இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

புதன், 7 அக்டோபர், 2020

October 8th : First Reading You received the Spirit because you believed what was preached.A Reading from the Letter of St.Paul to the Galatians 3:1-5

October 8th : First Reading 

You received the Spirit because you believed what was preached.

A Reading from the Letter of St.Paul to the Galatians 3:1-5 
Are you people in Galatia mad? Has someone put a spell on you, in spite of the plain explanation you have had of the crucifixion of Jesus Christ? Let me ask you one question: was it because you practised the Law that you received the Spirit, or because you believed what was preached to you? Are you foolish enough to end in outward observances what you began in the Spirit? Have all the favours you received been wasted? And if this were so, they would most certainly have been wasted. Does God give you the Spirit so freely and work miracles among you because you practise Law, or because you believed what was preached to you?

The Word of the Lord.

அக்டோபர் 8 : நற்செய்தி வாசகம்கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13

அக்டோபர் 8 : நற்செய்தி வாசகம்

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13

அக்காலத்தில்
இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார்.

எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 8 : பதிலுரைப் பாடல்லூக் 1: 69-70. 71-73. 74-75 . (பல்லவி: 68)பல்லவி: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.

அக்டோபர் 8 :  பதிலுரைப் பாடல்

லூக் 1: 69-70. 71-73. 74-75 . (பல்லவி: 68)

பல்லவி: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
69-70.தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். - பல்லவி

71.நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
72-73.அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவுகூர்ந்தார். - பல்லவி

74-75.இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திப 16: 14b

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.

அக்டோபர் 8 : முதல் வாசகம்நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5

அக்டோபர் 8 : முதல் வாசகம்

நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5
அறிவிலிகளான கலாத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா? உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்: நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா? தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனித முயற்சியால் நிறைவு செய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? வீணாகத்தான் முடியுமா? உங்களுக்குத் தூய ஆவியை அளித்து உங்களிடையே வல்ல செயல்களை ஆற்றுபவர் எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்? நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்தி வாசக மறையுரை(அக்டோபர் 08)பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் வியாழக்கிழமை

செவ்வாய், 6 அக்டோபர், 2020

October 7th : Gospel How to prayA Reading from the Holy Gospel according to St.Luke 11:1-4

October 7th : Gospel 

How to pray

A Reading from the Holy Gospel according to St.Luke 11:1-4 
Once Jesus was in a certain place praying, and when he had finished, one of his disciples said, ‘Lord, teach us to pray, just as John taught his disciples.’
  He said to them, ‘Say this when you pray:
‘“Father, may your name be held holy,
your kingdom come;
give us each day our daily bread,
and forgive us our sins,
for we ourselves forgive each one who is in debt to us.
And do not put us to the test.”’

The Gospel of the Lord.

October 7th : Responsorial Psalm Psalm 116(117) Go out to the whole world and proclaim the Good News.

October 7th : Responsorial Psalm 

Psalm 116(117) 

Go out to the whole world and proclaim the Good News.
O praise the Lord, all you nations,
  acclaim him all you peoples!

Go out to the whole world and proclaim the Good News.

Strong is his love for us;
  he is faithful for ever.

Go out to the whole world and proclaim the Good News.

Gospel Acclamation Ps118:24

Alleluia, alleluia!
Train me, Lord, to observe your law,
to keep it with my heart.
Alleluia!

October 7th : First ReadingThey recognised the grace that God had given me.A Reading from the Letter of St.Paul to the Galatians 2:1-2,7-14.

October 7th : First Reading

They recognised the grace that God had given me.

A Reading from the Letter of St.Paul to the Galatians 2:1-2,7-14. 

It was not till fourteen years had passed that I went up to Jerusalem again. I went with Barnabas and took Titus with me. I went there as the result of a revelation, and privately I laid before the leading men the Good News as I proclaim it among the pagans; I did so for fear the course I was adopting or had already adopted would not be allowed. On the contrary, they recognised that I had been commissioned to preach the Good News to the uncircumcised just as Peter had been commissioned to preach it to the circumcised. The same person whose action had made Peter the apostle of the circumcised had given me a similar mission to the pagans. So, James, Cephas and John, these leaders, these pillars, shook hands with Barnabas and me as a sign of partnership: we were to go to the pagans and they to the circumcised. The only thing they insisted on was that we should remember to help the poor, as indeed I was anxious to do.
  When Cephas came to Antioch, however, I opposed him to his face, since he was manifestly in the wrong. His custom had been to eat with the pagans, but after certain friends of James arrived he stopped doing this and kept away from them altogether for fear of the group that insisted on circumcision. The other Jews joined him in this pretence, and even Barnabas felt himself obliged to copy their behaviour.
  When I saw they were not respecting the true meaning of the Good News, I said to Cephas in front of everyone, ‘In spite of being a Jew, you live like the pagans and not like the Jews, so you have no right to make the pagans copy Jewish ways.’

The Word of the Lord.

அக்டோபர் 7 : நற்செய்தி வாசகம்ஆண்டவரே, எங்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடும்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4

அக்டோபர் 7 :  நற்செய்தி வாசகம்

ஆண்டவரே, எங்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4
அக்காலத்தில்

இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.

அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்” என்று கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 7 : பதிலுரைப் பாடல்திபா 117: 1. 2 . (பல்லவி: மாற்கு 16: 15)பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

அக்டோபர் 7 :  பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2 . (பல்லவி: மாற்கு 16: 15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
1.பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி

2.ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

உரோ 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா