இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 29 ஜூன், 2026

June 30th : Gospel Jesus rebuked the winds and the seas, and all was calm A Reading from the Holy Gospel according to St.Matthew 8: 23-27

 June 30th : Gospel

Jesus rebuked the winds and the seas, and all was calm
A Reading from the Holy Gospel according to St.Matthew 8: 23-27
At that time: When Jesus got into the boat, his disciples followed him. And behold, there arose a great storm on the sea, so that the boat was being swamped by the waves; but he was asleep. And they went and woke him, saying, “Save us, Lord; we are perishing.” And he said to them, “Why are you afraid, O you of little faith?” Then he rose and rebuked the winds and the sea, and there was a great calm. And the men marvelled, saying, “What sort of man is this, that even winds and sea obey him?”
The Gospel of the Lord.

June 30th : Responsorial Psalm Psalm 5: 5–6, 7, 8 (R.9a) Response : Lead me, Lord, in your justice.

 June 30th : Responsorial Psalm

Psalm 5: 5–6, 7, 8 (R.9a)
Response : Lead me, Lord, in your justice.
You are no God who delights in evil; no sinner is your guest. The boastful shall not stand their ground before your eyes.
R.: Lead me, Lord, in your justice.
All who do evil you despise; all who lie you destroy. The deceitful and those who shed blood, the Lord detests.
R.: Lead me, Lord, in your justice.
Yet through the greatness of your merciful love, I enter your house. I bow down before your holy temple, in awe of you.
R.: Lead me, Lord, in your justice.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. I long for the Lord, in his word I hope.
R. Alleluia.

June 30th : First Reading It is for all your sins that I mean to punish you A Reading from the Book of the Prophet Amos 3:1-8; 4:11-12

 June 30th : First Reading

It is for all your sins that I mean to punish you
A Reading from the Book of the Prophet Amos 3:1-8; 4:11-12
Hear this word that the Lord has spoken against you, O people of Israel, against the whole family that I brought up out of the land of Egypt: “You only have I known of all the families of the earth; therefore I will punish you for all your iniquities. “Do two walk together, unless they have agreed to meet? Does a lion roar in the forest, when he has no prey? Does a young lion cry out from his den, if he has taken nothing? Does a bird fall in a snare on the earth, when there is no trap for it? Does a snare spring up from the ground, when it has taken nothing? Is a trumpet blown in a city, and the people are not afraid? Does disaster come to a city, unless the Lord has done it? “For the Lord God does nothing without revealing his secret to his servants the prophets. The lion has roared; who will not fear? The Lord God has spoken; who can but prophesy?” “I overthrew some of you, as when God overthrew Sodom and Gomorrah, and you were as a brand plucked out of the burning; yet you did not return to me,” declares the Lord. “Therefore thus I will do to you, O Israel; because I will do this to you, prepare to meet your God, O Israel!”
The Word of the Lord.

ஞாயிறு, 28 ஜூன், 2026

ஜூன் 29 : நற்செய்தி வாசகம் உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

 ஜூன் 29 : நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 29 : இரண்டாம் வாசகம் இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18

 ஜூன் 29 : இரண்டாம் வாசகம்

இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18

அன்பிற்குரியவரே,
நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.
நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா!
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.

ஜூன் 29 : பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)

 ஜூன் 29 : பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)

பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி
3
என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி
5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி
7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

ஜூன் 29 : புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழாத் திருப்பலி முதல் வாசகம் ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11

 ஜூன் 29 : புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழாத் திருப்பலி

முதல் வாசகம்
ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11

அந்நாள்களில்
ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது.
ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும்” என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.
வானதூதர் அவரிடம், “இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், “உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்” என்றார். பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

June 29th : Gospel You are Peter and on this rock I will build my Church A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-19

 June 29th : Gospel

You are Peter and on this rock I will build my Church
A Reading from the Holy Gospel according to St.Matthew 16: 13-19
At that time: When Jesus came into the district of Caesarea Philippi, he asked his disciples, “Who do people say that the Son of Man is?” And they said, “Some say John the Baptist, others say Elijah, and others Jeremiah or one of the prophets.” He said to them, “But who do you say that I am?” Simon Peter replied, “You are the Christ, the Son of the living God.” And Jesus answered him, “Blessed are you, Simon Bar-Jonah! For flesh and blood has not revealed this to you, but my Father who is in heaven. And I tell you, you are Peter, and on this rock I will build my church, and the gates of hell shall not prevail against it. I will give you the keys of the kingdom of heaven, and whatever you bind on earth shall be bound in heaven, and whatever you loose on earth shall be loosed in heaven.
The Gospel of the Lord.

June 29th : Second Reading All there is to come now is the crown of righteousness reserved for me A Reading from the Second Letter of St.Paul to Timothy 4: 6-8,17-18

 June 29th : Second Reading

All there is to come now is the crown of righteousness reserved for me
A Reading from the Second Letter of St.Paul to Timothy 4: 6-8,17-18
Beloved: I am already being poured out as a drink offering, and the time of my departure has come. I have fought the good fight, I have finished the race, I have kept the faith. Henceforth there is laid up for me the crown of righteousness, which the Lord, the righteous judge, will award to me on that day, and not only to me but also to all who have loved his appearing. But the Lord stood by me and strengthened me so that through me the message might be fully proclaimed and all the Gentiles might hear it. So I was rescued from the lion’s mouth. The Lord will rescue me from every evil deed and bring me safely into his heavenly kingdom. To him be the glory for ever and ever. Amen.
The Word of the Lord.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. You are Peter, and on this rock I will build my Church and the gates of hell shall not prevail against it.
R. Alleluia.

June 29th : Responsorial Psalm Psalm 34:2–3, 4–5, 6–7, 8–9 (R. see 5b) Response : From all my terrors he set me free.

 June 29th : Responsorial Psalm

Psalm 34:2–3, 4–5, 6–7, 8–9 (R. see 5b)
Response : From all my terrors he set me free.
I will bless the Lord at all times. praise of him is always in my mouth. In the Lord my soul shall make its boast; the humble shall hear and be glad.
R.: From all my terrors he set me free.
Glorify the Lord with me; together let us praise his name. I sought the Lord, and he answered me; from all my terrors he set me free.
R.: From all my terrors he set me free.
Look toward him and be radiant; let your faces not be abashed. This lowly one called; the Lord heard, and rescued him from all his distress.
R.: From all my terrors he set me free.
The angel of the Lord is encamped around those who fear him, to rescue them. Taste and see that the Lord is good. Blessed the man who seeks refuge in him.
R.: From all my terrors he set me free