இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 23 மே, 2025

மே 24 : நற்செய்தி வாசகம்நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21

மே 24 : நற்செய்தி வாசகம்

நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.

பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

மே 24 : பதிலுரைப் பாடல்திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 1)பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!அல்லது: அல்லேலூயா.

மே 24 :  பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 1)

பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

அல்லது: அல்லேலூயா.

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 1
அல்லேலூயா, அல்லேலூயா! 

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.

மே 24 : முதல் வாசகம்மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10

மே 24 :  முதல் வாசகம்

மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10

அந்நாள்களில்
பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண். தந்தையோ கிரேக்கர். திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலும் உள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர். பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச் செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.

அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப் பிடிக்குமாறு கூறினார். இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.

பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர்.

பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, “நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 24th : Gospel The world hated me before it hated youA Reading from the Holy Gospel according to St.John 15: 18-21

May 24th :  Gospel 

The world hated me before it hated you

A Reading from the Holy Gospel according to St.John 15: 18-21 

Jesus said to his disciples:
‘If the world hates you,
remember that it hated me before you.
If you belonged to the world,
the world would love you as its own;
but because you do not belong to the world,
because my choice withdrew you from the world,
therefore the world hates you.
Remember the words I said to you: A servant is not greater than his master.
If they persecuted me, they will persecute you too;
if they kept my word, they will keep yours as well.
But it will be on my account that they will do all this,
because they do not know the one who sent me.’

The Word of the Lord.

May 24th : Responsorial PsalmPsalm 99(100):1-3,5 Cry out with joy to the Lord, all the earth.orAlleluia!

May 24th :  Responsorial Psalm

Psalm 99(100):1-3,5 

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!

Cry out with joy to the Lord, all the earth.
  Serve the Lord with gladness.
  Come before him, singing for joy.

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!

Know that he, the Lord, is God.
  He made us, we belong to him,
  we are his people, the sheep of his flock.

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!

Indeed, how good is the Lord,
  eternal his merciful love.
  He is faithful from age to age.

Cry out with joy to the Lord, all the earth.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

The Lord, who hung for us upon the tree,
has risen from the tomb.
Alleluia!

May 24th : First Reading 'Come across to Macedonia and help us'A Reading from the Acts of Apostles 16: 1-10

May 24th :  First Reading 

'Come across to Macedonia and help us'

A Reading from the Acts of Apostles 16: 1-10 

From Cilicia Paul went to Derbe, and then on to Lystra. Here there was a disciple called Timothy, whose mother was a Jewess who had become a believer; but his father was a Greek. The brothers at Lystra and Iconium spoke well of Timothy, and Paul, who wanted to have him as a travelling companion, had him circumcised. This was on account of the Jews in the locality where everyone knew his father was a Greek.
  As they visited one town after another, they passed on the decisions reached by the apostles and elders in Jerusalem, with instructions to respect them.
  So the churches grew strong in the faith, as well as growing daily in numbers.
  They travelled through Phrygia and the Galatian country, having been told by the Holy Spirit not to preach the word in Asia. When they reached the frontier of Mysia they thought to cross it into Bithynia, but as the Spirit of Jesus would not allow them, they went through Mysia and came down to Troas.
  One night Paul had a vision: a Macedonian appeared and appealed to him in these words, ‘Come across to Macedonia and help us.’ Once he had seen this vision we lost no time in arranging a passage to Macedonia, convinced that God had called us to bring them the Good News.

The Word of the Lord.

வியாழன், 22 மே, 2025

May 23rd : Gospel What I command you is to love one another A Reading from the Holy Gospel according to St.John 15: 12-17

 May 23rd : Gospel 

What I command you is to love one another

A Reading from the Holy Gospel according to St.John 15: 12-17

Jesus said to his disciples:

‘This is my commandment:

love one another,

as I have loved you.

A man can have no greater love

than to lay down his life for his friends.

You are my friends,

if you do what I command you.

I shall not call you servants any more,

because a servant does not know

his master’s business;

I call you friends,

because I have made known to you

everything I have learnt from my Father.

You did not choose me:

no, I chose you;

and I commissioned you

to go out and to bear fruit,

fruit that will last;

and then the Father will give you

anything you ask him in my name.

What I command you is to love one another.’

The Word of the Lord.


May 23rd : Responsorial Psalm Psalm 56(57):8-12

 May 23rd :  Responsorial Psalm

Psalm 56(57):8-12 

I will thank you, Lord, among the peoples.

or

Alleluia!

My heart is ready, O God,

  my heart is ready.

  I will sing, I will sing your praise.

Awake, my soul,

  awake, lyre and harp,

  I will awake the dawn.

I will thank you, Lord, among the peoples.

or

Alleluia!

I will thank you, Lord, among the peoples,

  among the nations I will praise you

for your love reaches to the heavens

  and your truth to the skies.

O God, arise above the heavens;

  may your glory shine on earth!

I will thank you, Lord, among the peoples.

or

Alleluia!

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!

The sheep that belong to me listen to my voice,

says the Lord,

I know them and they follow me.

Alleluia!

Or:


May 23rd : First Reading It has been decided by the Holy Spirit and by us not to burden you beyond these essentials. A Reading from the Acts of Apostles 15: 22-31

 May 23rd :  First Reading 

It has been decided by the Holy Spirit and by us not to burden you beyond these essentials.

A Reading from the Acts of Apostles 15: 22-31 

The apostles and elders decided to choose delegates to send to Antioch with Paul and Barnabas; the whole church concurred with this. They chose Judas known as Barsabbas and Silas, both leading men in the brotherhood, and gave them this letter to take with them:

  ‘The apostles and elders, your brothers, send greetings to the brothers of pagan birth in Antioch, Syria and Cilicia. We hear that some of our members have disturbed you with their demands and have unsettled your minds. They acted without any authority from us; and so we have decided unanimously to elect delegates and to send them to you with Barnabas and Paul, men we highly respect who have dedicated their lives to the name of our Lord Jesus Christ. Accordingly we are sending you Judas and Silas, who will confirm by word of mouth what we have written in this letter. It has been decided by the Holy Spirit and by ourselves not to saddle you with any burden beyond these essentials: you are to abstain from food sacrificed to idols; from blood, from the meat of strangled animals and from fornication. Avoid these, and you will do what is right. Farewell.’

  The party left and went down to Antioch, where they summoned the whole community and delivered the letter. The community read it and were delighted with the encouragement it gave them.

The Word of the Lord.

மே 23 : நற்செய்தி வாசகம் நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17

 மே 23 :  நற்செய்தி வாசகம்

நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.