இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

October 2nd : GospelAnyone who welcomes a little child in my name welcomes me.A Reading from the Holy Gospel according to St.Matthew 18:1-5,10

October 2nd :  Gospel

Anyone who welcomes a little child in my name welcomes me.

A Reading from the Holy Gospel according to St.Matthew 18:1-5,10 
The disciples came to Jesus and said, ‘Who is the greatest in the kingdom of heaven?’ So he called a little child to him and set the child in front of them. Then he said, ‘I tell you solemnly, unless you change and become like little children you will never enter the kingdom of heaven. And so, the one who makes himself as little as this little child is the greatest in the kingdom of heaven.
  ‘Anyone who welcomes a little child like this in my name welcomes me. See that you never despise any of these little ones, for I tell you that their angels in heaven are continually in the presence of my Father in heaven.’

The Word of the Lord.

October 2nd : Responsorial PsalmPsalm 90(91):1-6,10-11 The Lord has commanded his angels to keep you in all your ways.

October 2nd : Responsorial Psalm

Psalm 90(91):1-6,10-11 

The Lord has commanded his angels to keep you in all your ways.

He who dwells in the shelter of the Most High
  and abides in the shade of the Almighty
says to the Lord: ‘My refuge,
  my stronghold, my God in whom I trust!’
The Lord has commanded his angels to keep you in all your ways.

It is he who will free you from the snare
  of the fowler who seeks to destroy you;
he will conceal you with his pinions
  and under his wings you will find refuge.

The Lord has commanded his angels to keep you in all your ways.

You will not fear the terror of the night
  nor the arrow that flies by day,
nor the plague that prowls in the darkness
  nor the scourge that lays waste at noon.

The Lord has commanded his angels to keep you in all your ways.

Upon you no evil shall fall,
  no plague approach where you dwell.
For you has he commanded his angels,
  to keep you in all your ways.

The Lord has commanded his angels to keep you in all your ways.

Gospel Acclamation Ps102:21

Alleluia, alleluia!

Give thanks to the Lord, all his hosts,
his servants who do his will.
Alleluia!

October 2nd : First Reading I myself will send an angel before you.A Reading from the Book of Exodus 23: 20-23.

October 2nd :  First Reading 

I myself will send an angel before you.

A Reading from the Book of  Exodus 23: 20-23. 
The Lord says this: ‘I myself will send an angel before you to guard you as you go and to bring you to the place that I have prepared. Give him reverence and listen to all that he says. Offer him no defiance; he would not pardon such a fault, for my name is in him. If you listen carefully to his voice and do all that I say, I shall be enemy to your enemies, foe to your foes. My angel will go before you.’

The Word of the Lord.

வியாழன், 30 செப்டம்பர், 2021

அக்டோபர் 1 : நற்செய்தி வாசகம்என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்டோபர் 1 :  நற்செய்தி வாசகம்

என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16
அக்காலத்தில்

இயேசு கூறியது: “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்.

உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

அக்டோபர் 1 : பதிலுரைப் பாடல்திபா 79: 1-2. 3-5. 8. 9 (பல்லவி: 9bc)பல்லவி: உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு கடவுளே, எங்களை விடுவியும்.

அக்டோபர் 1 : பதிலுரைப் பாடல்

திபா 79: 1-2. 3-5. 8. 9 (பல்லவி: 9bc)

பல்லவி: உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு கடவுளே, எங்களை விடுவியும்.
1
கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர். எருசலேமைப் பாழடையச் செய்தனர்.
2
உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள். - பல்லவி

3
அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.
4
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம்.
5
ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? - பல்லவி

8
எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். - பல்லவி

9
எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! 

இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

அக்டோபர் 1 : முதல் வாசகம்ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை.இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 15-22

அக்டோபர் 1 :  முதல் வாசகம்

ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 15-22
நீங்கள் சொல்ல வேண்டியது: நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது. ஆனால் நமக்கும், யூதாவின் மக்கள், எருசலேமின் குடிகள், நம் அரசர்கள், தலைவர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மூதாதையர்கள் ஆகிய அனைவருக்கும் இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது. ஏனெனில், ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த நாளிலிருந்து இன்றுவரை நாம் அவருக்குப் பணிந்து நடக்கவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்ப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்துவிட்டோம்.

ஆகவேதான், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை நமக்குக் கொடுக்கும் பொருட்டு, எகிப்து நாட்டிலிருந்து நம் மூதாதையரை ஆண்டவர் அழைத்து வந்தபொழுது, தம் அடியாரான மோசே வாயிலாக அவர் அறிவித்திருந்த கேடுகளும் சாபங்களும் இன்றுவரை நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன. மேலும், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மிடம் அனுப்பி வைத்த இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய சொற்கள் எவற்றுக்கும் நாம் செவிசாய்க்கவில்லை. மாறாக, நம்மில் ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின் போக்கில் நடந்தோம்; வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 1st : Gospel Unless you become like little children you will not enter the kingdom of heavenA Reading from the Holy Gospel according to St. Matthew 18: 1-5

October 1st : Gospel 

Unless you become like little children you will not enter the kingdom of heaven

A Reading from the Holy Gospel according to St. Matthew 18: 1-5 
The disciples came to Jesus and said, ‘Who is the greatest in the kingdom of heaven?’ So he called a little child to him and set the child in front of them. Then he said, ‘I tell you solemnly, unless you change and become like little children you will never enter the kingdom of heaven. And so, the one who makes himself as little as this little child is the greatest in the kingdom of heaven.
  ‘Anyone who welcomes a little child like this in my name welcomes me.’

The Word of the Lord.

October 1st : Responsorial Psalm Psalm 130(131) Keep my soul in peace before you, O Lord.

October 1st : Responsorial Psalm 

Psalm 130(131) 

Keep my soul in peace before you, O Lord.
O Lord, my heart is not proud
  nor haughty my eyes.
I have not gone after things too great
  nor marvels beyond me.

Keep my soul in peace before you, O Lord.

Truly I have set my soul
  in silence and peace.
A weaned child on its mother’s breast,
  even so is my soul.

Keep my soul in peace before you, O Lord.

O Israel, hope in the Lord
  both now and forever.

Keep my soul in peace before you, O Lord.

Gospel Acclamation Mt11:25

Alleluia, alleluia!
Blessed are you, Father,
Lord of heaven and earth,
for revealing the mysteries of the kingdom
to mere children.
Alleluia!

October 1st : First Reading Towards Jerusalem I send flowing peace, like a riverA Reading from the Book of Isaiah 66: 10-14

October 1st : First Reading 

Towards Jerusalem I send flowing peace, like a river

A Reading from the Book of Isaiah 66: 10-14 
Rejoice, Jerusalem,
be glad for her, all you who love her!
Rejoice, rejoice for her,
all you who mourned her!
That you may be suckled, filled,
from her consoling breast,
that you may savour with delight
her glorious breasts.
For thus says the Lord:
Now towards her I send flowing
peace, like a river,
and like a stream in spate
the glory of the nations.
At her breast will her nurslings be carried
and fondled in her lap.
Like a son comforted by his mother
will I comfort you.
And by Jerusalem you will be comforted.
At the sight your heart will rejoice,
and your bones flourish like the grass.
To his servants the Lord will reveal his hand.

The Word of the Lord.

புதன், 29 செப்டம்பர், 2021

செப்டம்பர் 30 : நற்செய்தி வாசகம்நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

செப்டம்பர் 30 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12
அக்காலத்தில்

இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள்.

அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.