இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 9 : முதல் வாசகம் உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 4-13

 ஆகஸ்ட் 9 :  முதல் வாசகம்

உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 4-13


மோசே மக்களை நோக்கிக் கூறியது:

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப் பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழைவாயில்களிலும் அவற்றை எழுது.

மேலும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும்போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும்போதும், அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு.

உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு!

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 9th : Gospel If your faith were the size of a mustard seed, the mountain would move A reading from the Holy Gospel according to St.Matthew 17: 14-20

 August 9th :  Gospel

If your faith were the size of a mustard seed, the mountain would move

A reading from the Holy Gospel according to St.Matthew 17: 14-20 

And when they came to the crowd, a man came up to him and kneeling before him said, “Lord, have mercy on my son, for he is an epileptic and he suffers terribly; for often he falls into the fire, and often into the water. And I brought him to your disciples, and they could not heal him.” And Jesus answered, “O faithless and perverse generation, how long am I to be with you? How long am I to bear with you? Bring him here to me.” And Jesus rebuked him, and the demon came out of him, and the boy was cured instantly. Then the disciples came to Jesus privately and said, “Why could we not cast it out?” He said to them, “Because of your little faith. For truly, I say to you, if you have faith as a grain of mustard seed, you will say to this mountain, ‘Move from hence to yonder place,’ and it will move; and nothing will be impossible to you.”

The Word of the Lord.

August 9th : Responsorial Psalm Psalm 17(18):2-4,47,51

 August 9th :  Responsorial Psalm

Psalm 17(18):2-4,47,51 

Response : I love you, Lord, my strength.

I love you, O Lord, my strength, O Lord, my rock, my fortress, my deliverer.

Response : I love you, Lord, my strength.

My God, my rock of refuge, my shield, the horn of my salvation, my stronghold! Praised be the Lord, I exclaim! And I am safe from my enemies.

Response : I love you, Lord, my strength.

The Lord lives! And blessed be my Rock! Extolled be God my Savior! You who gave great victories to your king, and showed kindness to David your anointed, to his descendants for ever. 

Response : I love you, Lord, my strength.

Gospel Acclamation cf.Ep1:17,18

Alleluia, alleluia!

May the Father of our Lord Jesus Christ

enlighten the eyes of our mind,

so that we can see what hope his call holds for us.

Alleluia!


August 9th : First reading You shall love the Lord your God with all your heart A reading from the book of Deuteronomy 6:4-13 “Hear, O Israel: The LORD our God is one LORD;

 August 9th :  First reading

You shall love the Lord your God with all your heart

A reading from the book of Deuteronomy 6:4-13 

“Hear, O Israel: The LORD our God is one LORD;

and you shall love the LORD your God with all your heart, and with all your soul, and with all your might. And these words which I command you this day shall be upon your heart; and you shall teach them diligently to your children, and shall talk of them when you sit in your house, and when you walk by the way, and when you lie down, and when you rise. And you shall bind them as a sign upon your hand, and they shall be as frontlets between your eyes. And you shall write them on the doorposts of your house and on your gates. “And when the LORD your God brings you into the land which he swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give you, with great and goodly cities, which you did not build, and houses full of all good things, which you did not fill, and cisterns hewn out, which you did not hew, and vineyards and olive trees, which you did not plant, and when you eat and are full, then take heed lest you forget the LORD, who brought you out of the land of Egypt, out of the house of bondage. You shall fear the LORD your God; you shall serve him, and swear by his name.

The Word of the Lord.

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 8 : நற்செய்தி வாசகம் ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28

 ஆகஸ்ட் 8 :  நற்செய்தி வாசகம்

ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28


அக்காலத்தில்

இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார். நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 8 : பதிலுரைப் பாடல் திபா 77: 11-12. 13-14. 15,20 (பல்லவி: 11a) பல்லவி: ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்

 ஆகஸ்ட்  8 :  பதிலுரைப் பாடல்

திபா 77: 11-12. 13-14. 15,20 (பல்லவி: 11a)


பல்லவி: ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்.

11

ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்; முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன்.

