இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

September 5th : Gospel A Reading from the Holy Gospel according to St.Luke 6: 1–5 On a sabbath, while Jesus was going through the cornfields, his disciples plucked and ate some ears of corn, rubbing them in their hands. But some of the Pharisees said, “Why are you doing what is not lawful to do on the Sabbath?” And Jesus answered them, “Have you not read what David did when he was hungry, he and those who were with him: how he entered the house of God and took and ate the bread of the Presence, which is not lawful for any but the priests to eat, and also gave it to those with him?” And he said to them, “The Son of Man is lord of the Sabbath.” The Gospel of the Lord

 September 5th : Gospel

A Reading from the Holy Gospel according to St.Luke 6: 1–5
On a sabbath, while Jesus was going through the cornfields, his disciples plucked and ate some ears of corn, rubbing them in their hands. But some of the Pharisees said, “Why are you doing what is not lawful to do on the Sabbath?” And Jesus answered them, “Have you not read what David did when he was hungry, he and those who were with him: how he entered the house of God and took and ate the bread of the Presence, which is not lawful for any but the priests to eat, and also gave it to those with him?” And he said to them, “The Son of Man is lord of the Sabbath.”
The Gospel of the Lord

September 5th : Responsorial Psalm Psalm 145:17–18, 19–20, 21 (R. 18a) Response : The Lord is close to all who call him.

 September 5th : Responsorial Psalm

Psalm 145:17–18, 19–20, 21 (R. 18a)
Response : The Lord is close to all who call him.
The Lord is just in all his ways, and holy in all his deeds. The Lord is close to all who call him, who call on him in truth.
R.: The Lord is close to all who call him.
He fulfils the desires of those who fear him; he hears their cry and he saves them. The Lord keeps watch over all who love him; the wicked he will utterly destroy.
R.: The Lord is close to all who call him.
Let my mouth speak the praise of the Lord; let all flesh bless his holy name forever, for ages unending.
R.: The Lord is close to all who call him.
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. I am the way, and the truth, and the life, says the Lord; no one comes to the Father except through me.
R. Alleluia.

September 5th : First Reading A Reading from the first letter of St.Paul to the Corinthians 4: 6b–15

 September 5th : First Reading

A Reading from the first letter of St.Paul to the Corinthians 4: 6b–15
Brethren: You may learn by me and Apollos not to go beyond what is written, that none of you may be puffed up in favour of one against another. For who sees anything different in you? What do you have that you did not receive? If then you received it, why do you boast as if you did not receive it? Already you have all you want! Already you have become rich! Without us you have become kings! And would that you did reign, so that we might share the rule with you! For I think that God has exhibited us apostles as last of all, like men sentenced to death, because we have become a spectacle to the world, to angels, and to men. We are fools for Christ’s sake, but you are wise in Christ. We are weak, but you are strong. You are held in honour, but we in disrepute. To the present hour we hunger and thirst, we are poorly dressed and buffeted and homeless, and we labour, working with our own hands. When reviled, we bless; when persecuted, we endure; when slandered, we entreat. We have become, and are still, like the scum of the world, the refuse of all things. I do not write these things to make you ashamed, but to admonish you as my beloved children. For though you have countless guides in Christ, you do not have many fathers. For I became your father in Christ Jesus through the gospel.
The Word of the Lord.

செப்டம்பர் 5 : நற்செய்தி வாசகம் ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்? ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

 செப்டம்பர் 5 : நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், “ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு மறுமொழியாக, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்று கூறினார். மேலும் அவர்களிடம், “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 5 : பதிலுரைப் பாடல் திபா 145: 17-18. 19-20. 21 (பல்லவி: 18) பல்லவி: மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.

 செப்டம்பர் 5 : பதிலுரைப் பாடல்

திபா 145: 17-18. 19-20. 21 (பல்லவி: 18)

பல்லவி: மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி
19
அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.
20
ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். - பல்லவி
21
என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 6
அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா

செப்டம்பர் 5 : முதல் வாசகம் பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-15

 செப்டம்பர் 5 : முதல் வாசகம்

பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-15

சகோதரர் சகோதரிகளே,
உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில், “எழுதியுள்ளதற்கு மேல் போகாதே” என்பதன் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவைதானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக் கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.
கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள் போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.
நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள். இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம். எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும்போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம். அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போல் ஆனோம். இதுவரை அனைத்திலும் கழிவுப் பொருட்கள் எனக் கருதப்பட்டுவருகிறோம்.
உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை; நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன். கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.