இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

பிப்ரவரி 8 : நற்செய்தி வாசகம்மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

பிப்ரவரி 8 :  நற்செய்தி வாசகம்

மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள். 

 மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34 
அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 8 : பதிலுரைப் பாடல்திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

பிப்ரவரி 8 :  பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; - பல்லவி

3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! 

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

பிப்ரவரி 8 : முதல் வாசகம்கடவுள் இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக!எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 15-17, 20-21

பிப்ரவரி 8 :  முதல் வாசகம்

கடவுள் இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 15-17, 20-21

சகோதரர் சகோதரிகளே,

இயேசு வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக. அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும். நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.

உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாய் இருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.

என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே. அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி, இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 8th : Gospel They were like sheep without a shepherdA Reading from the Holy Gospel according to St.Mark 6:30-34

February 8th : Gospel 

They were like sheep without a shepherd

A Reading  from the Holy Gospel according to St.Mark 6:30-34 
The apostles rejoined Jesus and told him all they had done and taught. Then he said to them, ‘You must come away to some lonely place all by yourselves and rest for a while’; for there were so many coming and going that the apostles had no time even to eat. So they went off in a boat to a lonely place where they could be by themselves. But people saw them going, and many could guess where; and from every town they all hurried to the place on foot and reached it before them. So as he stepped ashore he saw a large crowd; and he took pity on them because they were like sheep without a shepherd, and he set himself to teach them at some length.

The Gospel of the Lord.

February 8th : Responsorial Psalm Psalm 22(23) The Lord is my shepherd: there is nothing I shall want

February 8th :  Responsorial Psalm 

Psalm 22(23) 

The Lord is my shepherd: there is nothing I shall want.
The Lord is my shepherd;
  there is nothing I shall want.
Fresh and green are the pastures
  where he gives me repose.
Near restful waters he leads me,
  to revive my drooping spirit.

The Lord is my shepherd: there is nothing I shall want.

He guides me along the right path;
  he is true to his name.
If I should walk in the valley of darkness
  no evil would I fear.
You are there with your crook and your staff;
  with these you give me comfort.

The Lord is my shepherd: there is nothing I shall want.

You have prepared a banquet for me
  in the sight of my foes.
My head you have anointed with oil;
  my cup is overflowing.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Surely goodness and kindness shall follow me
  all the days of my life.
In the Lord’s own house shall I dwell
  for ever and ever.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!

The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

February 8th : First ReadingMay God turn us all into whatever is acceptable to himself through Jesus ChristA reading from the letter to the Hebrews 13: 15-17, 20-21

February 8th :  First Reading

May God turn us all into whatever is acceptable to himself through Jesus Christ

A reading from the letter to the Hebrews 13: 15-17, 20-21 
Through Christ, let us offer God an unending sacrifice of praise, a verbal sacrifice that is offered every time we acknowledge his name. Keep doing good works and sharing your resources, for these are sacrifices that please God.
  Obey your leaders and do as they tell you, because they must give an account of the way they look after your souls; make this a joy for them to do, and not a grief – you yourselves would be the losers. I pray that the God of peace, who brought our Lord Jesus back from the dead to become the great Shepherd of the sheep by the blood that sealed an eternal covenant, may make you ready to do his will in any kind of good action; and turn us all into whatever is acceptable to himself through Jesus Christ, to whom be glory for ever and ever, Amen.

The Word of the Lord.

வியாழன், 6 பிப்ரவரி, 2025

February 7th : Gospel The beheading of John the Baptist A Reading from the Holy Gospel according to St.Mark 6:14-29

 February 7th :  Gospel 

The beheading of John the Baptist

A Reading from the Holy Gospel according to St.Mark 6:14-29 


King Herod had heard about Jesus, since by now his name was well known. Some were saying, ‘John the Baptist has risen from the dead, and that is why miraculous powers are at work in him.’ Others said, ‘He is Elijah’; others again, ‘He is a prophet, like the prophets we used to have.’ But when Herod heard this he said, ‘It is John whose head I cut off; he has risen from the dead.’

