இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

ஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

ஏப்ரல் 23 :  நற்செய்தி வாசகம்

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15
வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.

அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றுரைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்திபா 118: 1,14-15. 16,18. 19-21 (பல்லவி: 21a)

ஏப்ரல் 23 :  பதிலுரைப் பாடல்

திபா 118: 1,14-15. 16,18. 19-21 (பல்லவி: 21a)
பல்லவி: ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
14
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
15
நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. - பல்லவி

16
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
18
கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. - பல்லவி

19
நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20
ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

ஏப்ரல் 23 : முதல் வாசகம்நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

ஏப்ரல் 23 :  முதல் வாசகம்

நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21
அந்நாள்களில்

பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். “நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள்.

அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 23rd : Gospel Go out to the whole world and proclaim the Good NewsA Reading from the Holy Gospel according to St.Mark 16: 9-15

April 23rd :  Gospel 

Go out to the whole world and proclaim the Good News

A Reading from the Holy Gospel according to St.Mark 16: 9-15 
Having risen in the morning on the first day of the week, Jesus appeared first to Mary of Magdala from whom he had cast out seven devils. She then went to those who had been his companions, and who were mourning and in tears, and told them. But they did not believe her when they heard her say that he was alive and that she had seen him.
  After this, he showed himself under another form to two of them as they were on their way into the country. These went back and told the others, who did not believe them either.
  Lastly, he showed himself to the Eleven themselves while they were at table. He reproached them for their incredulity and obstinacy, because they had refused to believe those who had seen him after he had risen. And he said to them, ‘Go out to the whole world; proclaim the Good News to all creation.’

The Word of the Lord.

April 23rd : Responsorial PsalmPsalm 117(118):1,14-21 ©I will thank you, Lord, for you have given answer.or Alleluia, alleluia, alleluia!

April 23rd :  Responsorial Psalm

Psalm 117(118):1,14-21 ©

I will thank you, Lord, for you have given answer.
or Alleluia, alleluia, alleluia!
Give thanks to the Lord for he is good,
  for his love has no end.
The Lord is my strength and my song;
  he was my saviour.
There are shouts of joy and victory
  in the tents of the just.

I will thank you, Lord, for you have given answer.
or Alleluia, alleluia, alleluia!

The Lord’s right hand has triumphed;
  his right hand raised me up.
I shall not die, I shall live
  and recount his deeds.
I was punished, I was punished by the Lord,
  but not doomed to die.

I will thank you, Lord, for you have given answer.
or Alleluia, alleluia, alleluia!

Open to me the gates of holiness:
  I will enter and give thanks.
This is the Lord’s own gate
  where the just may enter.
I will thank you for you have answered
  and you are my saviour.

I will thank you, Lord, for you have given answer.
or Alleluia, alleluia, alleluia!

Sequence 

Victimae Paschali Laudes
Christians, to the Paschal Victim
  offer sacrifice and praise.
The sheep are ransomed by the Lamb;
and Christ, the undefiled,
hath sinners to his Father reconciled.
Death with life contended:
  combat strangely ended!
Life’s own Champion, slain,
  yet lives to reign.
Tell us, Mary:
  say what thou didst see
  upon the way.
The tomb the Living did enclose;
I saw Christ’s glory as he rose!
The angels there attesting;
shroud with grave-clothes resting.
Christ, my hope, has risen:
he goes before you into Galilee.
That Christ is truly risen
  from the dead we know.
Victorious king, thy mercy show!

Gospel Acclamation Ps117:24

Alleluia, alleluia!

This day was made by the Lord:
we rejoice and are glad.
Alleluia!

April 23rd : First Reading We cannot promise to stop proclaiming what we have seen and heardA Reading from the Acts of Apostles 4: 13-21

April 23rd : First Reading 

We cannot promise to stop proclaiming what we have seen and heard

A Reading from the Acts of Apostles 4: 13-21 
The rulers, elders and scribes were astonished at the assurance shown by Peter and John, considering they were uneducated laymen; and they recognised them as associates of Jesus; but when they saw the man who had been cured standing by their side, they could find no answer. So they ordered them to stand outside while the Sanhedrin had a private discussion. ‘What are we going to do with these men?’ they asked. ‘It is obvious to everybody in Jerusalem that a miracle has been worked through them in public, and we cannot deny it. But to stop the whole thing spreading any further among the people, let us caution them never to speak to anyone in this name again.’
  So they called them in and gave them a warning on no account to make statements or to teach in the name of Jesus. But Peter and John retorted, ‘You must judge whether in God’s eyes it is right to listen to you and not to God. We cannot promise to stop proclaiming what we have seen and heard.’ The court repeated the warnings and then released them; they could not think of any way to punish them, since all the people were giving glory to God for what had happened.

The Word of the Lord.

வியாழன், 21 ஏப்ரல், 2022

ஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்இயேசு சீடர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

ஏப்ரல் 22  :  நற்செய்தி வாசகம்

இயேசு சீடர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14
அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள் “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல்திபா 118: 1-2,4. 22-24. 25-27a (பல்லவி: 22)பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

ஏப்ரல் 22  :  பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2,4. 22-24. 25-27a (பல்லவி: 22)

பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
4
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. - பல்லவி

22
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி

25
ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!
26
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27a
ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24
அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

ஏப்ரல் 22 : முதல் வாசகம்இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12

ஏப்ரல் 22  :  முதல் வாசகம்

இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12
அந்நாள்களில்

பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்; அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின்மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சல் அடைந்து, அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கெனவே மாலையாகி விட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.

மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்றுகூடினார்கள். அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, ‘‘நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?” என்று வினவினார்கள்.

அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: ‘‘மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, ‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 22nd : Gospel Jesus stepped forward, took the bread and gave it to them, and the same with the fishA Reading from the Holy Gospel according to St.John 21: 1-14

April 22nd :  Gospel 

Jesus stepped forward, took the bread and gave it to them, and the same with the fish

A Reading from the Holy Gospel according to St.John 21: 1-14 
Jesus showed himself again to the disciples. It was by the Sea of Tiberias, and it happened like this: Simon Peter, Thomas called the Twin, Nathanael from Cana in Galilee, the sons of Zebedee and two more of his disciples were together. Simon Peter said, ‘I’m going fishing.’ They replied, ‘We’ll come with you.’ They went out and got into the boat but caught nothing that night.
  It was light by now and there stood Jesus on the shore, though the disciples did not realise that it was Jesus. Jesus called out, ‘Have you caught anything, friends?’ And when they answered, ‘No’, he said, ‘Throw the net out to starboard and you’ll find something.’ So they dropped the net, and there were so many fish that they could not haul it in. The disciple Jesus loved said to Peter, ‘It is the Lord.’ At these words ‘It is the Lord’, Simon Peter, who had practically nothing on, wrapped his cloak round him and jumped into the water. The other disciples came on in the boat, towing the net and the fish; they were only about a hundred yards from land.
  As soon as they came ashore they saw that there was some bread there, and a charcoal fire with fish cooking on it. Jesus said, ‘Bring some of the fish you have just caught.’ Simon Peter went aboard and dragged the net to the shore, full of big fish, one hundred and fifty-three of them; and in spite of there being so many the net was not broken. Jesus said to them, ‘Come and have breakfast.’ None of the disciples was bold enough to ask, ‘Who are you?’; they knew quite well it was the Lord. Jesus then stepped forward, took the bread and gave it to them, and the same with the fish. This was the third time that Jesus showed himself to the disciples after rising from the dead.

The Word of the Lord.