இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 24 ஜனவரி, 2022

சனவரி 25 : நற்செய்தி வாசகம்உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-18

சனவரி  25 :  நற்செய்தி வாசகம்

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-18
அக்காலத்தில்

இயேசு பதினொருவருக்கும் தோன்றிக் கூறியது: “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 25 : பதிலுரைப் பாடல்திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16:15)பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

சனவரி  25 :   பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16:15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.

1
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி

2
ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! 

நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.

சனவரி 25 : முதல் வாசகம்எழுந்து இயேசுவின் திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 3-16

சனவரி  25 :  முதல் வாசகம்

எழுந்து இயேசுவின் திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 3-16
அந்நாள்களில்

பவுல் மக்களை நோக்கிக் கூறியது: “நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்; ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்; நீங்கள் அனைவரும் இன்று கடவுள்மீது ஆர்வம் கொண்டுள்ளதுபோன்று நானும் கொண்டிருந்தேன். கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையில் அடைத்தேன்; சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன். தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன்.

நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது. நான் தரையில் விழுந்தேன். அப்போது, ‘சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?’ என்ற குரலைக் கேட்டேன். அப்போது நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன். அவர், ‘நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே’ என்றார்.

என்னோடு இருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை.

‘ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?’ என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, ‘நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கெனக் குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்’ என்றார்.

அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடு இருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள்.

அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துக் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்; அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர். அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, ‘சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்’ என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.

அப்போது அவர், ‘நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும். இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 25th : Gospel Go out to the whole world; proclaim the Good NewsA Reading from the Holy Gospel according to St. Mark 16: 15-18

January 25th :  Gospel 

Go out to the whole world; proclaim the Good News

A Reading from the Holy Gospel according to St. Mark 16: 15-18 
Jesus showed himself to the Eleven and said to them:
  ‘Go out to the whole world; proclaim the Good News to all creation. He who believes and is baptised will be saved; he who does not believe will be condemned. These are the signs that will be associated with believers: in my name they will cast out devils; they will have the gift of tongues; they will pick up snakes in their hands, and be unharmed should they drink deadly poison; they will lay their hands on the sick, who will recover.’

The Word of the Lord.

January 25th : Responsorial Psalm Psalm 116(117) Go out to the whole world; proclaim the Good News.or Alleluia!

January 25th : Responsorial Psalm 

Psalm 116(117) 

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!
O praise the Lord, all you nations,
  acclaim him all you peoples!

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!

Strong is his love for us;
  he is faithful for ever.

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!

Gospel Acclamation cf.Jn15:16

Alleluia, alleluia!
I chose you from the world
to go out and bear fruit,
fruit that will last,
says the Lord.
Alleluia!

January 25th : First Reading 'Saul, Saul, why are you persecuting me?'A Reading from the Acts of Apostles 22: 3-16

January 25th : First Reading 

'Saul, Saul, why are you persecuting me?'

A Reading from the Acts of Apostles 22: 3-16 
Paul said to the people, ‘I am a Jew and was born at Tarsus in Cilicia. I was brought up here in this city. I studied under Gamaliel and was taught the exact observance of the Law of our ancestors. In fact, I was as full of duty towards God as you are today. I even persecuted this Way to the death, and sent women as well as men to prison in chains as the high priest and the whole council of elders can testify, since they even sent me with letters to their brothers in Damascus. When I set off it was with the intention of bringing prisoners back from there to Jerusalem for punishment.
  ‘I was on that journey and nearly at Damascus when about midday a bright light from heaven suddenly shone round me. I fell to the ground and heard a voice saying, “Saul, Saul, why are you persecuting me?” I answered: Who are you, Lord? and he said to me, “I am Jesus the Nazarene, and you are persecuting me.” The people with me saw the light but did not hear his voice as he spoke to me. I said: What am I to do, Lord? The Lord answered, “Stand up and go into Damascus, and there you will be told what you have been appointed to do.” The light had been so dazzling that I was blind and my companions had to take me by the hand; and so I came to Damascus.
  ‘Someone called Ananias, a devout follower of the Law and highly thought of by all the Jews living there, came to see me; he stood beside me and said, “Brother Saul, receive your sight.” Instantly my sight came back and I was able to see him. Then he said, “The God of our ancestors has chosen you to know his will, to see the Just One and hear his own voice speaking, because you are to be his witness before all mankind, testifying to what you have seen and heard. And now why delay? It is time you were baptised and had your sins washed away while invoking his name.”’

The Word of the Lord.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சனவரி 24 : நற்செய்தி வாசகம்சாத்தானின் அழிவு.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

சனவரி 24 :  நற்செய்தி வாசகம்

சாத்தானின் அழிவு.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30
அக்காலத்தில்

எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” ‘இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 24 : பதிலுரைப் பாடல்திபா 89: 19. 20-21. 24-25 (பல்லவி: 24a)பல்லவி: என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்.

சனவரி 24 :  பதிலுரைப் பாடல்

திபா 89: 19. 20-21. 24-25 (பல்லவி: 24a)

பல்லவி: என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்.
19
முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். - பல்லவி

20
என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
21
என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். - பல்லவி

24
என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
25
அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! 

நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

சனவரி 24 : முதல் வாசகம்நீயே என் மக்கள் இஸ்ரயேலுக்கு ஆயனாக இருப்பாய்.சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-7, 10

சனவரி 24 :  முதல் வாசகம்

நீயே என் மக்கள் இஸ்ரயேலுக்கு ஆயனாக இருப்பாய்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-7, 10

அந்நாள்களில்
இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.”

இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார்.

அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்றபோது, அவர்கள் தாவீதை நோக்கி, “நீர் இங்கே வர முடியாது; பார்வையற்றவரும் முடவரும்கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள்” - அதாவது “இங்கே தாவீது வர முடியாது” என்றனர்.

இருப்பினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர். தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 24th : Gospel A kingdom divided against itself cannot standA Reading from the Holy Gospel according to St.Mark 3 : 22-30

January 24th :  Gospel 

A kingdom divided against itself cannot stand

A Reading from the Holy Gospel according to St.Mark 3 : 22-30 
The scribes who had come down from Jerusalem were saying, ‘Beelzebul is in him’ and, ‘It is through the prince of devils that he casts devils out.’ So he called them to him and spoke to them in parables, ‘How can Satan cast out Satan? If a kingdom is divided against itself, that kingdom cannot last. And if a household is divided against itself, that household can never stand. Now if Satan has rebelled against himself and is divided, he cannot stand either – it is the end of him. But no one can make his way into a strong man’s house and burgle his property unless he has tied up the strong man first. Only then can he burgle his house.
  ‘I tell you solemnly, all men’s sins will be forgiven, and all their blasphemies; but let anyone blaspheme against the Holy Spirit and he will never have forgiveness: he is guilty of an eternal sin.’ This was because they were saying, ‘An unclean spirit is in him.’

The Word of the Lord.