இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

பிப்ரவரி 24 : நற்செய்தி வாசகம்நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-29

பிப்ரவரி 24 :  நற்செய்தி வாசகம்

நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-29
அக்காலத்தில்

பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறை நூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் இவர்களோடு எதைப் பற்றி வாதாடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை” என்று கூறினார்.

அதற்கு அவர் அவர்களிடம், “நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது.

அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, “இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?” என்று கேட்டார். அதற்கு அவர், “குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்றார்.

இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” என்று கதறினார்.

அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, “ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே” என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், “அவன் இறந்துவிட்டான்” என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.

அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டனர். அதற்கு அவர், “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

பிப்ரவரி 24 : பதிலுரைப் பாடல்திபா 93: 1ab. 1c-2. 5 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

பிப்ரவரி 24 :  பதிலுரைப் பாடல்

திபா 93: 1ab. 1c-2. 5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.
1ab
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். - பல்லவி

1c
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.
2
உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். - பல்லவி

5
உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! 

இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

பிப்ரவரி 24 : முதல் வாசகம்ஞானமே எல்லாவற்றுக்கும் முன்னர் உண்டாக்கப்பட்டது.சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-10

பிப்ரவரி 24 :   முதல் வாசகம்

ஞானமே எல்லாவற்றுக்கும் முன்னர் உண்டாக்கப்பட்டது.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-10
ஞானமெல்லாம் ஆண்டவரிடம் இருந்தே வருகின்றது; அது என்றும் அவரோடு இருக்கின்றது.

கடல் மணலையோ மழைத் துளியையோ முடிவில்லாக் காலத்தையோ யாரே கணக்கிடுவர்? வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்?

எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது; கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது. உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று; என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள்.

ஞானத்தின் ஆணிவேர் யாருக்கு வெளியிடப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவர் எவர்? ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்துகொண்டவர் யார்? ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்; தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்கு உரியவர்.

அவரே ஞானத்தைப் படைத்தவர்; அதனைக் கண்டு கணக்கிட்டவர்; தம் வேலைப்பாடுகளை எல்லாம் அதனால் நிரப்பியவர். தம் ஈகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்; தம்மீது அன்புகூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 24th : Gospel Help the little faith I have!A Reading from the Holy Gospel according to St.Mark 9: 14-29

February 24th :  Gospel 

Help the little faith I have!

A Reading from the Holy Gospel according to St.Mark 9: 14-29 
When Jesus, with Peter, James and John came down from the mountain and rejoined the disciples, they saw a large crowd round them and some scribes arguing with them. The moment they saw him the whole crowd were struck with amazement and ran to greet him. ‘What are you arguing about with them?’ he asked. A man answered him from the crowd, ‘Master, I have brought my son to you; there is a spirit of dumbness in him, and when it takes hold of him it throws him to the ground, and he foams at the mouth and grinds his teeth and goes rigid. And I asked your disciples to cast it out and they were unable to.’ ‘You faithless generation’ he said to them in reply. ‘How much longer must I be with you? How much longer must I put up with you? Bring him to me.’ They brought the boy to him, and as soon as the spirit saw Jesus it threw the boy into convulsions, and he fell to the ground and lay writhing there, foaming at the mouth. Jesus asked the father, ‘How long has this been happening to him?’ ‘From childhood,’ he replied ‘and it has often thrown him into the fire and into the water, in order to destroy him. But if you can do anything, have pity on us and help us.’ ‘If you can?’ retorted Jesus. ‘Everything is possible for anyone who has faith.’ Immediately the father of the boy cried out, ‘I do have faith. Help the little faith I have!’ And when Jesus saw how many people were pressing round him, he rebuked the unclean spirit. ‘Deaf and dumb spirit,’ he said ‘I command you: come out of him and never enter him again.’ Then throwing the boy into violent convulsions it came out shouting, and the boy lay there so like a corpse that most of them said, ‘He is dead.’ But Jesus took him by the hand and helped him up, and he was able to stand. When he had gone indoors his disciples asked him privately, ‘Why were we unable to cast it out?’ ‘This is the kind’ he answered ‘that can only be driven out by prayer.’

The Word of the Lord.

February 24th : Responsorial PsalmPsalm 92(93):1-2,5 The Lord is king, with majesty enrobed.

February 24th :  Responsorial Psalm

Psalm 92(93):1-2,5 

The Lord is king, with majesty enrobed.
The Lord is king, with majesty enrobed;
  the Lord has robed himself with might,
  he has girded himself with power.

The Lord is king, with majesty enrobed.

The world you made firm, not to be moved;
  your throne has stood firm from of old.
  From all eternity, O Lord, you are.

The Lord is king, with majesty enrobed.

Truly your decrees are to be trusted.
  Holiness is fitting to your house,
  O Lord, until the end of time.

The Lord is king, with majesty enrobed.

Gospel Acclamation 1P1:25

Alleluia, alleluia!

The word of the Lord remains for ever:
What is this word?
It is the Good News that has been brought to you.
Alleluia!

