இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 8 : முதல் வாசகம் உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-40

 ஆகஸ்ட் 8 :  முதல் வாசகம்

உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-40


மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப் பட்டதுண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?

‘ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன. நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப் பின், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச்சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார்.

‘மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


August 8th : Gospel Anyone who loses his life for my sake will find it A reading from the Holy Gospel according to St.Matthew 16:24-28

 August 8th : Gospel

Anyone who loses his life for my sake will find it

A reading from the Holy Gospel according to St.Matthew 16:24-28

Jesus said to his disciples: ‘If anyone wants to be a follower of mine, let him renounce himself and take up his cross and follow me. For anyone who wants to save his life will lose it; but anyone who loses his life for my sake will find it. What, then, will a man gain if he wins the whole world and ruins his life? Or what has a man to offer in exchange for his life?

  ‘For the Son of Man is going to come in the glory of his Father with his angels, and, when he does, he will reward each one according to his behaviour. I tell you solemnly, there are some of these standing here who will not taste death before they see the Son of Man coming with his kingdom.’

The Word of the Lord.


August 8th : Responsorial Psalm Psalm 76(77):12-16,21

 August 8th : Responsorial Psalm

Psalm 76(77):12-16,21

Response : I remember the deeds of the Lord.

I will call to mind the deeds of the Lord;

  yes, I will remember thy wonders of old.

I will meditate on all thy work,

  and muse on thy mighty deeds.

Response: I remember the deeds of the Lord.

Thy way, O God, is holy.

  What god is great like our God?

Thou art the God who workest wonders,

  who hast manifested thy might among the peoples.

Response: I remember the deeds of the Lord.

Thou didst with thy arm redeem thy people,

  the sons of Jacob and Joseph.

When the waters saw thee, O God,

  when the waters saw thee, they were afraid,

  yea, the deep trembled.

Response: I remember the deeds of the Lord.

 Thou didst lead thy people like a flock

  by the hand of Moses and Aaron.

Response: I remember the deeds of the Lord.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!

Speak, Lord, your servant is listening:

you have the message of eternal life.

Alleluia!


August 8th : First reading 'Did ever a people before you hear the voice of the living God, and remain alive?' A reading from the book of Deuteronomy 4:32-40

 August 8th :  First reading

'Did ever a people before you hear the voice of the living God, and remain alive?'

A reading from the book of Deuteronomy 4:32-40 

“For ask now of the days that are past, which were before you, since the day that God created man upon the earth, and ask from one end of heaven to the other, whether such a great thing as this has ever happened or was ever heard of. Did any people ever hear the voice of a god speaking out of the midst of the fire, as you have heard, and still live? Or has any god ever attempted to go and take a nation for himself from the midst of another nation, by trials, by signs, by wonders, and by war, by a mighty hand and an outstretched arm, and by great terrors, according to all that the Lord your God did for you in Egypt before your eyes? To you it was shown, that you might know that the Lord is God; there is no other besides him. Out of heaven he let you hear his voice, that he might discipline you; and on earth he let you see his great fire, and you heard his words out of the midst of the fire. And because he loved your fathers and chose their descendants after them, and brought you out of Egypt with his own presence, by his great power, driving out before you nations greater and mightier than yourselves, to bring you in, to give you their land for an inheritance, as at this day; know therefore this day, and lay it to your heart, that the Lord is God in heaven above and on the earth beneath; there is no other. Therefore you shall keep his statutes and his commandments, which I command you this day, that it may go well with you, and with your children after you, and that you may prolong your days in the land which the Lord your God gives you for ever.” 

The Word of the Lord.

புதன், 6 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 7 : நற்செய்தி வாசகம் உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-23

 ஆகஸ்ட் 7  :  நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-23


அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 7 : பதிலுரைப் பாடல் திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b,7 காண்க) பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.

 ஆகஸ்ட் 7  :  பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b,7 காண்க)


பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.

1

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.

2

நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி

6

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.

7

அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! - பல்லவி

8

அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

9

அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 16: 18

அல்லேலூயா, அல்லேலூயா! 

உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.

ஆகஸ்ட் 7 : முதல் வாசகம் உமது செல்வமாகிய நல்ல நீரூற்றை இவர்களுக்குத் தந்தருள்வீர். எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 20: 1-13

 ஆகஸ்ட் 7  :   முதல் வாசகம்

உமது செல்வமாகிய நல்ல நீரூற்றை இவர்களுக்குத் தந்தருள்வீர்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 20: 1-13


அக்காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது; மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.

அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர். மக்கள் மோசேயுடன் வாதாடிக் கூறியது: “ஆண்டவர் திருமுன் எங்கள் சகோதரர்கள் மாண்டபோது நாங்களும் மாண்டிருந்தால் நலமாய் இருந்திருக்குமே! ஆண்டவரின் சபையை இந்தப் பாலைநிலத்துக்கு நீங்கள் கொண்டு வந்தது ஏன்? நாங்களும் எங்கள் கால்நடைகளும் இங்குச் சாகவேண்டுமென்றா? இந்தக் கொடிய இடத்துக்கு அழைத்துவர, எங்களை எகிப்திலிருந்து வெளியேறப் பண்ணினது ஏன்? தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கு இல்லை; குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே!"

பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர்.

ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது. ஆண்டவர் மோசேயிடம், “கோலை எடுத்துக்கொள்; நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்; அவர்கள் பார்வையில் பாறை தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்; இவ்வாறு அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்; மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள்” என்றார்.

அவர் கட்டளைப்படியே மோசே ஆண்டவர் திருமுன்னின்று கோலை எடுத்தார். மோசேயும் ஆரோனும் பாறைக்கு முன்பாகச் சபையை ஒன்று கூட்டினர். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, இப்போது கேளுங்கள், இப்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைக்க எங்களால் கூடுமா?” என்று கேட்டார். பின் மோசே தம் கையை ஓங்கித் தம் கோலால் பாறையை இரு முறை அடித்தார்; தண்ணீர் தாராளமாக வந்தது, மக்கள் கூட்டமைப்பினரும் அவர்கள் கால்நடைகளும் குடித்தனர்.

ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்கமாட்டீர்கள்” என்றார். இது மெரிபாவின் தண்ணீர்; இங்குத்தான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் வாதாடினர், அவர் அவர்களிடையே தம்மைத் தூயவராகக் காண்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 7th : Gospel You are Peter and on this rock I will build my Church. A Reading from the Holy Gospel according to St. Matthew 16:13-23

 August 7th : Gospel

You are Peter and on this rock I will build my Church.

A Reading from the Holy Gospel according to St. Matthew 16:13-23 

Now when Jesus came into the district of Caesareʹa Philippi, he asked his disciples, “Who do men say that the Son of man is?” And they said, “Some say John the Baptist, others say Eliʹjah, and others Jeremiah or one of the prophets.” He said to them, “But who do you say that I am?” Simon Peter replied, “You are the Christ, the Son of the living God.” And Jesus answered him, “Blessed are you, Simon Bar-Jona! For flesh and blood has not revealed this to you, but my Father who is in heaven. And I tell you, you are Peter, and on this rock I will build my church, and the powers of death shall not prevail against it. I will give you the keys of the kingdom of heaven, and whatever you bind on earth shall be bound in heaven, and whatever you loose on earth shall be loosed in heaven.” Then he strictly charged the disciples to tell no one that he was the Christ. From that time Jesus began to show his disciples that he must go to Jerusalem and suffer many things from the elders and chief priests and scribes, and be killed, and on the third day be raised. And Peter took him and began to rebuke him, saying, “God forbid, Lord! This shall never happen to you.” But he turned and said to Peter, “Get behind me, Satan! You are a hindrance to me; for you are not on the side of God, but of men.”

The Word of the Lord.

August 7th : Responsorial Psalm Psalm 94(95):1-2,6-9

 August 7th :  Responsorial Psalm

Psalm 94(95):1-2,6-9 

Response : If today you hear his voice, harden not your hearts.

1. O come, let us sing to the LORD; let us make a joyful noise to the rock of our salvation!

2. Let us come into his presence with thanksgiving; let us make a joyful noise to him with songs of praise!

Response : If today you hear his voice, harden not your hearts.

3. O come, let us worship and bow down,

let us kneel before the LORD, our Maker!

4. For he is our God, and we are the people of his pasture, and the sheep of his hand. O that today you would hearken to his voice!

Response : If today you hear his voice, harden not your hearts.

5. Harden not your hearts, as at Merʹibah,

as on the day at Massah in the wilderness,

6. when your fathers tested me, and put me to the proof, though they had seen my work.

Response : If today you hear his voice, harden not your hearts.

Gospel Acclamation Ps144:13

Alleluia, alleluia!

The Lord is faithful in all his words

and loving in all his deeds.

Alleluia!

August 7th : First Reading Moses makes water flow from the rock at Meribah. A Reading from the Book of Numbers 20: 1-13.

 August 7th : First Reading 

Moses makes water flow from the rock at Meribah.

A Reading from the Book of Numbers 20: 1-13. 

And the people of Israel, the whole congregation, came into the wilderness of Zin in the first month, and the people stayed in Kadesh; and Miriam died there, and was buried there. Now there was no water for the congregation; and they assembled themselves together against Moses and against Aaron. And the people contended with Moses, and said, “Would that we had died when our brethren died before the LORD! Why have you brought the assembly of the LORD into this wilderness, that we should die here, both we and our cattle? And why have you made us come up out of Egypt, to bring us to this evil place? It is no place for grain, or figs, or vines, or pomegranates; and there is no water to drink.” Then Moses and Aaron went from the presence of the assembly to the door of the tent of meeting, and fell on their faces. And the glory of the LORD appeared to them, and the LORD said to Moses, “Take the rod, and assemble the congregation, you and Aaron your brother, and tell the rock before their eyes to yield its water; so you shall bring water out of the rock for them; so you shall give drink to the congregation and their cattle.” And Moses took the rod from before the LORD, as he commanded him. And Moses and Aaron gathered the assembly together before the rock, and he said to them, “Hear now, you rebels; shall we bring forth water for you out of this rock?” And Moses lifted up his hand and struck the rock with his rod twice; and water came forth abundantly, and the congregation drank, and their cattle. And the LORD said to Moses and Aaron, “Because you did not believe in me, to sanctify me in the eyes of the people of Israel, therefore you shall not bring this assembly into the land which I have given them.” These are the waters of Merʹibah, where the people of Israel contended with the LORD, and he showed himself holy among them.

The Word of the Lord.