  Now it was this same Herod who had sent to have John arrested, and had him chained up in prison because of Herodias, his brother Philip’s wife whom he had married. For John had told Herod, ‘It is against the law for you to have your brother’s wife.’ As for Herodias, she was furious with him and wanted to kill him; but she was not able to, because Herod was afraid of John, knowing him to be a good and holy man, and gave him his protection. When he had heard him speak he was greatly perplexed, and yet he liked to listen to him.

  An opportunity came on Herod’s birthday when he gave a banquet for the nobles of his court, for his army officers and for the leading figures in Galilee. When the daughter of this same Herodias came in and danced, she delighted Herod and his guests; so the king said to the girl, ‘Ask me anything you like and I will give it you.’ And he swore her an oath, ‘I will give you anything you ask, even half my kingdom.’ She went out and said to her mother, ‘What shall I ask for?’ She replied, ‘The head of John the Baptist.’ The girl hurried straight back to the king and made her request, ‘I want you to give me John the Baptist’s head, here and now, on a dish.’ The king was deeply distressed but, thinking of the oaths he had sworn and of his guests, he was reluctant to break his word to her. So the king at once sent one of the bodyguard with orders to bring John’s head. The man went off and beheaded him in prison; then he brought the head on a dish and gave it to the girl, and the girl gave it to her mother. When John’s disciples heard about this, they came and took his body and laid it in a tomb.

The Word of the Lord.


February 7th : Responsorial Psalm Psalm 26(27):1,3,5,8-9

 February 7th :  Responsorial Psalm

Psalm 26(27):1,3,5,8-9 


The Lord is my light and my help.

The Lord is my light and my help;

  whom shall I fear?

The Lord is the stronghold of my life;

  before whom shall I shrink?

The Lord is my light and my help.

Though an army encamp against me

  my heart would not fear.

Though war break out against me

  even then would I trust.

The Lord is my light and my help.

For there he keeps me safe in his tent

  in the day of evil.

He hides me in the shelter of his tent,

  on a rock he sets me safe.

The Lord is my light and my help.

It is your face, O Lord, that I seek;

  hide not your face.

Dismiss not your servant in anger;

  you have been my help.

The Lord is my light and my help.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Blessed are those who,

with a noble and generous heart,

take the word of God to themselves

and yield a harvest through their perseverance.

Alleluia!

February 7th : First Reading Jesus Christ is the same today as he was yesterday and will be for ever A reading from the letter to the Hebrews 13: 1-8

 February 7th :  First Reading 

Jesus Christ is the same today as he was yesterday and will be for ever

A reading from the letter to the Hebrews 13: 1-8 


Continue to love each other like brothers, and remember always to welcome strangers, for by doing this, some people have entertained angels without knowing it. Keep in mind those who are in prison, as though you were in prison with them; and those who are being badly treated, since you too are in the one body. Marriage is to be honoured by all, and marriages are to be kept undefiled, because fornicators and adulterers will come under God’s judgement. Put greed out of your lives and be content with whatever you have; God himself has said: I will not fail you or desert you, and so we can say with confidence: With the Lord to help me, I fear nothing: what can man do to me?

  Remember your leaders, who preached the word of God to you, and as you reflect on the outcome of their lives, imitate their faith. Jesus Christ is the same today as he was yesterday and as he will be for ever.

The Word of the Lord.

பிப்ரவரி 7 : நற்செய்தி வாசகம் நான் வெட்டச் செய்த யோவான் இவரே! இவர் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்; ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 14-29

 பிப்ரவரி 7 :  நற்செய்தி வாசகம்

நான் வெட்டச் செய்த யோவான் இவரே! இவர் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்;

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 14-29


அக்காலத்தில்

இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், “இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்; இதனால்தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன” என்றனர். வேறு சிலர், “இவர் எலியா” என்றனர். மற்றும் சிலர், “ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே” என்றனர். இதைக் கேட்ட ஏரோது, “இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்” என்று கூறினான்.

இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டுமிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.

ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான். “நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன் தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள்.

உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.