ஞாயிறு, 1 மார்ச், 2026
மார்ச் 2 : முதல் வாசகம்நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a
March 2nd : Gospel Grant pardon, and you will be pardonedA Reading from the Holy Gospel according to St.Luke 6:36-38
March 2nd : Responsorial PsalmPsalm 79:8, 9, 11, 13 (R. see Psalm 103:10a)
March 2nd : First reading Yours is the integrity, Lord; ours the shameA Reading from the book of the Prophet Daniel 9: 4-10
வெள்ளி, 27 பிப்ரவரி, 2026
February 28th : Gospel Pray for those who persecute you A Reading from the Holy Gospel according to St.Matthew 5:43-48
February 28th : Gospel
Pray for those who persecute you
A Reading from the Holy Gospel according to St.Matthew 5:43-48
At that time: Jesus said to his disciples, “You have heard that it was said, ‘You shall love your neighbour and hate your enemy.’ But I say to you, Love your enemies and pray for those who persecute you, so that you may be sons of your Father who is in heaven. For he makes his sun rise on the evil and on the good, and sends rain on the just and on the unjust. For if you love those who love you, what reward do you have? Do not even the tax collectors do the same? And if you greet only your brothers, what more are you doing than others? Do not even the Gentiles do the same? You therefore must be perfect, as your heavenly Father is perfect.”
The Gospel of the Lord.
February 28th : Responsorial Psalm Psalm 119:1–2, 4–5, 7–8 (R. 1b)
February 28th : Responsorial Psalm
Psalm 119:1–2, 4–5, 7–8 (R. 1b)
Response : Blessed are those who walk in the law of the Lord!
Blessed are those whose way is blameless, who walk in the law of the Lord! Blessed are those who keep his decrees! With all their hearts they seek him.
R.: Blessed are those who walk in the law of the Lord!
You have laid down your precepts to be carefully kept. May my ways be firm in keeping your statutes.
R.: Blessed are those who walk in the law of the Lord!
I will thank you with an upright heart, as I learn your just judgments. I will keep your statutes; do not ever forsake me.
R.: Blessed are those who walk in the law of the Lord!
Verse before the Gospel
V. Glory and praise to you, O Christ.
R. Glory and praise to you, O Christ.
V. Behold, now is the favourable time; behold, now is the day of salvation.
R. Glory and praise to you, O Christ.
February 28th : First reading You will be a people consecrated to the Lord A reading from the book of Deuteronomy 26: 16-19
February 28th : First reading
You will be a people consecrated to the Lord
A reading from the book of Deuteronomy 26: 16-19
Moses spoke to the people, saying: “This day the Lord your God commands you to do these statutes and rules. You shall therefore be careful to do them with all your heart and with all your soul. You have declared today that the Lord is your God, and that you will walk in his ways, and keep his statutes and his commandments and his rules, and will obey his voice. And the Lord has declared today that you are a people for his treasured possession, as he has promised you, and that you are to keep all his commandments, and that he will set you in praise and in fame and in honour high above all nations that he has made, and that you shall be a people holy to the Lord your God, as he promised.”
The Word of the Lord.
பிப்ரவரி 28 : நற்செய்தி வாசகம் உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48
பிப்ரவரி 28 : நற்செய்தி வாசகம்
உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.
உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பிப்ரவரி 28 : பதிலுரைப் பாடல் திபா 119: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 1b) பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
பிப்ரவரி 28 : பதிலுரைப் பாடல்
திபா 119: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 1b)
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
1
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
2
அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். - பல்லவி
4
ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.
5
உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! - பல்லவி
7
உம் நீதி நெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.
8
உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
2 கொரி 6: 2b
இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!
பிப்ரவரி 28 : முதல் வாசகம் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19
பிப்ரவரி 28 : முதல் வாசகம்
உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19
மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.
ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.
நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.