இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 5 மே, 2025

மே 6 : முதல் வாசகம்ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51- 8: 1a

மே 6  :  முதல் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51- 8: 1a
அந்நாள்களில்

ஸ்தேவான் மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் நோக்கிக் கூறியது: “திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள். எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.”

இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, “இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர் மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக்கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு, உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.

ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 6th : Gospel It is my Father who gives you the bread from heaven.A Reading fom the Holy Gospel according to St. John 6: 30-35

May 6th  :  Gospel 

It is my Father who gives you the bread from heaven.

A Reading fom the Holy Gospel according to St. John 6: 30-35 

The people said to Jesus, ‘What sign will you give to show us that we should believe in you? What work will you do? Our fathers had manna to eat in the desert; as scripture says: He gave them bread from heaven to eat.’
  Jesus answered:
‘I tell you most solemnly,
it was not Moses who gave you bread from heaven,
it is my Father who gives you the bread from heaven,
the true bread;
for the bread of God
is that which comes down from heaven
and gives life to the world.’
‘Sir,’ they said ‘give us that bread always.’ Jesus answered:
‘I am the bread of life.
He who comes to me will never be hungry;
he who believes in me will never thirst.’

The Gospel of the Lord.

May 6th : Responsorial PsalmPsalm 30(31):3-4,6,8,17,21 Into your hands, O Lord, I commend my spirit.or Alleluia!

May 6th  : Responsorial Psalm

Psalm 30(31):3-4,6,8,17,21 

Into your hands, O Lord, I commend my spirit.
or Alleluia!

Be a rock of refuge for me,
  a mighty stronghold to save me,
for you are my rock, my stronghold.
  For your name’s sake, lead me and guide me.

Into your hands, O Lord, I commend my spirit.
or Alleluia!

Into your hands I commend my spirit.
  It is you who will redeem me, Lord.
As for me, I trust in the Lord:
  let me be glad and rejoice in your love.

Into your hands, O Lord, I commend my spirit.
or Alleluia!

Let your face shine on your servant.
  Save me in your love.
You hide them in the shelter of your presence
  from the plotting of men.

Into your hands, O Lord, I commend my spirit.
or Alleluia!

Gospel Acclamation Jn10:14

Alleluia, alleluia!

I am the good shepherd, says the Lord;
I know my own sheep and my own know me.
Alleluia!

May 6th : First Reading 'Lord Jesus, receive my spirit'A Reading from the Acts of Apostles 7 : 51-8:1

May 6th  :  First Reading 

'Lord Jesus, receive my spirit'

A Reading from the Acts of Apostles 7 : 51-8:1 

Stephen said to the people, the elders and the scribes: ‘You stubborn people, with your pagan hearts and pagan ears. You are always resisting the Holy Spirit, just as your ancestors used to do. Can you name a single prophet your ancestors never persecuted? In the past they killed those who foretold the coming of the Just One, and now you have become his betrayers, his murderers. You who had the Law brought to you by angels are the very ones who have not kept it.’
  They were infuriated when they heard this, and ground their teeth at him.
  But Stephen, filled with the Holy Spirit, gazed into heaven and saw the glory of God, and Jesus standing at God’s right hand. ‘I can see heaven thrown open’ he said ‘and the Son of Man standing at the right hand of God.’ At this all the members of the council shouted out and stopped their ears with their hands; then they all rushed at him, sent him out of the city and stoned him. The witnesses put down their clothes at the feet of a young man called Saul. As they were stoning him, Stephen said in invocation, ‘Lord Jesus, receive my spirit.’ Then he knelt down and said aloud, ‘Lord, do not hold this sin against them’; and with these words he fell asleep. Saul entirely approved of the killing.

The Word of the Lord.

