இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 2 செப்டம்பர், 2020

September 3rd : Gospel They left everything and followed him.A Reading from the Holy Gospel according to St.Luke 5:1-11

September 3rd :  Gospel 

They left everything and followed him.

A Reading from the Holy Gospel according to St.Luke 5:1-11 
Jesus was standing one day by the Lake of Gennesaret, with the crowd pressing round him listening to the word of God, when he caught sight of two boats close to the bank. The fishermen had gone out of them and were washing their nets. He got into one of the boats – it was Simon’s – and asked him to put out a little from the shore. Then he sat down and taught the crowds from the boat.
  When he had finished speaking he said to Simon, ‘Put out into deep water and pay out your nets for a catch.’ ‘Master,’ Simon replied, ‘we worked hard all night long and caught nothing, but if you say so, I will pay out the nets.’ And when they had done this they netted such a huge number of fish that their nets began to tear, so they signalled to their companions in the other boat to come and help them; when these came, they filled the two boats to sinking point.
  When Simon Peter saw this he fell at the knees of Jesus saying, ‘Leave me, Lord; I am a sinful man.’ For he and all his companions were completely overcome by the catch they had made; so also were James and John, sons of Zebedee, who were Simon’s partners. But Jesus said to Simon, ‘Do not be afraid; from now on it is men you will catch.’ Then, bringing their boats back to land, they left everything and followed him.

The Gospel of the Lord.

September 3rd : Responsorial PsalmPsalm 23(24):1-6 The Lord’s is the earth and its fullness.

September 3rd :  Responsorial Psalm

Psalm 23(24):1-6 

The Lord’s is the earth and its fullness.
The Lord’s is the earth and its fullness,
  the world and all its peoples.
It is he who set it on the seas;
  on the waters he made it firm.

The Lord’s is the earth and its fullness.

Who shall climb the mountain of the Lord?
  Who shall stand in his holy place?
The man with clean hands and pure heart,
  who desires not worthless things.

The Lord’s is the earth and its fullness.

He shall receive blessings from the Lord
  and reward from the God who saves him.
Such are the men who seek him,
  seek the face of the God of Jacob.

The Lord’s is the earth and its fullness.

Gospel Acclamation cf.2Thess2:14

Alleluia, alleluia!
Through the Good News God called us
to share the glory of our Lord Jesus Christ.
Alleluia!

September 3rd : First readingThe wisdom of the world is foolishness to God.A Reading from the First Letter of St.Paul to the Corinthians 3:18-23

September 3rd : First reading

The wisdom of the world is foolishness to God.

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 3:18-23 
Make no mistake about it: if any one of you thinks of himself as wise, in the ordinary sense of the word, then he must learn to be a fool before he really can be wise. Why? Because the wisdom of this world is foolishness to God. As scripture says: The Lord knows wise men’s thoughts: he knows how useless they are; or again: God is not convinced by the arguments of the wise. So there is nothing to boast about in anything human: Paul, Apollos, Cephas, the world, life and death, the present and the future, are all your servants; but you belong to Christ and Christ belongs to God.

The Word of the Lord.

செப்டம்பர் 3 வியாழன் : நற்செய்தி வாசகம்அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11

செப்டம்பர் 3 : நற்செய்தி வாசகம்

அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11
அக்காலத்தில்

இயேசு கெனசரேத்து ஏரிக் கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.

அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.

இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.

இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார்.

அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 3 வியாழன் : பதிலுரைப் பாடல்திபா 24: 1-2. 3-4ab. 5-6 . (பல்லவி: 1a)பல்லவி: மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை.

செப்டம்பர் 3 :  பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 . (பல்லவி: 1a)

பல்லவி: மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை.
1.மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2.ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3.ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab.கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5.இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6.அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 19

அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

செப்டம்பர் 3 வியாழன் : முதல் வாசகம்நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

செப்டம்பர் 3 :  முதல் வாசகம்

நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-23

சகோதரர் சகோதரிகளே,

எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்.” மேலும் “ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.” எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

Sept. 2nd : Gospel He would not allow them to speak because they knew he was the Christ

Sept. 2nd : Gospel 

He would not allow them to speak because they knew he was the Christ.
A Reading from the Holy Gospel according to St.Luke 4:38-44 ©

Leaving the synagogue, Jesus went to Simon’s house. Now Simon’s mother-in-law was suffering from a high fever and they asked him to do something for her. Leaning over her he rebuked the fever and it left her. And she immediately got up and began to wait on them.
  At sunset all those who had friends suffering from diseases of one kind or another brought them to him, and laying his hands on each he cured them. Devils too came out of many people, howling, ‘You are the Son of God.’ But he rebuked them and would not allow them to speak because they knew that he was the Christ.
  When daylight came he left the house and made his way to a lonely place. The crowds went to look for him, and when they had caught up with him they wanted to prevent him leaving them, but he answered, ‘I must proclaim the Good News of the kingdom of God to the other towns too, because that is what I was sent to do.’ And he continued his preaching in the synagogues of Judaea.

The Gospel of the Lord.

Sept. 2nd : Responsorial PsalmPsalm 32(33):12-15,20-21

Sept. 2nd :  Responsorial Psalm

Psalm 32(33):12-15,20-21 
Happy the people the Lord has chosen as his own.

They are happy, whose God is the Lord,
  the people he has chosen as his own.
From the heavens the Lord looks forth,
  he sees all the children of men.

Happy the people the Lord has chosen as his own.

From the place where he dwells he gazes
  on all the dwellers on the earth;
he who shapes the hearts of them all;
  and considers all their deeds.

Happy the people the Lord has chosen as his own.

Our soul is waiting for the Lord.
  The Lord is our help and our shield.
In him do our hearts find joy.
  We trust in his holy name.

Happy the people the Lord has chosen as his own.

Gospel Acclamation 1P1:25

Alleluia, alleluia!
The word of the Lord remains for ever:
What is this word?
It is the Good News that has been brought to you.
Alleluia!

Sept 2nd : First ReadingNeither the planter nor the waterer matters, only God, who makes things grow

Sept 2nd  : First Reading

Neither the planter nor the waterer matters, only God, who makes things grow
A Reading from the First Letter of St.Paul to the  Corinthians 3:1-9.

Brothers, I myself was unable to speak to you as people of the Spirit: I treated you as sensual men, still infants in Christ. What I fed you with was milk, not solid food, for you were not ready for it; and indeed, you are still not ready for it since you are still unspiritual. Isn’t that obvious from all the jealousy and wrangling that there is among you, from the way that you go on behaving like ordinary people? What could be more unspiritual than your slogans, ‘I am for Paul’ and ‘I am for Apollos’?
  After all, what is Apollos and what is Paul? They are servants who brought the faith to you. Even the different ways in which they brought it were assigned to them by the Lord. I did the planting, Apollos did the watering, but God made things grow. Neither the planter nor the waterer matters: only God, who makes things grow. It is all one who does the planting and who does the watering, and each will duly be paid according to his share in the work. We are fellow workers with God; you are God’s farm, God’s building.

The Word of the Lord.

செப்டம்பர் 2 புதன் : நற்செய்தி வாசகம்நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்.

செப்டம்பர் 2 :  நற்செய்தி வாசகம்

நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44

அக்காலத்தில்

இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், “நீர் இறைமகன்” என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.

பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், “நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.