இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 4 ஜூன், 2026

ஜூன் 5 : நற்செய்தி வாசகம் மெசியா தாவீதின் மகன். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-37

 ஜூன் 5 : நற்செய்தி வாசகம்

மெசியா தாவீதின் மகன்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-37

அக்காலத்தில்
இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, “மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ‘ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று உரைத்தார்’ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?” என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 5 : பதிலுரைப் பாடல் திபா 119: 157-160. 161,165. 166,168 . (பல்லவி: 165a) பல்லவி: உம் திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு நல்வாழ்வு உண்டு.

 ஜூன் 5 : பதிலுரைப் பாடல்

திபா 119: 157-160. 161,165. 166,168 . (பல்லவி: 165a)

பல்லவி: உம் திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு நல்வாழ்வு உண்டு.
157.என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்; ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை.
160.உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்; நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன. - பல்லவி
161.தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்; ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது.
165.உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. - பல்லவி
166.ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்; உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன்.
168.உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப் பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை. - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா

ஜூன் 5 : முதல் வாசகம் கிறிஸ்துவில் வாழவிரும்புவோர் இன்னலுறுவர். திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 10-17

 ஜூன் 5 : முதல் வாசகம்

கிறிஸ்துவில் வாழவிரும்புவோர் இன்னலுறுவர்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 10-17

அன்புக்குரியவரே, என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மன உறுதி ஆகியவற்றைப் பின்பற்றி வந்திருக்கிறாய். அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார். கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். ஆனால் தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள்.
நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு

June 5th : Gospel 'David himself calls him Lord'. A Reading from the Holy Gospel according to St.Mark 12:35-37.

 June 5th : Gospel

'David himself calls him Lord'.
A Reading from the Holy Gospel according to St.Mark 12:35-37.
At that time: As Jesus taught in the temple, he said, “How can the scribes say that the Christ is the son of David? David himself, in the Holy Spirit, declared, ‘The Lord said to my Lord, Sit at my right hand, until I put your enemies under your feet.’ David himself calls him Lord. So how is he his son?” And the great throng heard him gladly.
The Gospel of the Lord.

June 5th : Responsorial Psalm Psalm 119:157, 160, 161, 165, 166, 168 (R. 165a)

 June 5th : Responsorial Psalm

Psalm 119:157, 160, 161, 165, 166, 168 (R. 165a)
Response : The lovers of your law have great peace, Lord.
Though my foes and oppressors are countless, I have not swerved from your decrees.
R.: The lovers of your law have great peace, Lord.
Truth is the sum of your word; all your just judgments are eternal.
R.: The lovers of your law have great peace, Lord.
Though princes oppress me without cause, my heart reveres your word.
R.: The lovers of your law have great peace, Lord.
The lovers of your law have great peace; no stumbling block for them.
R.: The lovers of your law have great peace, Lord.
I await your salvation, O Lord; I fulfil your commands.
R.: The lovers of your law have great peace, Lord.
I obey your precepts and decrees; all my ways are before you.
R.: The lovers of your law have great peace, Lord.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. If anyone loves me, he will keep my word, says the Lord; and my Father will love him, and we will come to him.
R. Alleluia.

June 5th : First Reading Anyone who tries to live in devotion to Christ will be attacked. A Reading from the Second Letter of St.Paul to Timothy 3:10-17.

 June 5th : First Reading

Anyone who tries to live in devotion to Christ will be attacked.
A Reading from the Second Letter of St.Paul to Timothy 3:10-17.
Beloved: You have followed my teaching, my conduct, my aim in life, my faith, my patience, my love, my steadfastness, my persecutions and sufferings that happened to me at Antioch, at Iconium, and at Lystra— which persecutions I endured; yet from them all the Lord rescued me. Indeed, all who desire to live a godly life in Christ Jesus will be persecuted, while evil people and impostors will go on from bad to worse, deceiving and being deceived. But as for you, continue in what you have learned and have firmly believed, knowing from whom you learned it and how from childhood you have been acquainted with the sacred writings, which are able to make you wise for salvation through faith in Christ Jesus. All Scripture is breathed out by God and profitable for teaching, for reproof, for correction, and for training in righteousness, that the man of God may be complete, equipped for every good work.
The Word of the Lord

புதன், 3 ஜூன், 2026

June 4th : Gospel 'You are not far from the kingdom of God' A Reading from the Holy Gospel according to St.Mark 12: 28b-34

 June 4th : Gospel

'You are not far from the kingdom of God'
A Reading from the Holy Gospel according to St.Mark 12: 28b-34
At that time: One of the scribes came up and asked Jesus, “Which commandment is the most important of all?” Jesus answered, “The most important is, ‘Hear, O Israel: The Lord our God, the Lord is one. And you shall love the Lord your God with all your heart and with all your soul and with all your mind and with all your strength. The second is this: ‘You shall love your neighbour as yourself.’ There is no other commandment greater than these.” And the scribe said to him, “You are right, Teacher. You have truly said that he is one, and there is no other besides him. And to love him with all the heart and with all the understanding and with all the strength, and to love one’s neighbour as oneself, is much more than all whole burnt offerings and sacrifices.” And when Jesus saw that he answered wisely, he said to him, “You are not far from the kingdom of God.” And after that no one dared to ask him any more questions.
The Gospel of the Lord

June 4th : Responsorial Psalm Psalm 25:4–5ab, 8–9, 10 and 14 (R.4a) Response : O Lord, make me know your ways.

 June 4th : Responsorial Psalm

Psalm 25:4–5ab, 8–9, 10 and 14 (R.4a)
Response : O Lord, make me know your ways.
O Lord, make me know your ways. Teach me your paths. Guide me in your truth, and teach me; for you are the God of my salvation.
R.: O Lord, make me know your ways.
Good and upright is the Lord; he shows the way to sinners. He guides the humble in right judgment; to the humble he teaches his way.
R.: O Lord, make me know your ways.
All the Lord’s paths are mercy and faithfulness, for those who keep his covenant and commands. The Lord’s secret is for those who fear him; to them he reveals his covenant.
R.: O Lord, make me know your ways.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. Our Saviour Christ Jesus abolished death and brought life and immortality to light through the gospel.
R. Alleluia

June 4th : First Reading If we have died with Christ then we shall live with Christ A Reading from the Second Letter of St.Paul to Timothy 2: 8-15

 June 4th : First Reading

If we have died with Christ then we shall live with Christ
A Reading from the Second Letter of St.Paul to Timothy 2: 8-15
Beloved: Remember Jesus Christ, risen from the dead, the offspring of David, as preached in my gospel, for which I am suffering, bound with chains as a criminal. But the word of God is not bound! Therefore I endure everything for the sake of the elect, that they also may obtain the salvation that is in Christ Jesus with eternal glory. The saying is trustworthy, for: If we have died with him, we will also live with him; if we endure, we will also reign with him; if we deny him, he also will deny us; if we are faithless, he remains faithful—for he cannot deny himself. Remind them of these things, and charge them before God not to quarrel about words, which does no good, but only ruins the hearers. Do your best to present yourself to God as one approved, a worker who has no need to be ashamed, rightly handling the word of truth.
The Word of the Lord.

ஜூன் 4 : நற்செய்தி வாசகம் நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

 ஜூன் 4 : நற்செய்தி வாசகம்

நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

அக்காலத்தில்
மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது” என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.