இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 22 பிப்ரவரி, 2024

பிப்ரவரி 23 : முதல் வாசகம்தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்?இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28

பிப்ரவரி 23 :  முதல் வாசகம்

தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்?

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28
ஆண்டவர் கூறுவது:

தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார். அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்பட மாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத்தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானது எதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும் செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர். ஆயினும், ‘தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ நேர்மையற்றவை!

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக்கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 23rd : Gospel Anyone who is angry with his brother will answer for itA reading from the Holy Gospel according to St.Matthew 5:20-26

February 23rd :  Gospel 

Anyone who is angry with his brother will answer for it

A reading from the Holy Gospel according to St.Matthew 5:20-26 
Jesus said to his disciples: ‘If your virtue goes no deeper than that of the scribes and Pharisees, you will never get into the kingdom of heaven.
  ‘You have learnt how it was said to our ancestors: You must not kill; and if anyone does kill he must answer for it before the court. But I say this to you: anyone who is angry with his brother will answer for it before the court; if a man calls his brother “Fool” he will answer for it before the Sanhedrin; and if a man calls him “Renegade” he will answer for it in hell fire. So then, if you are bringing your offering to the altar and there remember that your brother has something against you, leave your offering there before the altar, go and be reconciled with your brother first, and then come back and present your offering. Come to terms with your opponent in good time while you are still on the way to the court with him, or he may hand you over to the judge and the judge to the officer, and you will be thrown into prison. I tell you solemnly, you will not get out till you have paid the last penny.’

The Word of the Lord.

February 23rd : Responsorial Psalm Psalm 129(130) If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

February 23rd :  Responsorial Psalm 

Psalm 129(130) 

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?
Out of the depths I cry to you, O Lord,
  Lord, hear my voice!
O let your ears be attentive
  to the voice of my pleading.

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

If you, O Lord, should mark our guilt,
  Lord, who would survive?
But with you is found forgiveness:
  for this we revere you.

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

My soul is waiting for the Lord.
  I count on his word.
My soul is longing for the Lord
  more than watchman for daybreak.
(Let the watchman count on daybreak
  and Israel on the Lord.)

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

Because with the Lord there is mercy
  and fullness of redemption,
Israel indeed he will redeem
  from all its iniquity.

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

Gospel Acclamation cf.Amos5:14

Praise to you, O Christ, king of eternal glory!
Seek good and not evil so that you may live,
and that the Lord God of hosts may really be with you.
Praise to you, O Christ, king of eternal glory!

February 23rd : First reading I prefer to see the wicked man renounce his wickedness and live.A reading from the book of Ezekiel 18:21-28

February 23rd :  First reading 

I prefer to see the wicked man renounce his wickedness and live.

A reading from the book of Ezekiel 18:21-28
Thus says the Lord:
  ‘If the wicked man renounces all the sins he has committed, respects my laws and is law-abiding and honest, he will certainly live; he will not die. All the sins he committed will be forgotten from then on; he shall live because of the integrity he has practised. What! Am I likely to take pleasure in the death of a wicked man – it is the Lord who speaks – and not prefer to see him renounce his wickedness and live?
  ‘But if the upright man renounces his integrity, commits sin, copies the wicked man and practises every kind of filth, is he to live? All the integrity he has practised shall be forgotten from then on; but this is because he himself has broken faith and committed sin, and for this he shall die. But you object, “What the Lord does is unjust.” Listen, you House of Israel: is what I do unjust? Is it not what you do that is unjust? When the upright man renounces his integrity to commit sin and dies because of this, he dies because of the evil that he himself has committed. When the sinner renounces sin to become law-abiding and honest, he deserves to live. He has chosen to renounce all his previous sins; he shall certainly live; he shall not die.’

The Word of the Lord.

புதன், 21 பிப்ரவரி, 2024

பிப்ரவரி 22 : நற்செய்தி வாசகம்உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

பிப்ரவரி 22 :  நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

பிப்ரவரி 22 : பதிலுரைப் பாடல்திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

பிப்ரவரி 22 :  பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். - பல்லவி

4
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 16: 18
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா, என்கிறார் ஆண்டவர்.

பிப்ரவரி 22 : திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழாமுதல் வாசகம்நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4

பிப்ரவரி 22 :  திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா

முதல் வாசகம்

நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4
அன்புக்குரியவர்களே,

கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 22nd : Gospel You are Peter and on this rock I will build my ChurchA reading from the Holy Gospel according to St.Matthew 16:13-19

February 22nd :  Gospel 

You are Peter and on this rock I will build my Church

A reading from the Holy Gospel according to St.Matthew 16:13-19
When Jesus came to the region of Caesarea Philippi he put this question to his disciples, ‘Who do people say the Son of Man is?’ And they said, ‘Some say he is John the Baptist, some Elijah, and others Jeremiah or one of the prophets.’ ‘But you,’ he said ‘who do you say I am?’ Then Simon Peter spoke up, ‘You are the Christ,’ he said ‘the Son of the living God.’ Jesus replied, ‘Simon son of Jonah, you are a happy man! Because it was not flesh and blood that revealed this to you but my Father in heaven. So I now say to you: You are Peter and on this rock I will build my Church. And the gates of the underworld can never hold out against it. I will give you the keys of the kingdom of heaven: whatever you bind on earth shall be considered bound in heaven; whatever you loose on earth shall be considered loosed in heaven.’

The Word of the Lord.

February 22nd : Responsorial Psalm Psalm 22(23) The Lord is my shepherd: there is nothing I shall want.

February 22nd :  Responsorial Psalm 

Psalm 22(23) 

The Lord is my shepherd: there is nothing I shall want.
The Lord is my shepherd;
  there is nothing I shall want.
Fresh and green are the pastures
  where he gives me repose.
Near restful waters he leads me,
  to revive my drooping spirit.

The Lord is my shepherd: there is nothing I shall want.

He guides me along the right path;
  he is true to his name.
If I should walk in the valley of darkness
  no evil would I fear.
You are there with your crook and your staff;
  with these you give me comfort.

The Lord is my shepherd: there is nothing I shall want.

You have prepared a banquet for me
  in the sight of my foes.
My head you have anointed with oil;
  my cup is overflowing.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Surely goodness and kindness shall follow me
  all the days of my life.
In the Lord’s own house shall I dwell
  for ever and ever.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Gospel Acclamation Mt16:18

Glory and praise to you, O Christ!
You are Peter,
and on this rock I will build my Church.
And the gates of the underworld can never hold out against it.
Glory and praise to you, O Christ!

February 22nd : First reading Watch over the flock, not simply as a duty but gladly1 Peter 5:1-4

February 22nd :  First reading  

Watch over the flock, not simply as a duty but gladly

1 Peter 5:1-4
Now I have something to tell your elders: I am an elder myself, and a witness to the sufferings of Christ, and with you I have a share in the glory that is to be revealed. Be the shepherds of the flock of God that is entrusted to you: watch over it, not simply as a duty but gladly, because God wants it; not for sordid money, but because you are eager to do it. Never be a dictator over any group that is put in your charge, but be an example that the whole flock can follow. When the chief shepherd appears, you will be given the crown of unfading glory.

The Word of the Lord.