-14 

I am sure I shall see the Lord’s goodness in the land of the living.
The Lord is my light and my help;
  whom shall I fear?
The Lord is the stronghold of my life;
  before whom shall I shrink?

I am sure I shall see the Lord’s goodness in the land of the living.

There is one thing I ask of the Lord,
  for this I long,
to live in the house of the Lord,
  all the days of my life,
to savour the sweetness of the Lord,
  to behold his temple.

I am sure I shall see the Lord’s goodness in the land of the living.

I am sure I shall see the Lord’s goodness
  in the land of the living.
Hope in him, hold firm and take heart.
  Hope in the Lord!

I am sure I shall see the Lord’s goodness in the land of the living.

Gospel Acclamation Heb4:12

Alleluia, alleluia!

The word of God is something alive and active:
it can judge secret emotions and thoughts.
Alleluia!

September 5th : First readingKeep strengthening one anotherA reading from the first letter of St.Paul to the Thessalonians 5: 1-6, 9-11

September 5th :  First reading

Keep strengthening one another

A reading from the first letter of St.Paul to the Thessalonians 5: 1-6, 9-11 
You will not be expecting us to write anything to you, brothers, about ‘times and seasons’, since you know very well that the Day of the Lord is going to come like a thief in the night. It is when people are saying, ‘How quiet and peaceful it is’ that the worst suddenly happens, as suddenly as labour pains come on a pregnant woman; and there will be no way for anybody to evade it.
  But it is not as if you live in the dark, my brothers, for that Day to overtake you like a thief. No, you are all sons of light and sons of the day: we do not belong to the night or to darkness, so we should not go on sleeping, as everyone else does, but stay wide awake and sober. God never meant us to experience the Retribution, but to win salvation through our Lord Jesus Christ, who died for us so that, alive or dead, we should still live united to him. So give encouragement to each other, and keep strengthening one another, as you do already.

The Word of the Lord.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

செப்டம்பர் 4 : நற்செய்தி வாசகம்இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30

செப்டம்பர் 4 :  நற்செய்தி வாசகம்

இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30
அக்காலத்தில்

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.

ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.