இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 2 : முதல் வாசகம்யூபிலி ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17

ஆகஸ்ட் 2 :  முதல் வாசகம்

யூபிலி ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17

ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது:

தொடர்ந்து வரும் ஏழு ஓய்வுஆண்டுகளை - ஏழேழு ஆண்டுகளாக - ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்யுங்கள். ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கு எல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு - அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும். ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம். கிளை நறுக்காத திராட்சைக் கொடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்; ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள்.

அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள். யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும். பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான். உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 2nd : Gospel The beheading of John the Baptist A reading from the Holy Gospel according to St.Matthew 14:1-12

 August 2nd : Gospel 

The beheading of John the Baptist

A reading from the Holy Gospel according to St.Matthew 14:1-12

At that time Herod the tetrarch heard the fame of Jesus, and he said to his courtiers, “This is John the Baptist; he is risen from the dead, and that is why mighty works show forth in him.” Now Herod had arrested John, bound him, and put him in prison because of Herodias, his brother Philip’s wife, for John had said to him, “It is not lawful for you to have her.” Though he wanted to kill him, he feared the people, because they considered John to be a prophet. But when Herod’s birthday came, the daughter of Herodias danced before them, and pleased Herod. Whereupon he promised with an oath to give her whatever she asked. Prompted by her mother, she said, “Give me here on a platter the head of John the Baptist.” The king was distressed, but because of his oaths and for those who sat with him at table, he commanded it to be given. So he sent and beheaded John in the prison. His head was brought on a platter and given to the girl, and she brought it to her mother. John’s disciples came and took away the body and buried it; then they went and told Jesus.  

The Word of the Lord.

August 2nd : Responsorial Psalm Psalm 67:2‑3, 5, 7‑8

 August 2nd : Responsorial Psalm

Psalm 67:2‑3, 5, 7‑8

Response : O God, let all the nations praise you!

May God have pity on us and bless us;

may he let his face shine upon us.

Response : O God, let all the nations praise you!

So may your way be known upon earth; among all nations, your salvation.

Response : O God, let all the nations praise you!

May the nations be glad and exult because you rule the peoples in equity; the nations on the earth you guide.

Response : O God, let all the nations praise you!

The earth has yielded its fruits; God, our God, has blessed us.

May God bless us, and may all the ends of the earth fear him!

Response : O God, let all the nations praise you!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Blessed are those who,

with a noble and generous heart,

take the word of God to themselves

and yield a harvest through their perseverance.

Alleluia!

August 2nd : First reading The law of the jubilee year A reading from the book of Leviticus 25:1,8-17

 August 2nd : First reading

The law of the jubilee year

A reading from the book of Leviticus 25:1,8-17

The Lord spoke to Moses on Mount Sinai, saying: “You shall also number to yourself seven weeks of years, that is, seven times seven years, which together make forty‑nine years.

 And you shall sound the trumpet in the seventh month, on the tenth day of the month; on the Day of Atonement you shall sound the trumpet throughout all your land. And you shall consecrate the fiftieth year, and proclaim liberty throughout the land to all its inhabitants. It shall be a jubilee to you: you shall return each to his property, and each to his family. In this fiftieth year you shall not sow, nor reap the aftergrowth of your harvest, nor gather the grapes from the untrimmed vines. You shall eat what the field yields on its own, and that which springs from the tree, you shall eat. “In this year of jubilee you shall return every man to his property. “And if you sell anything to your neighbor, or buy from your neighbor, do not wrong one another. You shall buy from your neighbor at the number of years after the jubilee; and he shall sell to you at the number of years before the jubilee. According to the number of crops he shall sell to you, you shall increase the price, and according to the number of years for which he sells, you shall decrease the price; for he is selling the number of the crops.You shall not wrong each other, but you shall fear your God; for I am the Lord your God.”

The Word of the Lord.

வியாழன், 31 ஜூலை, 2025

ஆகஸ்ட் 1 : நற்செய்தி வாசகம்இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

ஆகஸ்ட் 1  :  நற்செய்தி வாசகம்

இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

அக்காலத்தில்

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 1 : பதிலுரைப் பாடல்திபா 81: 2-3. 4-5. 9-10a (பல்லவி: 1a)பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.

ஆகஸ்ட் 1 :  பதிலுரைப் பாடல்

திபா 81: 2-3. 4-5. 9-10a (பல்லவி: 1a)

பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.

2
இன்னிசை எழுப்புங்கள்; மத்தளம் கொட்டுங்கள்; யாழும் சுரமண்டலமும் இசைத்து இனிமையாய்ப் பாடுங்கள்.
3
அமாவாசையில், பௌர்ணமியில், நமது திருவிழா நாளில் எக்காளம் ஊதுங்கள். - பல்லவி

4
இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை; யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.
5
அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன். - பல்லவி

9
உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.
10a
உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 1: 25
அல்லேலூயா, அல்லேலூயா! 

“நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.” இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.

ஆகஸ்ட் 1 : முதல் வாசகம்சபையாய்க் கூடி ஓய்வு நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்.லேவியர் நூலிலிருந்து வாசகம் 23: 1, 4-11, 15-16, 27, 34b-38

ஆகஸ்ட் 1 :  முதல் வாசகம்

சபையாய்க் கூடி ஓய்வு நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 23: 1, 4-11, 15-16, 27, 34b-38

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன: முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா. அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழு நாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள். பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. ஏழு நாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும்போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.

ஆரத்திப் பலியாகக் கதிர்க் கட்டினைக் கொண்டு வந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.

அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும்.

ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப் பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். முதல் நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்ய வேண்டாம். ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். அது நிறைவு நாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது.

ஓய்வு நாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர, அந்தந்த நாள்களுக்கு ஏற்ப எரிபலி, உணவுப் படையல், இரத்தப் பலி, நீர்மப் படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 1st : GospelA prophet is only despised in his own countryA reading from the Holy Gospel according to St.Matthew 13: 54-58

August 1st : Gospel

A prophet is only despised in his own country

A reading from the Holy Gospel according to St.Matthew 13: 54-58

Coming to his own country he taught them in their synagogue, so that they were astonished, and said, “Where did this man get this wisdom and these mighty works? Is not this the carpenter’s son? Is not his mother called Mary? And are not his brethren James and Joseph and Simon and Judas? And are not all his sisters with us? Where then did this man get all this?”
And they took offense at him. But Jesus said to them, “A prophet is not without honor except in his own country and in his own house.” And he did not do many mighty works there, because of their unbelief.

The Word of the Lord.

August 1st : Responsorial PsalmPsalm 81 : 3‑4, 5‑6, 10‑11 abResponse : Sing with joy to God our help.

August 1st : Responsorial Psalm

Psalm 81 : 3‑4, 5‑6, 10‑11 ab

Response : Sing with joy to God our help. 

Take up a psalm, and bring hither the timbrel; the pleasant psaltery with the harp.
Blow the trumpet at the new moon, at the full moon, on our solemn feast.

Response :  Sing with joy to God our help.

For it is a statute in Israel, an ordinance of the God of Jacob, who made it a decree for Joseph when he came forth from the land of Egypt.

Response : Sing with joy to God our help.

There shall be no strange god among you nor shall you worship any alien god.
I, the LORD, am your God who led you forth from the land of Egypt.

Response : Sing with joy to God our help.

Gospel Acclamation cf.1Th2:13

Alleluia, alleluia!

Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

August 1st : First readingThe law of the festivals of the LordA reading from the book of Leviticus 23 :1, 4-11,15-16, 27, 34-37

August 1st : First reading

The law of the festivals of the Lord

A reading from the book of Leviticus 23 :1, 4-11,15-16, 27, 34-37

The LORD said to Moses, “These are the appointed feasts of the LORD, the holy convocations, which you shall proclaim at the time appointed for them. In the first month, on the fourteenth day of the month in the evening, is the LORD’s passover. And on the fifteenth day of the same month is the feast of unleavened bread to the LORD; seven days you shall eat unleavened bread. On the first day you shall have a holy convocation; you shall do no laborious work. But you shall present an offering by fire to the LORD seven days; on the seventh day is a holy convocation; you shall do no laborious work.” And the LORD said to Moses, “Say to the people of Israel, When you come into the land which I give you and reap its harvest, you shall bring the sheaf of the first fruits of your harvest to the priest; and he shall wave the sheaf before the LORD, that you may find acceptance; on the morrow after the sabbath the priest shall wave it. “And you shall count from the morrow after the sabbath, from the day that you brought the sheaf of the wave offering; seven full weeks shall they be, counting fifty days to the morrow after the seventh sabbath; then you shall present a cereal offering of new grain to the LORD.
“On the tenth day of this seventh month is the day of atonement; it shall be for you a time of holy convocation, and you shall afflict yourselves and present an offering by fire to the LORD. “Say to the people of Israel, On the fifteenth day of this seventh month and for seven days is the feast of booths to the LORD.
On the first day shall be a holy convocation; you shall do no laborious work. Seven days you shall present offerings by fire to the LORD; on the eighth day you shall hold a holy convocation and present an offering by fire to the LORD; it is a solemn assembly; you shall do no laborious work. “These are the appointed feasts of the LORD, which you shall proclaim as times of holy convocation, for presenting to the LORD offerings by fire, burnt offerings and cereal offerings, sacrifices and drink offerings, each on its proper day.

The Word of the Lord.