இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 5 : முதல் வாசகம் ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை? எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 12: 1-13

 ஆகஸ்ட் 5 :  முதல் வாசகம்

ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 12: 1-13


அந்நாள்களில்

மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர். அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார். பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார். உடனே ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள்” என்றார்.

அவர்கள் மூவரும் வந்தனர். மேகத் தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று, ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர். அவர் கூறியது: “என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன்.

ஆனால் என் அடியான் மோசேயோடு அப்படியல்ல; என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்; நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர் ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?” மேலும் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார்.

கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனி போன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது. ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாய் இருக்கக் கண்டார். ஆரோன் மோசேயிடம், “என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்; தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக் குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும்” என்றார். மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, “கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 5th : Gospel Jesus walks on the water A reading from the Holy Gospel according to St.Matthew 14: 22-36.

 August 5th :  Gospel

Jesus walks on the water

A reading from the Holy Gospel according to St.Matthew 14: 22-36.

Then he made the disciples get into the boat and go before him to the other side, while he dismissed the crowds. And after he had dismissed the crowds, he went up into the hills by himself to pray. When evening came, he was there alone, but the boat by this time was many furlongs distant from the land, beaten by the waves; for the wind was against them. And in the fourth watch of the night he came to them, walking on the sea. But when the disciples saw him walking on the sea, they were terrified, saying, “It is a ghost!” And they cried out for fear. But immediately he spoke to them, saying, “Take heart, it is I; have no fear.” And Peter answered him, “Lord, if it is you, bid me come to you on the water.” He said, “Come.” So Peter got out of the boat and walked on the water and came to Jesus; but when he saw the wind, he was afraid, and beginning to sink he cried out, “Lord, save me.” Jesus immediately reached out his hand and caught him, saying to him, “O man of little faith, why did you doubt?” And when they got into the boat, the wind ceased. And those in the boat worshiped him, saying, “Truly you are the Son of God.” And when they had crossed over, they came to land at Gennesʹaret. And when the men of that place recognized him, they sent round to all that region and brought to him all that were sick, and besought him that they might only touch the fringe of his garment; and as many as touched it were made well.

The Word of the Lord.


August 5th : Responsorial Psalm Psalm 50(51):3-7,12-13

 August 5th :  Responsorial Psalm

Psalm 50(51):3-7,12-13

Response : Be merciful, O Lord, for we have sinned.

Have mercy on me, O God, in your goodness;

in the greatness of your compassion wipe out my offense.

Thoroughly wash me from my guilt,

and of my sin cleanse me.

Response : Be merciful, O Lord, for we have sinned.

For I acknowledge my offense;

and my sin is before me always:

“Against you only have I sinned;

and done what is evil in your sight.”

Response : Be merciful, O Lord, for we have sinned.

That you may be justified in your sentence,

vindicated when you condemn.

Indeed, in guilt was I born,

and in sin my mother conceived me.

Response : Be merciful, O Lord, for we have sinned.

A clean heart create for me, O God,

and a steadfast spirit renew within me.

Cast me not off from your presence,

and your Holy Spirit take not from me.

Response : Be merciful, O Lord, for we have sinned.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

I am the light of the world, says the Lord;

anyone who follows me will have the light of life.

Alleluia!


August 5th : First reading 'How have you dared to speak against my servant Moses?' A reading from the book of Numbers 12: 1-13

 August 5th :  First reading

'How have you dared to speak against my servant Moses?'

A reading from the book of Numbers 12: 1-13 

Miriam and Aaron spoke against Moses because of the Cushite woman whom he had married, for he had married a Cushite woman;

and they said, “Has the LORD indeed spoken only through Moses? Has he not spoken through us also?” And the LORD heard it. Now the man Moses was very meek, more than all men that were on the face of the earth. And suddenly the LORD said to Moses and to Aaron and Miriam, “Come out, you three, to the tent of meeting.” And the three of them came out. And the LORD came down in a pillar of cloud, and stood at the door of the tent, and called Aaron and Miriam; and they both came forward. And he said, “Hear my words: If there is a prophet among you, I the LORD make myself known to him in a vision, I speak with him in a dream. Not so with my servant Moses; he is entrusted with all my house. With him I speak mouth to mouth, clearly, and not in dark speech; and he beholds the form of the LORD. Why then were you not afraid to speak against my servant Moses?” And the anger of the LORD was kindled against them, and he departed; and when the cloud removed from over the tent, behold, Miriam was leprous, as white as snow. And Aaron turned towards Miriam, and behold, she was leprous. And Aaron said to Moses, “Oh, my lord, do not punish us because we have done foolishly and have sinned. Let her not be as one dead, of whom the flesh is half consumed when he comes out of his mother’s womb.” And Moses cried to the LORD, “Heal her, O God, I beseech thee.”

The Word of the Lord.


ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 4 : நற்செய்தி வாசகம்இயேசு அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21.

ஆகஸ்ட் 4 :  நற்செய்தி வாசகம்

இயேசு அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21.
அக்காலத்தில்

திருமுழுக்கு யோவான் கொலையுண்டதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.

மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள். அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.

மக்களைப் புல் தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்; அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக உணவு உண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 4 : பதிலுரைப் பாடல்திபா 81: 11-12. 13-14. 15-16 (பல்லவி: 1a)பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.

