இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 4 ஜனவரி, 2021

நற்செய்தி வாசகம் இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார். + மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44

நற்செய்தி வாசகம் 

இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார். 

+ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44 
அக்காலத்தில் இயேசு படகிலிருந்து கலிலேயா கடற்கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இதற்குள் நெடு நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்'' என்றனர். அவர் அவர்களிடம், நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்'' என்று பதிலளித்தார். அவர்கள், நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?'' என்று கேட்டார்கள். அப்பொழுது அவர், உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்'' என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன'' என்றார்கள். அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பதிலுரைப் பாடல் பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள். திபா 72: 1-2. 3-4. 7-8

பதிலுரைப் பாடல் 

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள். 

திபா 72: 1-2. 3-4. 7-8 
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! -பல்லவி 

மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்;
குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக!
ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. -பல்லவி 

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக;
நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்;
பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். -பல்லவி 

____ 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்.'' அல்லேலூயா. 

______

05/01/2021, திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய் முதல் வாசகம் கடவுள் அன்பாய் இருக்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10

🌿05/01/2021, திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய் 

முதல் வாசகம் 

கடவுள் அன்பாய் இருக்கிறார். 

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10 
அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். 

நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

GOSPEL* The kingdom of heaven is at hand. A Reading from the Holy Gospel according to Matthew 4:12-17, 23-25

*📖GOSPEL* 

The kingdom of heaven is at hand. 

A Reading from the Holy Gospel according to Matthew 4:12-17, 23-25 
Hearing that John had been arrested he withdrew to Galilee,
and leaving Nazara he went and settled in Capernaum, beside the lake, on the borders of Zebulun and Naphtali.
This was to fulfil what was spoken by the prophet Isaiah:
Land of Zebulun! Land of Naphtali! Way of the sea beyond Jordan. Galilee of the nations!
The people that lived in darkness have seen a great light; on those who lived in a country of shadow dark as death a light has dawned.
From then onwards Jesus began his proclamation with the message, 'Repent, for the kingdom of Heaven is close at hand.'
He went round the whole of Galilee teaching in their synagogues, proclaiming the good news of the kingdom and curing all kinds of disease and illness among the people.
His fame spread throughout Syria, and those who were suffering from diseases and painful complaints of one kind or another, the possessed, epileptics, the paralysed, were all brought to him, and he cured them.
Large crowds followed him, coming from Galilee, the Decapolis, Jerusalem, Judaea and Transjordan. 

*The Gospel of the Lord* 

I believe in God, /....

RESPONSORIAL* Respons : I will make other countries your property. Psalms 2:7bc-8, 10-12a

*🍁RESPONSORIAL* 

Respons :  I will make other countries your property. 

Psalms 2:7bc-8, 10-12a 
7 I will proclaim the decree of Yahweh: He said to me, 'You are my son, today have I fathered you. 

8 Ask of me, and I shall give you the nations as your birthright, the whole wide world as your possession. 

10 So now, you kings, come to your senses, you earthly rulers, learn your lesson! 

11 In fear be submissive to Yahweh; 

12 with trembling kiss his feet, lest he be angry and your way come to nothing, for his fury flares up in a moment. How blessed are all who take refuge in him! 

