இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 27 : முதல் வாசகம்உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19

பிப்ரவரி 27  :  முதல் வாசகம்

உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19
மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.

ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.

நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

27 February 2021, Saturday 📖GOSPEL Be Perfect As Your Heavenly Father Is Perfect A Reading From The Holy Gospel According To Matthew (5, 43-48)

27 February 2021, Saturday 

📖GOSPEL 

Be Perfect As Your Heavenly Father Is Perfect 

A Reading From The Holy Gospel According To Matthew (5, 43-48) 
At that time, Jesus said to his disciples: “You have heard that it has been said: You shall love your neighbor and you will hate your enemy. Well ! I say to you: Love your enemies, and pray for those who persecute you, that you may truly be the children of your Father who is in heaven; for he causes his sun to rise on the evil and on the good; he sends rain on the just and on the unjust. Indeed, if you love those who love you, what reward do you deserve? Do not the tax collectors themselves do the same? And if you only greet your brothers, what are you doing that is extraordinary? Do the pagans themselves not do the same? You therefore will be perfect as your Heavenly Father is perfect. " 

The Gospel of the Lord 

I believe in God, /....
_______________

27 February 2021, Saturday RESPONSORIAL Respons: Happy are those who walk according to the law of the Lord! Psalm 118 (119)

27 February 2021, Saturday 

RESPONSORIAL 

Respons: Happy are those who walk according to the law of the Lord! 

Psalm 118 (119) 
Blessed are those who are blameless in their ways,
who walk according to the law of the Lord!
Happy are those who keep his demands,
they seek him wholeheartedly! R 

You promulgate precepts
to be observed entirely.
May my ways be established
to keep your commandments! R 

With a
righteous heart, I will be able to give you thanks, instructed in your righteous decisions.
Your commandments, I
keep them : do not forsake me entirely. R 

___ 

🌿Gospel Acclamation 

This is the right time! Today is Redemption Day! 

_____________

27 February 2021, Saturday FIRST READING "You will be a people consecrated to the Lord your God" Reading from the book of Deuteronomy (26, 16-19)

27 February 2021, Saturday 

FIRST READING 

"You will be a people consecrated to the Lord your God" 

Reading from the book of Deuteronomy (26, 16-19) 
Moses said to the people of Israel: “Today the Lord your God commands you to put into practice these decrees and ordinances. You will make sure to practice them with all your heart and with all your soul. Today you have obtained from the Lord this declaration: he will be your God; you, you will follow his ways, you will keep his decrees, his commandments and his ordinances, you will listen to his voice. Today the Lord has obtained from you this declaration: you will be his people, his particular domain, as he told you, you will have to keep all his commandments. He will make you exceed in prestige, fame and glory all the nations that he has made, and you will be a people consecrated to the Lord your God, as he has said. " 

The Word of the Lord.
__________

வியாழன், 25 பிப்ரவரி, 2021

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி நற்செய்தி வாசகம் நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ✠மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி 

நற்செய்தி வாசகம் 

நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26 
அக்காலத்தில் 

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்: “கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்” என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். 

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி பதிலுரைப் பாடல் திபா 130: 1-2. 3-4. 5-6ac. 7-8 (பல்லவி: 3)

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி 

பதிலுரைப் பாடல் 
திபா 130: 1-2. 3-4. 5-6ac. 7-8 (பல்லவி: 3) 

பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 
1.ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 

2.ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். - பல்லவி 

3.ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 

4.நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். - பல்லவி 

5.ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 

6ac.விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. - பல்லவி 

7.இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 

8.எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! - பல்லவி 

நற்செய்திக்கு முன் வசனம் 

எசே 18: 31 

எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். 

____

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி முதல் வாசகம் தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி 

முதல் வாசகம் 

தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? 

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28 
ஆண்டவர் கூறுவது: 

தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார். அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்பட மாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர். 

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத்தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானது எதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும் செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர். ஆயினும், ‘தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ நேர்மையற்றவை! 

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக்கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

____

February 26th : Gospel Anyone who is angry with his brother will answer for itA Reading from the Holy Gospel according to St.Matthew 5:20-26

February 26th :  Gospel 

Anyone who is angry with his brother will answer for it

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:20-26 
Jesus said to his disciples: ‘If your virtue goes no deeper than that of the scribes and Pharisees, you will never get into the kingdom of heaven.
  ‘You have learnt how it was said to our ancestors: You must not kill; and if anyone does kill he must answer for it before the court. But I say this to you: anyone who is angry with his brother will answer for it before the court; if a man calls his brother “Fool” he will answer for it before the Sanhedrin; and if a man calls him “Renegade” he will answer for it in hell fire. So then, if you are bringing your offering to the altar and there remember that your brother has something against you, leave your offering there before the altar, go and be reconciled with your brother first, and then come back and present your offering. Come to terms with your opponent in good time while you are still on the way to the court with him, or he may hand you over to the judge and the judge to the officer, and you will be thrown into prison. I tell you solemnly, you will not get out till you have paid the last penny.’

The Gospel of the Lord.

February 26th : Responsorial Psalm Psalm 129(130) If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

February 26th :  Responsorial Psalm 

Psalm 129(130) 

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

Out of the depths I cry to you, O Lord,
  Lord, hear my voice!
O let your ears be attentive
  to the voice of my pleading.
If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

If you, O Lord, should mark our guilt,
  Lord, who would survive?
But with you is found forgiveness:
  for this we revere you.

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

My soul is waiting for the Lord.
  I count on his word.
My soul is longing for the Lord
  more than watchman for daybreak.
(Let the watchman count on daybreak
  and Israel on the Lord.)

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

Because with the Lord there is mercy
  and fullness of redemption,
Israel indeed he will redeem
  from all its iniquity.

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

Gospel Acclamation cf.Amos5:14

Praise to you, O Christ, king of eternal glory!
Seek good and not evil so that you may live,
and that the Lord God of hosts may really be with you.
Praise to you, O Christ, king of eternal glory!

February 26th : First ReadingI prefer to see the wicked man renounce his wickedness and liveA Reading from the Book of Ezekiel 18:21-28 .

February 26th : First Reading

I prefer to see the wicked man renounce his wickedness and live

A Reading from the Book of Ezekiel 18:21-28 .
Thus says the Lord:
  ‘If the wicked man renounces all the sins he has committed, respects my laws and is law-abiding and honest, he will certainly live; he will not die. All the sins he committed will be forgotten from then on; he shall live because of the integrity he has practised. What! Am I likely to take pleasure in the death of a wicked man – it is the Lord who speaks – and not prefer to see him renounce his wickedness and live?
  ‘But if the upright man renounces his integrity, commits sin, copies the wicked man and practises every kind of filth, is he to live? All the integrity he has practised shall be forgotten from then on; but this is because he himself has broken faith and committed sin, and for this he shall die. But you object, “What the Lord does is unjust.” Listen, you House of Israel: is what I do unjust? Is it not what you do that is unjust? When the upright man renounces his integrity to commit sin and dies because of this, he dies because of the evil that he himself has committed. When the sinner renounces sin to become law-abiding and honest, he deserves to live. He has chosen to renounce all his previous sins; he shall certainly live; he shall not die.’

The Word of the Lord.