பிப்ரவரி 6 : பதிலுரைப் பாடல்
திபா 18: 31. 47,50. 51 (பல்லவி: 46உ)
பல்லவி: என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!
30. இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார். -
பல்லவி
46. ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! -
பல்லவி
49. ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன். -
பல்லவி
50. தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. -
பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (லூக் 8: 15)
அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக