இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 25 செப்டம்பர், 2023

செப்டம்பர் 26 : முதல் வாசகம்இறைவனின் கோவிலைக் கட்டி முடித்து பாஸ்கா விழாக் கொண்டாடுங்கள்.எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 6: 7-8, 12b, 14-20

செப்டம்பர் 26 :  முதல் வாசகம்

இறைவனின் கோவிலைக் கட்டி முடித்து பாஸ்கா விழாக் கொண்டாடுங்கள்.

எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 6: 7-8, 12b, 14-20
கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடை செய்யாதிருங்கள். யூதர்களின் ஆளுநரும், யூதர்களின் மூப்பர்களும் கடவுளின் கோவிலை, அது முன்பு இருந்த இடத்தில், மீண்டும் எழுப்பட்டும். யூதர்களின் மூப்பர் கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆணை பிறப்பிக்கிறேன். அவர்கள் வேலை தடைப்படாதபடி, அதற்கான முழுச் செலவைப் பேராற்றின் அக்கரைப் பகுதியிலிருந்து வரும் வரியாகிய அரச வருவாயினின்று கொடுக்க வேண்டும். தாரியு என்னும் நானே இக்கட்டளையைப் பிறப்பித்தேன். இது சரிவர நிறைவேற்றப்படட்டும்.

இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்கரியாவும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்; வேலையும் முன்னேறிக் கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப் பணியை முடித்தனர். மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது.

இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர், அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த ஏனையோர், கடவுளின் கோவில் அர்ப்பண விழாவை அக்களிப்புடன் கொண்டாடினார்கள். கடவுளின் கோவில் அர்ப்பண விழாவில் நூறு காளைகளையும், இருநூறு செம்மறிக் கிடாய்களையும், நானூறு செம்மறிக் குட்டிகளையும் ஒப்புக்கொடுத்தார்கள்; இஸ்ரயேல் குலக் கணக்கின்படி, பன்னிரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பாவம் போக்கும் பலியாகச் செலுத்தினார்கள். மோசேயின் நூலில் எழுதியுள்ளபடி, எருசலேமில் கடவுளின் பணிக்காகக் குருக்களை அவர்களின் பிரிவின்படியும் லேவியரை அவர்களின் துறைகளின்படியும் அவர்கள் நியமித்தனர்.

மேலும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த மக்கள் பாஸ்கா விழாவை முதல் மாதத்தின் பதினான்காம் நாள் கொண்டாடினர். குருக்களும் லேவியரும் ஒன்றிணைந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டனர். அவர்கள் தூய்மையானார்கள். அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லா மக்களுக்காகவும், சகோதரக் குருக்களுக்காகவும், தங்களுக்காகவும் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொன்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 26th : Gospel 'My mother and my brothers are those who hear the word of God'A reading from the Holy Gospel according to St.Luke 8:19-21

September 26th :  Gospel 

'My mother and my brothers are those who hear the word of God'

A reading from the Holy Gospel according to St.Luke 8:19-21 
The mother and the brothers of Jesus came looking for him, but they could not get to him because of the crowd. He was told, ‘Your mother and brothers are standing outside and want to see you.’ But he said in answer, ‘My mother and my brothers are those who hear the word of God and put it into practice.’

The Word of the Lord.

September 26th : Responsorial PsalmPsalm 121(122):1-5 I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

September 26th :  Responsorial Psalm

Psalm 121(122):1-5 

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’
I rejoiced when I heard them say:
  ‘Let us go to God’s house.’
And now our feet are standing
  within your gates, O Jerusalem.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

Jerusalem is built as a city
  strongly compact.
It is there that the tribes go up,
  the tribes of the Lord.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

For Israel’s law it is,
  there to praise the Lord’s name.
There were set the thrones of judgement
  of the house of David.

I rejoiced when I heard them say: ‘Let us go to God’s house.’

Gospel Acclamation cf.Ps129:5

Alleluia, alleluia!

My soul is waiting for the Lord,
I count on his word.
Alleluia!

September 26th : First readingDarius king of Persia pays for the rebuilding of the Temple of GodA reading from the book of Ezra 6:7-8,12,14-20

September 26th :  First reading

Darius king of Persia pays for the rebuilding of the Temple of God

A reading from the book of Ezra 6:7-8,12,14-20 
King Darius wrote to the satrap of Transeuphrates and his colleagues: ‘Leave the high commissioner of Judah and the elders of the Jews to work on this Temple of God; they are to rebuild this Temple of God on its ancient site. This, I decree, is how you must assist the elders of the Jews in the reconstruction of this Temple of God: the expenses of these people are to be paid, promptly and without fail, from the royal revenue – that is, from the tribute of Transeuphrates. May the God who causes his name to live there overthrow any king or people who dares to defy this and destroy the Temple of God in Jerusalem! I, Darius, have issued this decree. Let it be obeyed to the letter!’
  The elders of the Jews prospered with their building, inspired by Haggai the prophet and Zechariah son of Iddo. They finished the building in accordance with the order of the God of Israel and the order of Cyrus and of Darius. This Temple was finished on the twenty-third day of the month of Adar; it was the sixth year of the reign of King Darius. The Israelites – the priests, the Levites and the remainder of the exiles – joyfully dedicated this Temple of God; for the dedication of this Temple of God they offered one hundred bulls, two hundred rams, four hundred lambs and, as a sacrifice for sin for the whole of Israel, twelve he-goats, corresponding to the number of the tribes of Israel. Then they installed the priests according to their orders in the service of the Temple of God in Jerusalem, as is written in the Book of Moses.
  The exiles celebrated the Passover on the fourteenth day of the first month. The Levites, as one man, had purified themselves; all were pure, so they sacrificed the passover for all the exiles, for their brothers the priests and for themselves.

