July 18th : First Reading
சனி, 18 ஜூலை, 2026
July 18th : First Reading The plotters of evil will not escape A Reading from the Book of the Prophet Micah 2: 1-5
வெள்ளி, 17 ஜூலை, 2026
நற்செய்தி வாசகம் இறைவாக்கினர் கூறியது நிறைவேறும்படி, தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்குக் கற்பித்தார். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21
நற்செய்தி வாசகம்
இறைவாக்கினர் கூறியது நிறைவேறும்படி, தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்குக் கற்பித்தார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21
அக்காலத்தில்
பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார். இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின:
“இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 10: 1-2. 3-4. 7-8. 14 (பல்லவி: 12b) பல்லவி: ஆண்டவரே, எளியோரை மறந்துவிடாதேயும்.
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, எளியோரை மறந்துவிடாதேயும்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரி 5: 19அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
பொதுக்காலம் 15ஆம் வாரம் - சனி முதல் வாசகம் வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 2: 1-5
பொதுக்காலம் 15ஆம் வாரம் - சனி
முதல் வாசகம்
வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 2: 1-5
தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கை வலிமையினால் அவர்கள் அதைச் செய்து முடிக்கின்றார்கள். வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்; வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்; ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.
ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்; அதனின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது; நீங்கள் ஆணவம் கொண்டு நடக்க மாட்டீர்கள்; ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும். அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, ‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே; ஆண்டவருடைய மக்களின் உரிமைச் சொத்து கைமாறி விட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
ஆதலால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
வியாழன், 16 ஜூலை, 2026
ஜூலை 17 : நற்செய்தி வாசகம் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே. ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8
ஜூலை 17 : நற்செய்தி வாசகம்
ஜூலை 17 : பதிலுரைப் பாடல் எசா 38: 10. 11. 12. 16 (பல்லவி: 17b)பல்லவி: அழிவின் குழியிலிருந்து ஆண்டவரே, என் உயிரைக் காத்தீர். 10
ஜூலை 17 : பதிலுரைப் பாடல்
ஜூலை 17 : முதல் வாசகம் உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 38: 1-6, 21-22, 7-8
ஜூலை 17 : முதல் வாசகம்
July 17th : Gospel The Son of Man is master of the sabbath A Reading from the Holy Gospel according to St.Matthew 12:1-8
July 17th : Gospel
July 17th : Responsorial Psalm Isaiah 38:10, 11, 12abcd, 16 (R. see 17cd)
July 17th : Responsorial Psalm
July 17th : First Reading The Lord hears Hezekiah's prayer and heals him A Reading from the Book of the Prophet Isaiah 38 :1-6,21-22,7-8
July 17th : First Reading