இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 3 ஜனவரி, 2026

January 4th : Second Reading It has now been revealed that pagans share the same inheritance A Reading from the letter of St.Paul to the Ephesians 3:2-3,5-6

 January 4th : Second Reading

It has now been revealed that pagans share the same inheritance

A Reading from the letter of St.Paul to the Ephesians 3:2-3,5-6 

Brethren:  I assume that you have heard of the stewardship of God’s grace that was given to me for you, how the mystery was made known to me by revelation, which was not made known to the sons of men in other generations as it has now been revealed to his holy apostles and prophets by the Spirit. This mystery is that the Gentiles are fellow heirs, members of the same body, and partakers of the promise in Christ Jesus through the gospel.

The Word of the Lord.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. We saw his star when it rose, and have come to worship the Lord.

R. Alleluia.

January 4th : Respomsorial Psalm Psalm 72:1–2, 7–8, 10–11, 12–13 (R. see 11) Response : All nations on earth shall fall prostrate before you, O Lord.

 January 4th : Respomsorial Psalm

Psalm 72:1–2, 7–8, 10–11, 12–13 (R. see 11)

Response : All nations on earth shall fall prostrate before you, O Lord.

O God, give your judgment to the king, to a king’s son your justice, that he may judge your people in justice, and your poor in right judgment.

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

In his days shall justice flourish, and great peace till the moon is no more. He shall rule from sea to sea, from the River to the bounds of the earth.

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

The kings of Tarshish and the islands shall pay him tribute. The kings of Sheba and Seba shall bring him gifts. Before him all kings shall fall prostrate, all nations shall serve him.

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

For he shall save the needy when they cry, the poor, and those who are helpless. He will have pity on the weak and the needy, and save the lives of the needy.

R.: All nations on earth shall fall prostrate before you, O Lord.

January 4th : First reading Above you the glory of the Lord appears A Reading from the book of the prophet Isaiah 60:1-6

 January 4th : First reading 

Above you the glory of the Lord appears

A Reading from the book of the prophet Isaiah  60:1-6 

Arise, shine, for your light has come, and the glory of the Lord has risen upon you. For behold, darkness shall cover the earth, and thick darkness the peoples; but the Lord will arise upon you, and his glory will be seen upon you. And nations shall come to your light, and kings to the brightness of your rising. Lift up your eyes all round, and see; they all gather together, they come to you; your sons shall come from afar, and your daughters shall be carried on the hip. Then you shall see and be radiant; your heart shall thrill and exult, because the abundance of the sea shall be turned to you, the wealth of the nations shall come to you. A multitude of camels shall cover you, the young camels of Midian and Ephah; all those from Sheba shall come. They shall bring gold and frankincense, and shall bring good news, the praises of the Lord.

The Word of the Lord.

வெள்ளி, 2 ஜனவரி, 2026

சனவரி 3 : நற்செய்தி வாசகம் இதோ! கடவுளின் செம்மறி. ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34

 சனவரி 3 :  நற்செய்தி வாசகம்

இதோ! கடவுளின் செம்மறி.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34


அக்காலத்தில்

இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று என்குத் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 3 : பதிலுரைப் பாடல் திபா 98: 1. 3b-4. 5-6 (பல்லவி: 3b) பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

 சனவரி 3 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 3b-4. 5-6 (பல்லவி: 3b)

பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1


ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

3b

உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

4

உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

5

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.

6

ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 14, 12b

அல்லேலூயா, அல்லேலூயா! 

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.


சனவரி 3 : முதல் வாசகம் கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 29- 3: 6

 சனவரி 3 :  முதல் வாசகம்

கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 29- 3: 6

அன்பிற்குரியவர்களே,


இறைவன் நேர்மையாளர் என நீங்கள் அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும். பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம்.

பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 3rd : Gospel 'Look: there is the Lamb of God' A Reading from the Holy Gospel according to St.John 1:29-34

 January 3rd :  Gospel 

'Look: there is the Lamb of God'

A Reading from the Holy Gospel according to St.John 1:29-34 

The next day John saw Jesus coming towards him, and said, “Behold, the Lamb of God, who takes away the sin of the world! This is he of whom I said, ‘After me comes a man who ranks before me, because he was before me.’ I myself did not know him, but for this purpose I came baptizing with water, that he might be revealed to Israel.” And John bore witness: “I saw the Spirit descend from heaven like a dove, and it remained on him. I myself did not know him, but he who sent me to baptize with water said to me, ‘He on whom you see the Spirit descend and remain, this is he who baptizes with the Holy Spirit.’ And I have seen and have borne witness that this is the Son of God.”

The Gospel of the Lord.


January 3rd : Responsorial Psalm Psalm 98:1, 3cd-4, 5-6 (R. 3cd)

 January 3rd : Responsorial Psalm

Psalm 98:1, 3cd-4, 5-6 (R. 3cd)

Response : All the ends of the earth have seen the salvation of our God.

O sing a new song to the Lord, for he has worked wonders. His right hand and his holy arm have brought salvation.

R.: All the ends of the earth have seen the salvation of our God.

All the ends of the earth have seen the salvation of our God. Shout to the Lord, all the earth; break forth into joyous song, and sing out your praise.

R.: All the ends of the earth have seen the salvation of our God.

Sing psalms to the Lord with the harp, with the harp and the sound of song. With trumpets and the sound of the horn, raise a shout before the King, the Lord.

R.: All the ends of the earth have seen the salvation of our God.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. The Word became flesh and dwelt among us. To all who did receive him, he gave the right to become children of God.

R. Alleluia.

January 3rd : First reading Everyone must try to be as pure as Christ A Reading from the First Book of St.John 2:29-3:6

 January 3rd :  First reading 

Everyone must try to be as pure as Christ

A Reading from the First Book of St.John 2:29-3:6 

Beloved:  If you know that God is righteous, you may be sure that everyone who practises righteousness has been born of him. See what kind of love the Father has given to us, that we should be called children of God; and so we are. The reason why the world does not know us is that it did not know him. Beloved, we are God’s children now, and what we will be has not yet appeared; but we know that when he appears we shall be like him, because we shall see him as he is. And everyone who thus hopes in him purifies himself as he is pure. Everyone who makes a practice of sinning also practises lawlessness; sin is lawlessness. You know that he appeared in order to take away sins, and in him there is no sin. No one who abides in him keeps on sinning; no one who keeps on sinning has either seen him or known him.

The Word of the Lord.


வியாழன், 1 ஜனவரி, 2026

சனவரி 2 : நற்செய்தி வாசகம் நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 19-28

 சனவரி 2 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 19-28


அக்காலத்தில்

எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார் “நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே” என்றார்.

பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.