___ 

*🌿Gospel Acclamation* 

```Alleluia, alleluia! Jesus preached the gospel of the kingdom of heaven; He healed all the sick seconds that were among the people. Alleluia!```

Daily Reading for Monday January 4, 2021 *FIRST READING* Test whether the impulse comes from God. A Reading from the Book of 1 John 3:2~4:6

🌿Daily Reading for Monday January 4, 2021 

*FIRST READING* 

Test whether the impulse comes from God. 

A Reading from the Book of 1 John 3:2~4:6 
and whatever we ask we shall receive from him, because we keep his commandments and do what is acceptable to him.
His commandment is this, that we should believe in the name of his Son Jesus Christ and that we should love one another as he commanded us.
Whoever keeps his commandments remains in God, and God in him. And this is the proof that he remains in us: the Spirit that he has given us.
My dear friends, not every spirit is to be trusted, but test the spirits to see whether they are from God, for many false prophets are at large in the world.
This is the proof of the spirit of God: any spirit which acknowledges Jesus Christ, come in human nature, is from God,
and no spirit which fails to acknowledge Jesus is from God; it is the spirit of Antichrist, whose coming you have heard of; he is already at large in the world.
Children, you are from God and have overcome them, because he who is in you is greater than he who is in the world.
They are from the world, and therefore the world inspires what they say, and listens to them.
We are from God; whoever recognises God listens to us; anyone who is not from God refuses to listen to us. This is how we can distinguish the spirit of truth from the spirit of falsehood. 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது. + மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-17, 23-25

நற்செய்தி வாசகம் 

விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது. 

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-17, 23-25 
அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். 

இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப் பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.'' 

அதுமுதல் இயேசு, மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' எனப் பறைசாற்றத் தொடங்கினார். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார். ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பதிலுரைப் பாடல் திபா 2: 7-8. 10-11 பல்லவி: நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்

பதிலுரைப் பாடல் 

திபா 2: 7-8. 10-11 

பல்லவி: நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன். 
7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்;
`நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்;
பூவுலகை அதன் கடையெல்லை வரை உமக்கு உடைமையாக்குவேன். -பல்லவி 

10 ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;
பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.
11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்;
நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள். -பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

04/01/2021, திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள் முதல் வாசகம் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22 - 4: 6

🌿04/01/2021, திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள் 

முதல் வாசகம் 

தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள். 

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22 - 4: 6 
அன்பார்ந்தவர்களே, கடவுளிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம். 

அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்; ஏனெனில் போலி இறைவாக்கினர் பலர் உலகெங்கும் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எது என அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க் கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல். இந்த எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இதோ! இப்போதே அவன் உலகில் இருக்கிறான். 

பிள்ளைகளே, நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள். நீங்கள் அந்தப் போலி இறைவாக்கினர்களை வென்று விட்டீர்கள்; உங்களுள் இருப்பவர் உலகில் இருக்கும் அந்த எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவர். அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள். எனவேதான் உலகு சார்ந்தவற்றையே பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது. ஆனால் நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; கடவுளை அறிந்துகொண்டோர் நமக்குச் செவி சாய்க்கின்றனர். கடவுளைச் சாராதோர் நமக்குச் செவிசாய்ப்பதில்லை. இதிலிருந்து, உண்மையான தூண்டுதல் எது, பொய்யான தூண்டுதல் எது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

சனி, 2 ஜனவரி, 2021

GOSPEL* We have come to worship the king.👑 A Reading from the Holy Gospel according to Matthew 2:1-12

*📖GOSPEL* 

We have come to worship the king.👑 

A Reading from the Holy Gospel according to Matthew 2:1-12 
After Jesus had been born at Bethlehem in Judaea during the reign of King Herod, suddenly some wise men came to Jerusalem from the east asking, 'Where is the infant king of the Jews? We saw his star as it rose and have come to do him homage.' When King Herod heard this he was perturbed, and so was the whole of Jerusalem. He called together all the chief priests and the scribes of the people, and enquired of them where the Christ was to be born. They told him, 'At Bethlehem in Judaea, for this is what the prophet wrote: And you, Bethlehem, in the land of Judah, you are by no means the least among the leaders of Judah, for from you will come a leader who will shepherd my people Israel.'
Then Herod summoned the wise men to see him privately. He asked them the exact date on which the star had appeared and sent them on to Bethlehem with the words, 'Go and find out all about the child, and when you have found him, let me know, so that I too may go and do him homage.'  Having listened to what the king had to say, they set out. And suddenly the star they had seen rising went forward and halted over the place where the child was. The sight of the star filled them with delight, and going into the house they saw the child with his mother Mary, and falling to their knees they did him homage. Then, opening their treasures, they offered him gifts of gold and frankincense and myrrh. But they were given a warning in a dream not to go back to Herod, and returned to their own country by a different way. 

*The Gospel of the Lord* 

I believe in God, /.... 

____________