ஆகஸ்ட் 4 :  பதிலுரைப் பாடல்

திபா 81: 11-12. 13-14. 15-16 (பல்லவி: 1a)

பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.
11
என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.
12
எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டுவிட்டேன். - பல்லவி

13
என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
14
நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும். - பல்லவி

15
ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்; அவர்களது தண்டனைக் காலம் என்றென்றுமாய் இருக்கும்.
16
ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4b
அல்லேலூயா, அல்லேலூயா! 

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 4 : முதல் வாசகம்நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது.எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 4b-15

ஆகஸ்ட் 4 :  முதல் வாசகம்

நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 4b-15
இஸ்ரயேல் மக்கள் மீண்டும் அழுது கூறியது: “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக் காய், கொம்மட்டிக் காய், கீரை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது. ஆனால் இப்பொழுதோ நம் வலிமை குன்றிப் போயிற்று; மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!”

மன்னா கொத்துமல்லி விதை போன்றும் அதன் தோற்றம் முத்துப் போன்றும் இருந்தது. மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்; அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்; பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்; அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது. இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.

எல்லா வீடுகளிலும் இருந்த மக்களும் தம்தம் கூடார வாயிலில் இருந்து அழும் குரலை மோசே கேட்டார்; ஆண்டவரின் சினம் கொழுந்து விட்டெரிந்தது; மோசேக்கும் அது பிடிக்கவில்லை. மோசே ஆண்டவரிடம் கூறியது: “உம் அடியானுக்கு ஏன் இந்தக் கேடு? நீர் எனக்குக் கருணை காட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? ‘பாலுண்ணும் குழந்தையை ஏந்திச் செல்பவள் போன்று இவர்களை மார்போடு ஏந்தி, அவர்கள் மூதாதையருக்கு நான் வாக்களித்திருந்த நாட்டுக்குக் கொண்டு செல்’ என்று நீர் சொல்வானேன்? இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய இறைச்சிக்கு நான் எங்கு போவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, ‘உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும்’ என்றும் கேட்கிறார்களே! நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது; இது எனக்கு மிகப்பெரும் பளு. இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்; உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 4th : GospelThe feeding of the five thousandA reading from the Holy Gospel according to St.Matthew 14:13-21

August 4th :  Gospel

The feeding of the five thousand

A reading from the Holy Gospel according to St.Matthew 14:13-21 

Now when Jesus heard this, he withdrew from there in a boat to a lonely place apart. But when the crowds heard it, they followed him on foot from the towns. As he went ashore he saw a great throng; and he had compassion on them, and healed their sick. When it was evening, the disciples came to him and said, “This is a lonely place, and the day is now over; send the crowds away to go into the villages and buy food for themselves.” Jesus said, “They need not go away; you give them something to eat.” They said to him, “We have only five loaves here and two fish.” And he said, “Bring them here to me.” Then he ordered the crowds to sit down on the grass; and taking the five loaves and the two fish he looked up to heaven, and blessed, and broke and gave the loaves to the disciples, and the disciples gave them to the crowds. And they all ate and were satisfied. And they took up twelve baskets full of the broken pieces left over. And those who ate were about five thousand men, besides women and children.

The Word of the Lord.

August 4th : Responsorial PsalmPsalm 81 : 12‑13, 14‑15, 16‑17 Response : Sing with joy to God our help.

August 4th :  Responsorial Psalm

Psalm 81 : 12‑13, 14‑15, 16‑17 

Response : Sing with joy to God our help.

12. But my people did not listen to my voice;
Israel would not submit to me.

Response : Sing with joy to God our help.

13. So I gave them over to their stubborn hearts,
to follow their own counsels.

Response : Sing with joy to God our help.

14. Oh, that my people would listen to me,
that Israel would walk in my ways!

Response : Sing with joy to God our help.

15. I would soon subdue their enemies
and turn my hand against their foes.

Response : Sing with joy to God our help.

16. He would feed you with the finest of the wheat, and with honey from the rock I would satisfy you.

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!

I am the Way, the Truth and the Life, says the Lord;
No one can come to the Father except through me.
Alleluia!

August 4th : First reading The sons of Israel complain in the desertA reading from the book of Numbers 11 :4-15

August 4th :  First reading 

The sons of Israel complain in the desert

A reading from the book of Numbers 11 :4-15 

Now the rabble that was among them had a strong craving; and the people of Israel also wept again, and said, “O that we had meat to eat! We remember the fish we ate in Egypt for nothing, the cucumbers, the melons, the leeks, the onions, and the garlic; but now our strength is dried up, and there is nothing at all but this manna to look at.” Now the manna was like coriander seed, and its appearance like that of bdellium.The people went about and gathered it, and ground it in mills or beat it in mortars, and boiled it in pots, and made cakes of it; and the taste of it was like the taste of cakes baked with oil. When the dew fell upon the camp in the night, the manna fell with it. Moses heard the people weeping throughout their families, every man at the door of his tent; and the anger of the LORD blazed hotly, and Moses was displeased.
Moses said to the LORD, “Why hast thou dealt ill with thy servant? And why have I not found favor in thy sight, that thou dost lay the burden of all this people upon me? Did I conceive all this people? Did I bring them forth, that thou shouldst say to me, ‘Carry them in your bosom, as a nurse carries the sucking child,’ to the land which thou didst swear to give their fathers?Where am I to get meat to give to all this people? For they weep before me and say, ‘Give us meat, that we may eat.’ I am not able to carry all this people alone, the burden is too heavy for me. If thou wilt deal thus with me, kill me at once, if I find favor in thy sight, that I may not see my wretchedness.”

The Word of the Lord.