ஞாயிறு, 4 மே, 2025

மே 5 : நற்செய்தி வாசகம்அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29

மே 5 :  நற்செய்தி வாசகம்

அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 5 : பதிலுரைப் பாடல்திபா 119: 23-24. 26-27. 29-30 (பல்லவி: 1b)பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

மே 5 :  பதிலுரைப் பாடல்

திபா 119: 23-24. 26-27. 29-30 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

23
தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.
24
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். - பல்லவி

26
என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும்.
27
உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். - பல்லவி

29
பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
30
உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4b
அல்லேலூயா, அல்லேலூயா! 

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

மே 5 : முதல் வாசகம்ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15

மே 5 :  முதல் வாசகம்

ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15
அந்நாள்களில்

ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

பின்பு அவர்கள், “இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்” என்று கூறினார்கள். மேலும் அவர்கள், “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்” என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 5th : Gospel Do not work for food that cannot last, but for food that endures to eternal lifeA Reading from the Holy Gospel according to St.John 6: 22-29

May 5th :   Gospel 

Do not work for food that cannot last, but for food that endures to eternal life

A Reading from the Holy Gospel according to St.John 6: 22-29

After Jesus had fed the five thousand, his disciples saw him walking on the water. Next day, the crowd that had stayed on the other side saw that only one boat had been there, and that Jesus had not got into the boat with his disciples, but that the disciples had set off by themselves. Other boats, however, had put in from Tiberias, near the place where the bread had been eaten. When the people saw that neither Jesus nor his disciples were there, they got into those boats and crossed to Capernaum to look for Jesus. When they found him on the other side, they said to him, ‘Rabbi, when did you come here?’
  Jesus answered:
‘I tell you most solemnly,
you are not looking for me because you have seen the signs
but because you had all the bread you wanted to eat.
Do not work for food that cannot last,
but work for food that endures to eternal life,
the kind of food the Son of Man is offering you,
for on him the Father, God himself, has set his seal.’
Then they said to him, ‘What must we do if we are to do the works that God wants?’ Jesus gave them this answer, ‘This is working for God: you must believe in the one he has sent.’

The Word of the Lord.

May 5th : Responsorial PsalmPsalm 118(119):23-24,26-27,29-30 They are happy whose life is blameless.orAlleluia!

May 5th :  Responsorial Psalm

Psalm 118(119):23-24,26-27,29-30 

They are happy whose life is blameless.
or
Alleluia!

Though princes sit plotting against me
  I ponder on your statutes.
Your will is my delight;
  your statutes are my counsellors.

They are happy whose life is blameless.
or
Alleluia!

I declared my ways and you answered;
  teach me your statutes.
Make me grasp the way of your precepts
  and I will muse on your wonders.

They are happy whose life is blameless.
or
Alleluia!

Keep me from the way of error
  and teach me your law.
I have chosen the way of truth
  with your decrees before me.

They are happy whose life is blameless.
or
Alleluia!

Gospel Acclamation Jn20:29

Alleluia, alleluia!

‘You believe, Thomas, because you can see me.
Happy are those who have not seen and yet believe.
Alleluia!

May 5th : First Reading They could not get the better of Stephen because the Spirit prompted what he saidA Reading from the Acts of Apostles 6: 8-15

May 5th :  First Reading 

They could not get the better of Stephen because the Spirit prompted what he said

A Reading from the Acts of Apostles  6: 8-15 

Stephen was filled with grace and power and began to work miracles and great signs among the people. But then certain people came forward to debate with Stephen, some from Cyrene and Alexandria who were members of the synagogue called the Synagogue of Freedmen, and others from Cilicia and Asia. They found they could not get the better of him because of his wisdom, and because it was the Spirit that prompted what he said. So they procured some men to say, ‘We heard him using blasphemous language against Moses and against God.’ Having in this way turned the people against him as well as the elders and scribes, they took Stephen by surprise, and arrested him and brought him before the Sanhedrin. There they put up false witnesses to say, ‘This man is always making speeches against this Holy Place and the Law. We have heard him say that Jesus the Nazarene is going to destroy this Place and alter the traditions that Moses handed down to us.’ The members of the Sanhedrin all looked intently at Stephen, and his face appeared to them like the face of an angel.

The Word of the Lord.