The Word of the Lord.

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

செப்டம்பர் 25 : நற்செய்தி வாசகம்உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 16-18

செப்டம்பர் 25 : நற்செய்தி வாசகம்

உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 16-18
அக்காலத்தில்

மக்கள் கூட்டத்தை நோக்கி இயேசு கூறியது: “எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.

ஆகையால், நீங்கள் எத்தகைய மன நிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 25 : பதிலுரைப் பாடல்திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a)பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.

செப்டம்பர் 25 :  பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a)

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.
1
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.
2ab
அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. - பல்லவி

2cd
“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3
ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். - பல்லவி

4
ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5
கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். - பல்லவி

6
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 16
அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

செப்டம்பர் 25 : முதல் வாசகம்யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக!எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 1: 1-6

செப்டம்பர் 25 :  முதல் வாசகம்

யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக!

எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 1: 1-6
எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் அவரது உள்ளுணர்வை ஆண்டவர் தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்து மூலம் வெளியிட்டார்.

“பாரசீக மன்னர் சைரசு கூறுவது: விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணகத்திலுள்ள எல்லா அரசுகளையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கென ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் என்னை நியமித்துள்ளார். அவருடைய எல்லா மக்களிலும் யார் யார் அவரைச் சார்ந்துள்ளனரோ - கடவுள் அவர்களோடு இருப்பாராக! - அவர்கள், யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக! எருசலேமில் இருக்கும் அவரே கடவுள்! எஞ்சியுள்ளவன் ஒவ்வொருவனும் எங்கு தங்கியிருந்தாலும் அங்கு வாழும் மக்கள், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலுக்குத் தன்னார்வக் காணிக்கை அனுப்புவதோடு, அவனுக்கும் வெள்ளி, பொன், மற்றப் பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுவார்களாக!"

அப்போது யூதா, பென்யமினுடைய குலத் தலைவர்களும், குருக்களும், லேவியரும், எருசலேமில் ஆண்டவரின் கோவிலைக் கட்டச் செல்லுமாறு ஆண்டவரால் தூண்டப்பெற்ற அனைவரும் புறப்பட்டார்கள். அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மக்கள் தன்னார்வக் காணிக்கை அனைத்தும் கொடுத்ததுமல்லாமல் அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும், மற்றப் பொருள்களையும், கால்நடைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொடுத்து உதவினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 25th : Gospel Luke 8:16-18 Anyone who has will be given more

September 25th : Gospel 

Luke 8:16-18 

Anyone who has will be given more
Jesus said to the crowds:
  ‘No one lights a lamp to cover it with a bowl or to put it under a bed. No, he puts it on a lamp-stand so that people may see the light when they come in. For nothing is hidden but it will be made clear, nothing secret but it will be known and brought to light. So take care how you hear; for anyone who has will be given more; from anyone who has not, even what he thinks he has will be taken away.’

The Word of the Lord

September 25th : Responsorial Psalm Psalm 125(126) What marvels the Lord worked for us.

September 25th : Responsorial Psalm 

Psalm 125(126) 

What marvels the Lord worked for us.
When the Lord delivered Zion from bondage,
  it seemed like a dream.
Then was our mouth filled with laughter,
  on our lips there were songs.

What marvels the Lord worked for us.

The heathens themselves said: ‘What marvels
  the Lord worked for them!’
What marvels the Lord worked for us!
  Indeed we were glad.

What marvels the Lord worked for us.

Deliver us, O Lord, from our bondage
  as streams in dry land.
Those who are sowing in tears
  will sing when they reap.

What marvels the Lord worked for us.

They go out, they go out, full of tears,
  carrying seed for the sowing:
they come back, they come back, full of song,
  carrying their sheaves.

What marvels the Lord worked for us.

Gospel Acclamation James1:18

Alleluia, alleluia!
By his own choice the Father made us his children
by the message of the truth,
so that we should be a sort of first-fruits
of all that he created.
Alleluia!

September 25th : First reading Ezra 1:1-6 Cyrus king of Persia frees the Jews to return to Jerusalem

September 25th : First reading 

Ezra 1:1-6 

Cyrus king of Persia frees the Jews to return to Jerusalem
In the first year of Cyrus king of Persia, to fulfil the word of the Lord that was spoken through Jeremiah, the Lord roused the spirit of Cyrus king of Persia to issue a proclamation and to have it publicly displayed throughout his kingdom: ‘Thus speaks Cyrus king of Persia, “The Lord, the God of heaven, has given me all the kingdoms of the earth; he has ordered me to build him a Temple in Jerusalem, in Judah. Whoever there is among you of all his people, may his God be with him! Let him go up to Jerusalem in Judah to build the Temple of the Lord, the God of Israel – he is the God who is in Jerusalem. And let each survivor, wherever he lives, be helped by the people of that place with silver and gold, with goods and cattle, as well as voluntary offerings for the Temple of God which is in Jerusalem.”’
  Then the heads of families of Judah and of Benjamin, the priests and the Levites, in fact all whose spirit had been roused by God, prepared to go and rebuild the Temple of the Lord in Jerusalem; and all their neighbours gave them every assistance with silver, gold, goods, cattle, quantities of costly gifts and with voluntary offerings of every kind.

The Word of the Lord