திங்கள், 27 ஏப்ரல், 2026
ஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30
ஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்திபா 87: 1-3. 4-5. 6-7a (பல்லவி: திபா 117: 1a)
ஏப்ரல் 28 : முதல் வாசகம்ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26
April 28th : Gospel The Father and I are oneA Reading from the Holy Gospel according to St.John 10:22-30
April 28th : Responsorial PsalmPsalm 87:1–3, 4–5, 6–7 (Psalm 117:1a)Response : O praise the Lord, all you nations.
April 28th : First Reading They started preaching to the Greeks, proclaiming the Lord JesusA Reading from the Acts of Apostles 11:19-26
ஞாயிறு, 26 ஏப்ரல், 2026
ஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம் நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18
ஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்
நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18
அக்காலத்தில்
இயேசு கூறியது: ‘‘நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றிஇழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை.
நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார்.
ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப் படியே நான் இப்படிச் செய்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
ஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல் திபா 42: 1-2; 43: 3. 4 (பல்லவி: 42: 2a) பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது. அல்லது: அல்லேலூயா.
ஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்
திபா 42: 1-2; 43: 3. 4 (பல்லவி: 42: 2a)
பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.
அல்லது: அல்லேலூயா.
42:1
கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
2
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? - பல்லவி
43:3
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி
4
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 14-15
அல்லேலூயா, அல்லேலூயா!
நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
ஏப்ரல் 27 : முதல் வாசகம் வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18
ஏப்ரல் 27 : முதல் வாசகம்
April 27th : Gospel A Reading from the Holy Gospel according to St.John 10:11-18
April 27th : Gospel
A Reading from the Holy Gospel according to St.John 10:11-18
At that time: Jesus said, “I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep. He who is a hired hand and not a shepherd, who does not own the sheep, sees the wolf coming and leaves the sheep and flees, and the wolf snatches them and scatters them. He flees because he is a hired hand and cares nothing for the sheep. I am the good shepherd. I know my own and my own know me, just as the Father knows me and I know the Father; and I lay down my life for the sheep. And I have other sheep that are not of this fold. I must bring them also, and they will listen to my voice. So there will be one flock, one shepherd. For this reason the Father loves me, because I lay down my life that I may take it up again. No one takes it from me, but I lay it down of my own accord. I have authority to lay it down, and I have authority to take it up again. This charge I have received from my Father.”
The Gospel of the Lord.