இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

April 5th : Gospel The Law does not allow us to pass judgement on a man without hearing him A reading from the Holy Gospel according to St.John 7:40-52

 April 5th :  Gospel  

The Law does not allow us to pass judgement on a man without hearing him

A reading from the Holy Gospel according to St.John 7:40-52

Several people who had been listening to Jesus said, ‘Surely he must be the prophet’, and some said, ‘He is the Christ’, but others said, ‘Would the Christ be from Galilee? Does not scripture say that the Christ must be descended from David and come from the town of Bethlehem?’ So the people could not agree about him. Some would have liked to arrest him, but no one actually laid hands on him.

  The police went back to the chief priests and Pharisees who said to them, ‘Why haven’t you brought him?’ The police replied, ‘There has never been anybody who has spoken like him.’ ‘So’ the Pharisees answered ‘you have been led astray as well? Have any of the authorities believed in him? Any of the Pharisees? This rabble knows nothing about the Law – they are damned.’ One of them, Nicodemus – the same man who had come to Jesus earlier – said to them, ‘But surely the Law does not allow us to pass judgement on a man without giving him a hearing and discovering what he is about?’ To this they answered, ‘Are you a Galilean too? Go into the matter, and see for yourself: prophets do not come out of Galilee.’

The Word of the Lord.


April 5th : Responsorial Psalm Psalm 7:2-3,9-12

 April 5th :  Responsorial Psalm

Psalm 7:2-3,9-12 

Lord God, I take refuge in you.

Lord God, I take refuge in you.

  From my pursuer save me and rescue me,

lest he tear me to pieces like a lion

  and drag me off with no one to rescue me.

Lord God, I take refuge in you.

Give judgement for me, Lord; I am just

  and innocent of heart.

Put an end to the evil of the wicked!

Make the just stand firm,

  you who test mind and heart,

  O just God!

Lord God, I take refuge in you.

God is the shield that protects me,

  who saves the upright of heart.

God is a just judge

  slow to anger;

  but he threatens the wicked every day.

Lord God, I take refuge in you.

Gospel Acclamation Ezk33:11

Praise and honour to you, Lord Jesus!

I take pleasure, not in the death of a wicked man

– it is the Lord who speaks –

but in the turning back of a wicked man

who changes his ways to win life.

Praise and honour to you, Lord Jesus!

April 5th : First reading 'Let us cut him off from the land of the living, so that his name may be quickly forgotten' A reading from the book of the Prophet Jeremiah 11: 18-20

 April 5th :  First reading 

'Let us cut him off from the land of the living, so that his name may be quickly forgotten'

A reading from the book of the Prophet Jeremiah 11: 18-20

The Lord revealed it to me; I was warned. O Lord, that was when you opened my eyes to their scheming. I for my part was like a trustful lamb being led to the slaughter-house, not knowing the schemes they were plotting against me, ‘Let us destroy the tree in its strength, let us cut him off from the land of the living, so that his name may be quickly forgotten!’

But you, the Lord of Hosts, who pronounce a just sentence,

who probe the loins and heart,

let me see the vengeance you will take on them,

for I have committed my cause to you.

The Word of the Lord.


ஏப்ரல் 5 : நற்செய்தி வாசகம் கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53

 ஏப்ரல் 5 :  நற்செய்தி வாசகம்

கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53


அக்காலத்தில்

யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர். வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.

தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, “அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர். பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர். அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 5 : பதிலுரைப் பாடல் திபா 7: 1-2. 8bc-9. 10-11 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.

 ஏப்ரல் 5  :  பதிலுரைப் பாடல்

திபா 7: 1-2. 8bc-9. 10-11 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.


1

என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.

2

இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார். - பல்லவி

8b

ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.

9

பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். - பல்லவி

10

கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.

11

கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

ஏப்ரல் 5 : முதல் வாசகம் வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20

 ஏப்ரல் 5 :  முதல் வாசகம்

வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20


‘ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், ‘மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்’ என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.

படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

வியாழன், 3 ஏப்ரல், 2025

ஏப்ரல் 4 : நற்செய்தி வாசகம் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1, 2, 10, 25-30

 ஏப்ரல் 4 : நற்செய்தி வாசகம்

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1, 2, 10, 25-30


அக்காலத்தில்

இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.

யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.

எருசலேம் நகரத்தவர் சிலர், “இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே” என்று பேசிக்கொண்டனர். ஆகவே கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 4 : பதிலுரைப் பாடல் திபா 34: 16-17. 18-19. 20,22 (பல்லவி: 18a) பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார். 16

 ஏப்ரல் 4 :  பதிலுரைப் பாடல்

திபா 34: 16-17. 18-19. 20,22 (பல்லவி: 18a)

பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.


16

ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.

17

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். - பல்லவி

18

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.

19

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். - பல்லவி

20

அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.

22

ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 4b

'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.'

ஏப்ரல் 4 : முதல் வாசகம் இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22

 ஏப்ரல் 4  :  முதல் வாசகம்

இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22


இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: ‘நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்ளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.

அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது. அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.

அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.’

இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 4th : Gospel They would have arrested him, but his time had not yet come A reading from the Holy Gospel according to St.John 7: 1-2,10,25-30

 April 4th : Gospel

They would have arrested him, but his time had not yet come

A reading from the Holy Gospel according to St.John 7: 1-2,10,25-30 

Jesus stayed in Galilee; he could not stay in Judaea, because the Jews were out to kill him.

  As the Jewish feast of Tabernacles drew near, after his brothers had left for the festival, he went up as well, but quite privately, without drawing attention to himself. Meanwhile some of the people of Jerusalem were saying, ‘Isn’t this the man they want to kill? And here he is, speaking freely, and they have nothing to say to him! Can it be true the authorities have made up their minds that he is the Christ? Yet we all know where he comes from, but when the Christ appears no one will know where he comes from.’

  Then, as Jesus taught in the Temple, he cried out:

‘Yes, you know me

and you know where I came from.

Yet I have not come of myself:

no, there is one who sent me

and I really come from him,

and you do not know him,

but I know him because I have come from him

and it was he who sent me.’

They would have arrested him then, but because his time had not yet come no one laid a hand on him.

The Word of the Lord.