February 24th : First ReadingBefore all other things, wisdom was createdA reading from the book of Ecclesiasticus 1:1-10

February 24th :   First Reading

Before all other things, wisdom was created

A reading from the book of Ecclesiasticus 1:1-10 
All wisdom is from the Lord,
  and it is his own for ever.
The sand of the sea and the raindrops,
  and the days of eternity, who can assess them?
The height of the sky and the breadth of the earth,
  and the depth of the abyss, who can probe them?
Before all other things wisdom was created,
  shrewd understanding is everlasting.
For whom has the root of wisdom ever been uncovered?
  Her resourceful ways, who knows them?
One only is wise, terrible indeed,
  seated on his throne, the Lord.
He himself has created her, looked on her and assessed her,
  and poured her out on all his works
to be with all mankind as his gift,
  and he conveyed her to those who love him.

The Word of the Lord.

சனி, 22 பிப்ரவரி, 2025

February 23rd : Gospel Love your enemies A Reading from the Holy Gospel according to St.Luke 6: 27-38

 February 23rd : Gospel 

Love your enemies

A Reading from the Holy Gospel according to St.Luke 6: 27-38 


Jesus said to his disciples: ‘I say this to you who are listening: Love your enemies, do good to those who hate you, bless those who curse you, pray for those who treat you badly. To the man who slaps you on one cheek, present the other cheek too; to the man who takes your cloak from you, do not refuse your tunic. Give to everyone who asks you, and do not ask for your property back from the man who robs you. Treat others as you would like them to treat you. If you love those who love you, what thanks can you expect? Even sinners love those who love them. And if you do good to those who do good to you, what thanks can you expect? For even sinners do that much. And if you lend to those from whom you hope to receive, what thanks can you expect? Even sinners lend to sinners to get back the same amount. Instead, love your enemies and do good, and lend without any hope of return. You will have a great reward, and you will be sons of the Most High, for he himself is kind to the ungrateful and the wicked.

  ‘Be compassionate as your Father is compassionate. Do not judge, and you will not be judged yourselves; do not condemn, and you will not be condemned yourselves; grant pardon, and you will be pardoned. Give, and there will be gifts for you: a full measure, pressed down, shaken together, and running over, will be poured into your lap; because the amount you measure out is the amount you will be given back.’

The Word of the Lord.

February 23rd : Second Reading The first Adam became a living soul; the last Adam, a life-giving spirit A Reading from the First Letter of St.Paul to the Corinthians 15: 45-49

 February 23rd :  Second Reading

The first Adam became a living soul; the last Adam, a life-giving spirit

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 15: 45-49 


The first man, Adam, as scripture says, became a living soul; but the last Adam has become a life-giving spirit. That is, first the one with the soul, not the spirit, and after that, the one with the spirit. The first man, being from the earth, is earthly by nature; the second man is from heaven. As this earthly man was, so are we on earth; and as the heavenly man is, so are we in heaven. And we, who have been modelled on the earthly man, will be modelled on the heavenly man.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!

Open our heart, O Lord,

to accept the words of your Son.

Alleluia!


February 23rd : Responsorial Psalm Psalm 102(103):1-4,8,10,12-13

 February 23rd :  Responsorial Psalm

Psalm 102(103):1-4,8,10,12-13 


The Lord is compassion and love.

My soul, give thanks to the Lord

  all my being, bless his holy name.

My soul, give thanks to the Lord

  and never forget all his blessings.

The Lord is compassion and love.

It is he who forgives all your guilt,

  who heals every one of your ills,

who redeems your life from the grave,

  who crowns you with love and compassion.

The Lord is compassion and love.

The Lord is compassion and love,

  slow to anger and rich in mercy.

He does not treat us according to our sins

  nor repay us according to our faults.

The Lord is compassion and love.

As far as the east is from the west

  so far does he remove our sins.

As a father has compassion on his sons,

  the Lord has pity on those who fear him.

The Lord is compassion and love.

February 23rd : First Reading Do not lift your hand against the Lord's anointed A reading from the first book of Samuel 26: 2,7-9,11-13, 22-23

 February 23rd :  First Reading

Do not lift your hand against the Lord's anointed

A reading from the first book of Samuel 26: 2,7-9,11-13, 22-23 


Saul set off and went down to the wilderness of Ziph, accompanied by three thousand men chosen from Israel to search for David in the wilderness of Ziph.

  In the dark David and Abishai made their way towards the force, where they found Saul lying asleep inside the camp, his spear stuck in the ground beside his head, with Abner and the troops lying round him.

  Then Abishai said to David, ‘Today God has put your enemy in your power; so now let me pin him to the ground with his own spear. Just one stroke! I will not need to strike him twice.’ David answered Abishai, ‘Do not kill him, for who can lift his hand against the Lord’s anointed and be without guilt? The Lord forbid that I should raise my hand against the Lord’s anointed! But now take the spear beside his head and the pitcher of water and let us go away.’ David took the spear and the pitcher of water from beside Saul’s head, and they made off. No one saw, no one knew, no one woke up; they were all asleep, for a deep sleep from the Lord had fallen on them.

  David crossed to the other side and halted on the top of the mountain a long way off; there was a wide space between them. He called out, ‘Here is the king’s spear. Let one of the soldiers come across and take it. The Lord repays everyone for his uprightness and loyalty. Today the Lord put you in my power, but I would not raise my hand against the Lord’s anointed.’

The Word of the Lord.