இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 12 நவம்பர், 2020

November 13th : Gospel When the day comes for the Son of Man to be revealed.A Reading from the Holy Gospel according to St.Luke 17:26-37

November 13th :  Gospel 

When the day comes for the Son of Man to be revealed.

A Reading from the Holy Gospel according to  St.Luke 17:26-37 
Jesus said to the disciples:
  ‘As it was in Noah’s day, so will it also be in the days of the Son of Man. People were eating and drinking, marrying wives and husbands, right up to the day Noah went into the ark, and the flood came and destroyed them all. It will be the same as it was in Lot’s day: people were eating and drinking, buying and selling, planting and building, but the day Lot left Sodom, God rained fire and brimstone from heaven and it destroyed them all. It will be the same when the day comes for the Son of Man to be revealed.
  ‘When that day comes, anyone on the housetop, with his possessions in the house, must not come down to collect them, nor must anyone in the fields turn back either. Remember Lot’s wife. Anyone who tries to preserve his life will lose it; and anyone who loses it will keep it safe. I tell you, on that night two will be in one bed: one will be taken, the other left; two women will be grinding corn together: one will be taken, the other left.’ The disciples interrupted. ‘Where, Lord?’ they asked. He said, ‘Where the body is, there too will the vultures gather.’

The Gospel of the Lord.

November 13th : Responsorial PsalmPsalm 118(119):1-2,10-11,17-18 They are happy who follow God’s law.

November 13th :  Responsorial Psalm

Psalm 118(119):1-2,10-11,17-18 

They are happy who follow God’s law.
They are happy whose life is blameless,
  who follow God’s law!
They are happy who do his will,
  seeking him with all their hearts.

They are happy who follow God’s law.

I have sought you with all my heart;
  let me not stray from your commands.
I treasure your promise in my heart
  lest I sin against you.

They are happy who follow God’s law.

Bless your servant and I shall live
  and obey your word.
Open my eyes that I may see
  the wonders of your law.

They are happy who follow God’s law.

Gospel Acclamation

 Heb4:12

Alleluia, alleluia!
The word of God is something alive and active:
it can judge secret emotions and thoughts.
Alleluia!

November 13th : First Reading The commandment which you have heard since the beginning is to live a life of love.2 John 4-9

November 13th :  First Reading 

The commandment which you have heard since the beginning is to live a life of love.

2 John 4-9 
It has given me great joy to find that your children have been living the life of truth as we were commanded by the Father. I am writing now, dear lady, not to give you any new commandment, but the one which we were given at the beginning, and to plead: let us love one another.
  To love is to live according to his commandments: this is the commandment which you have heard since the beginning, to live a life of love.
  There are many deceivers about in the world, refusing to admit that Jesus Christ has come in the flesh. They are the Deceiver; they are the Antichrist. Watch yourselves, or all our work will be lost and not get the reward it deserves. If anybody does not keep within the teaching of Christ but goes beyond it, he cannot have God with him: only those who keep to what he taught can have the Father and the Son with them.

The Word of the Lord.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37

நவம்பர் 13 :  நற்செய்தி வாசகம்

மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள்.

லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்."

அவர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இது எங்கே நிகழும்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 13 : பதிலுரைப் பாடல்திபா 119: 1,2. 10,11. 17,18 . (பல்லவி: 1b)பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

நவம்பர் 13 :  பதிலுரைப் பாடல்

திபா 119: 1,2. 10,11. 17,18 . (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
1.மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
2.அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

10.முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும்.
11.உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். - பல்லவி

17.உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.
18.உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நவம்பர் 13 : முதல் வாசகம்போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.திருத்தூதர் யோவான் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4-9

நவம்பர் 13 :  முதல் வாசகம்

போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4-9
தேர்தெடுக்கப்பட்ட பெருமாட்டியே,

தந்தையிடமிருந்து நாம் பெற்ற கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியுற்றேன். பெருமாட்டியே, நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதை நான் ஒரு புதிய கட்டளையாக எழுதவில்லை. இது தொடக்கத்திலிருந்தே நமக்குள்ள கட்டளை. நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது.

அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்ததுதான்; அதைக் கடைப்பிடித்து வாழுங்கள். ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள். உங்கள் உழைப்பின் பயனை இழந்துவிடாமல் முழுக் கைம்மாறு பெற்றுக்கொள்ளக் கவனமாயிருங்கள்.

கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர் கடவுளைக் கொண்டிருப்பதில்லை. அவர் போதனையில் நிலைத்திருப் போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

புதன், 11 நவம்பர், 2020

November 12th : Gospel The kingdom of God is among you.A Reading from the Holy Gospel according to St.Luke 17:20-25

November 12th :  Gospel 

The kingdom of God is among you.

A Reading from the Holy Gospel according to St.Luke 17:20-25 
Asked by the Pharisees when the kingdom of God was to come, Jesus gave them this answer, ‘The coming of the kingdom of God does not admit of observation and there will be no one to say, “Look here! Look there!” For, you must know, the kingdom of God is among you.’
  He said to the disciples, ‘A time will come when you will long to see one of the days of the Son of Man and will not see it. They will say to you, “Look there!” or, “Look here!” Make no move; do not set off in pursuit; for as the lightning flashing from one part of heaven lights up the other, so will be the Son of Man when his day comes. But first he must suffer grievously and be rejected by this generation.’

The Gospel of the Lord.

November 12th : Responsorial PsalmPsalm 145(146):7-10 He is happy who is helped by Jacob’s God.orAlleluia!

November 12th :  Responsorial Psalm

Psalm 145(146):7-10 

He is happy who is helped by Jacob’s God.
or
Alleluia!
It is the Lord who keeps faith for ever,
  who is just to those who are oppressed.
It is he who gives bread to the hungry,
  the Lord, who sets prisoners free.

He is happy who is helped by Jacob’s God.
or
Alleluia!

It is the Lord who gives sight to the blind,
  who raises up those who are bowed down.
It is the Lord who loves the just,
  the Lord, who protects the stranger.

He is happy who is helped by Jacob’s God.
or
Alleluia!

The Lord upholds the widow and orphan
  but thwarts the path of the wicked.
The Lord will reign for ever,
  Zion’s God, from age to age.

He is happy who is helped by Jacob’s God.
or
Alleluia!

Gospel Acclamation 1P1:25

Alleluia, alleluia!
The word of the Lord remains for ever:
What is this word?
It is the Good News that has been brought to you.
Alleluia!

November 12th : First reading He is a slave no longer, but a dear brother in the Lord.Philemon 7-20

November 12th : First reading 

He is a slave no longer, but a dear brother in the Lord.

Philemon 7-20 
I am so delighted, and comforted, to know of your love; they tell me, brother, how you have put new heart into the saints.
  Now, although in Christ I can have no diffidence about telling you to do whatever is your duty, I am appealing to your love instead, reminding you that this is Paul writing, an old man now and, what is more, still a prisoner of Christ Jesus. I am appealing to you for a child of mine, whose father I became while wearing these chains: I mean Onesimus. He was of no use to you before, but he will be useful to you now, as he has been to me. I am sending him back to you, and with him – I could say – a part of my own self. I should have liked to keep him with me; he could have been a substitute for you, to help me while I am in the chains that the Good News has brought me. However, I did not want to do anything without your consent; it would have been forcing your act of kindness, which should be spontaneous. I know you have been deprived of Onesimus for a time, but it was only so that you could have him back for ever, not as a slave any more, but something much better than a slave, a dear brother; especially dear to me, but how much more to you, as a blood-brother as well as a brother in the Lord. So if all that we have in common means anything to you, welcome him as you would me; but if he has wronged you in any way or owes you anything, then let me pay for it. I am writing this in my own handwriting: I, Paul, shall pay it back – I will not add any mention of your own debt to me, which is yourself. Well then, brother, I am counting on you, in the Lord; put new heart into me, in Christ.

The Word of the Lord.

நவம்பர் 12 : நற்செய்தி வாசகம்இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

நவம்பர் 12 :  நற்செய்தி வாசகம்

இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25
அக்காலத்தில்

இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார்.

பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: “ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள். அவர்கள் உங்களிடம், ‘இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.