12

உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன். - பல்லவி

13

கடவுளே, உமது வழி தூய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்!

14

அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே! மக்களினங்களிடையே உமது ஆற்றலை விளங்கச் செய்தவரும் நீரே. - பல்லவி

15

யாக்கோபு, யோசேப்பு என்போரின் புதல்வரான உம் மக்களை நீர் உமது புயத்தால் மீட்டுக்கொண்டீர்.

20

மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! 

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

ஆகஸ்ட் 8 : முதல் வாசகம் உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-40

 ஆகஸ்ட் 8 :  முதல் வாசகம்

உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-40


மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப் பட்டதுண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?

‘ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன. நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப் பின், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச்சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார்.

‘மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


August 8th : Gospel Anyone who loses his life for my sake will find it A reading from the Holy Gospel according to St.Matthew 16:24-28

 August 8th : Gospel

Anyone who loses his life for my sake will find it

A reading from the Holy Gospel according to St.Matthew 16:24-28

Jesus said to his disciples: ‘If anyone wants to be a follower of mine, let him renounce himself and take up his cross and follow me. For anyone who wants to save his life will lose it; but anyone who loses his life for my sake will find it. What, then, will a man gain if he wins the whole world and ruins his life? Or what has a man to offer in exchange for his life?

  ‘For the Son of Man is going to come in the glory of his Father with his angels, and, when he does, he will reward each one according to his behaviour. I tell you solemnly, there are some of these standing here who will not taste death before they see the Son of Man coming with his kingdom.’

The Word of the Lord.


August 8th : Responsorial Psalm Psalm 76(77):12-16,21

 August 8th : Responsorial Psalm

Psalm 76(77):12-16,21

Response : I remember the deeds of the Lord.

I will call to mind the deeds of the Lord;

  yes, I will remember thy wonders of old.

I will meditate on all thy work,

  and muse on thy mighty deeds.

Response: I remember the deeds of the Lord.

Thy way, O God, is holy.

  What god is great like our God?

Thou art the God who workest wonders,

  who hast manifested thy might among the peoples.

Response: I remember the deeds of the Lord.

Thou didst with thy arm redeem thy people,

  the sons of Jacob and Joseph.

When the waters saw thee, O God,

  when the waters saw thee, they were afraid,

  yea, the deep trembled.

Response: I remember the deeds of the Lord.

 Thou didst lead thy people like a flock

  by the hand of Moses and Aaron.

Response: I remember the deeds of the Lord.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!

Speak, Lord, your servant is listening:

you have the message of eternal life.

Alleluia!


August 8th : First reading 'Did ever a people before you hear the voice of the living God, and remain alive?' A reading from the book of Deuteronomy 4:32-40

 August 8th :  First reading

'Did ever a people before you hear the voice of the living God, and remain alive?'

A reading from the book of Deuteronomy 4:32-40 

“For ask now of the days that are past, which were before you, since the day that God created man upon the earth, and ask from one end of heaven to the other, whether such a great thing as this has ever happened or was ever heard of. Did any people ever hear the voice of a god speaking out of the midst of the fire, as you have heard, and still live? Or has any god ever attempted to go and take a nation for himself from the midst of another nation, by trials, by signs, by wonders, and by war, by a mighty hand and an outstretched arm, and by great terrors, according to all that the Lord your God did for you in Egypt before your eyes? To you it was shown, that you might know that the Lord is God; there is no other besides him. Out of heaven he let you hear his voice, that he might discipline you; and on earth he let you see his great fire, and you heard his words out of the midst of the fire. And because he loved your fathers and chose their descendants after them, and brought you out of Egypt with his own presence, by his great power, driving out before you nations greater and mightier than yourselves, to bring you in, to give you their land for an inheritance, as at this day; know therefore this day, and lay it to your heart, that the Lord is God in heaven above and on the earth beneath; there is no other. Therefore you shall keep his statutes and his commandments, which I command you this day, that it may go well with you, and with your children after you, and that you may prolong your days in the land which the Lord your God gives you for ever.” 

The Word of the Lord.