இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 30 அக்டோபர், 2020

October 31st : First ReadingLife to me is Christ; but death would bring me moreA Reading from the Letter of St.Paul to the Philippians 1:18-26.

October 31st : First Reading

Life to me is Christ; but death would bring me more

A Reading from the Letter of St.Paul to the Philippians 1:18-26. 
Christ is proclaimed; and that makes me happy; and I shall continue being happy, because I know this will help to save me, thanks to your prayers and to the help which will be given to me by the Spirit of Jesus. My one hope and trust is that I shall never have to admit defeat, but that now as always I shall have the courage for Christ to be glorified in my body, whether by my life or by my death. Life to me, of course, is Christ, but then death would bring me something more; but then again, if living in this body means doing work which is having good results – I do not know what I should choose. I am caught in this dilemma: I want to be gone and be with Christ, which would be very much the better, but for me to stay alive in this body is a more urgent need for your sake. This weighs with me so much that I feel sure I shall survive and stay with you all, and help you to progress in the faith and even increase your joy in it; and so you will have another reason to give praise to Christ Jesus on my account when I am with you again.

The Word of the Lord.

அக்டோபர் 31 : நற்செய்தி வாசகம்தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1, 7-11

அக்டோபர் 31 : நற்செய்தி வாசகம்

தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1, 7-11
அக்காலத்தில்

ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:

“ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.

தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 31 : பதிலுரைப் பாடல்திபா 42: 1. 2. 4ab . (பல்லவி: 2a)பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது

அக்டோபர் 31 : பதிலுரைப் பாடல்

திபா 42: 1. 2. 4ab . (பல்லவி: 2a)

பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.
1.கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. - பல்லவி

2.என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகின்றேன்? - பல்லவி

4ab.மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 29ab

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

அக்டோபர் 31 : முதல் வாசகம்நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18b-26

அக்டோபர் 31 :  முதல் வாசகம்

நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18b-26
சகோதரர் சகோதரிகளே,

எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு உங்கள் மன்றாட்டும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையும் என் விடுதலைக்கு வழி வகுக்கும் என நான் அறிவேன். என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு.

ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம்: இதுவே மிகச் சிறந்தது: ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம்: இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது.

நான் உங்களோடு இருப்பதால் நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். எனவே உங்கள் அனைவரோடும் தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால், கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 31 பொதுக்காலம் முப்பதாம் வாரம் சனிக்கிழமை

வியாழன், 29 அக்டோபர், 2020

October 30th : Gospel 'Is it against the law to cure a man on the sabbath?'A Reading from the Holy Gospel according to St.Luke 14:1-6

October 30th :  Gospel 

'Is it against the law to cure a man on the sabbath?'

A Reading from the Holy Gospel according to St.Luke 14:1-6 
Now on a sabbath day Jesus had gone for a meal to the house of one of the leading Pharisees; and they watched him closely. There in front of him was a man with dropsy, and Jesus addressed the lawyers and Pharisees. ‘Is it against the law’ he asked ‘to cure a man on the sabbath, or not?’ But they remained silent, so he took the man and cured him and sent him away. Then he said to them, ‘Which of you here, if his son falls into a well, or his ox, will not pull him out on a sabbath day without hesitation?’ And to this they could find no answer.

The Gospel of the Lord.

October 30th : Responsorial PsalmPsalm 110(111):1-6 Great are the works of the Lord.orAlleluia!

October 30th : Responsorial Psalm

Psalm 110(111):1-6 

Great are the works of the Lord.
or
Alleluia!
I will thank the Lord with all my heart
  in the meeting of the just and their assembly.

Great are the works of the Lord,
  to be pondered by all who love them.

Great are the works of the Lord.
or
Alleluia!

Majestic and glorious his work,
  his justice stands firm for ever.
He makes us remember his wonders.
  The Lord is compassion and love.

Great are the works of the Lord.
or
Alleluia!

He gives food to those who fear him;
  keeps his covenant ever in mind.
He has shown his might to his people
  by giving them the lands of the nations.

Great are the works of the Lord.
or
Alleluia!

Gospel Acclamation cf.1Th2:13

Alleluia, alleluia!
Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

October 30th : First ReadingGreeting and thanksgiving.A Reading from the Letter of St.Paul to the Philippians 1:1-11.

October 30th :  First Reading

Greeting and thanksgiving.

A Reading from the Letter of St.Paul to the Philippians 1:1-11.
From Paul and Timothy, servants of Christ Jesus, to all the saints in Christ Jesus, together with their presiding elders and deacons. We wish you the grace and peace of God our Father and of the Lord Jesus Christ.
  I thank my God whenever I think of you; and every time I pray for all of you, I pray with joy, remembering how you have helped to spread the Good News from the day you first heard it right up to the present. I am quite certain that the One who began this good work in you will see that it is finished when the Day of Christ Jesus comes. It is only natural that I should feel like this towards you all, since you have shared the privileges which have been mine: both my chains and my work defending and establishing the gospel. You have a permanent place in my heart, and God knows how much I miss you all, loving you as Christ Jesus loves you. My prayer is that your love for each other may increase more and more and never stop improving your knowledge and deepening your perception so that you can always recognise what is best. This will help you to become pure and blameless, and prepare you for the Day of Christ, when you will reach the perfect goodness which Jesus Christ produces in us for the glory and praise of God.

The Word of the Lord.

அக்டோபர் 30 : நற்செய்தி வாசகம்தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்டோபர் 30 :  நற்செய்தி வாசகம்

தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில்
ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.

இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

பிறகு அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 30 : பதிலுரைப் பாடல்திபா 111: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 2a)பல்லவி: ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.

அக்டோபர் 30 :  பதிலுரைப் பாடல்

திபா 111: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.

அல்லது: அல்லேலூயா.
1.நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2.ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். - பல்லவி

3.அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.
அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். - பல்லவி

5.அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;
6.வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.